செங்குந்த முதலியார் நாட்டாமை சபை

0

நமது செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாறு பாரம்பரியத்தின்படி


நமது சமுதாயத்தின் தலைமை தலைவர்: மகா நாட்டின் ஆண்டவர் (காஞ்சிபுரம் மகா நாட்டு நாட்டாண்மைகாரர்)

இவருக்கு கீழே 72 நாடுகள்(அதாவது நான்கு திசை நாடுகள் உள்ளன, ஒவ்வொரு திசை நாட்டிலும் 17 கிளை நாடுகள், ஒவ்வொரு கிளை நாடுகளின் கீழ் 10 முதல் 50 கிராமங்கள்)


கிளை நாட்டு/கிராமங்கள் நிர்வாகத்தில் கீழே உள்ள பதவிகள்

தலைவர் என்பவர் நாட்டான்மைக்காரர் அல்லது அம்பலம்/நாட்டார் என்று அழைக்கப்படுவார்

செயலாளர் என்பவர் பட்டக்காரர் என்று அழைக்கப்படுவார்

பொருளாளர் என்பவர் பெருதனக்காரர் என்று அழைக்கப்படுவார்

செயற்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் காரியக்காரர்கள் அல்லது கிராமணிஎன்று அழைக்கப்படுவார்

பொதுவாக ஒவ்வொரு கிளை நாட்டிலும் ஒரு நாட்டாண்மைகாரர், ஒரு பட்டக்காரர் ஒரு பெருதனக்காரர் மற்றும் 9 காரியக்காரர்கள் மற்றும் ஒரு சங்கோதி இருக்க வேண்டும்.

சில நாடுகளின் கீழ் இருக்கும் கிராமங்களை பொறுத்தவரை ஒரு கிராமத்தில் ஒரு நாட்டாண்மைக்காரர் மற்றும் ஒன்பது காரியக்காரர்கள் மற்றும் ஒரு சங்கோதி இருக்க வேண்டும்.

நமது சமுதாயத்தில் இந்த நாட்டாமை ஆட்சி முறையை உருவான வரலாறு கீழே காணவும்

தமிழகத்தில் சேர, சோழ பாண்டியமன்னர் களிடம் படைவீரர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் வாழ்ந்த நம் செங்குந்த முதலியார் முன்னோர்கள் பின்னர் நெசவுத் தொழிலை மேற்கொண்டனர். விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் செங்குந்தர்கள் தங்கள் ஒற்றுமை குறையாவண்ணம் அவர்கள் குடியேறிய எழுபத்திரண்டு நாடு களையும் நான்கு திசை நாடுகளாக வகுத்து அவற்றின் நடுவில் அமைந்த காஞ்சிபுரத்தைத் தலைமை நாடாகக் கொண்டு கிராமம், கிளைநாடு, திசைநாடு, காஞ்சிபுரம் மகாநாடு என்று அமைத்துக்கொண்டு நாகரீகத்துடனும், ஈடுப்பாட்டுடனும் கல்வி, இறையன்பு முதலிய வற்றில் சிறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

இந்த முறை உருவான முக்கிய காரணம் நமக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை பிற ஆட்சியாளர்களும் சென்று தீர்வு காண்பதற்கு பதிலாக நம் தலைவரே நமக்கு தீர்ப்பு சொல்வது மேலும் பிறரால் நமக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த அமைப்பின் மூலம் மன்னர்களிடம் முறையிடுவதற்கு மேலும் நம் சமுதாயம் சார்ந்த கல்வி ஆன்மீகம் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இந்த நாட்டாண்மை அமைப்பு விஜயநகர பேரரசு அதாவது 600 ஆண்டுக்கு முன்பு காலத்தில் நம் சமுதாய முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.


உலகில் மனிதன் ஒற்றுமையாக வாழ நீதி நெறியும் முறையான தென்று அமைய வேண்டுவது இன்றியமையாத ஒன்றாகும். செங்குந்தரின் மேம்பாடுகளுக்கு அவர்களின் நீதி முறை செம்மையான தொன்றாக இருந்ததும் ஒரு காரணமாகும்.

செங்குந்தர்களின் குலத்தொழில் ஆதிகாலந் தொட்டு நெசவுத் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த செங்குந்தர் களுக்கு அவர்களின் பொது இடமாக அமைந்தது பாவடியாகும். பாவடி என்பது பாவு செய்யும் பரவலான இடம். தினசரி காலை பாவு செய்ய க்ஷை இடம் பயன்படும். பிறகு ஒவ்வொரு பொது நிகழ்ச்சிகளையும் அங்கு செய்து வருவர். பாவடியே செங்குந்தரின் வாழ்க்கைக்கு உயிர்நாடி. அத்தகைய பாவடியில் அமர்ந்து பொது மக்கள் அனைவரும் சேர்ந்து கலந்து பேசி முறையான ஒரு முடிவையே ஒவ்வொரு சிறு தகராறு களிலும் பெருவழக்குகளிலும் முடிவு செய்வர். செங்குந்தர்கள் தங்களுக் குள்ளேயே அவ்வாறான வழக்குகளைத்

தீர்த்துக் கொள்வதற்கு ஒரு நெறி முறையையே வகுத்திருந்தனர். தற் போதுள்ளது போல் அவர்களும் நீதியை முறையாகக் கையாண்டனர். அத்தகைய நீதிமுறையைக் காண்போம்.


செங்குந்தர் நீதிமுறைக்குத் தக்க படியும் வாழ்க்கை முறைக்குத் தக்க படியும் ஊர், மேலூர் கிராமம், கீலூர் கிராமம், நாடு  கிளை நாடு என்று ஐந்து பிரிவாகக் கொண்டிருந்தனர்.

அது தாங்கள் வாழும் கிராம ஊரில் சொல்லப்பட்ட தீர்ப்பில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் உங்கள் கிராமத்திற்கு கிழக்கே உள்ள கீழூர் செங்குந்தர் கிராமம் நாட்டாமையிடம் சென்று தீர்ப்பு பெறலாம் அதுவும் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் கிளை நாடு தலைமை நாட்டாமை சபைக்கு சென்று முறையிடலாம் அதிலும் நமக்கு உடன்பாடு எட்டா விட்டால் கடைசி ஆக காஞ்சிபுரம் மாநாடு ஆண்டவர் நாட்டாமை சென்று முறையிட வேண்டும் (இது தற்போது உள்ள டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு )போன்ற ஆகும்.


ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்காரியங்களைக் கவனிக்கவும் நீதி செலுத்து வதற்கும் குடிமகன், நாட்டாண்மைக்காரர்,பெருதனக்காரர், காரியக்காரர் என்போர் உள்ளர்.

ஊர் நியாயத்தில் கலந்துக் கொண்டு தன் கருத்தைத் தெரிவிக்க ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் உரிமையுண்டு.

குடிமக்களில் திருமணமானவர்கள் காரியக்காரராகத் தேர்ந்தெடுக்கப் படத் தக்க தகுதி படைத்தவர்கள் குழந்தைகள் பெற்று பொறுப்புள்ளவர்கள் பெருதனக்காரர்களாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு தக்க தகுதி படைத்த வர்கள். ஊருக்குத் தக்கபடி ஒரு ஆண்டுக்கு ஒரு முறையோ இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ ஊர்ப்பொதுக் கூட்டத்தில் பெரும் பாலானவர்கள் கூடி நாட்டாண் மைக்காரர்,பெருதனக்காரர், காரியக்காரர்களையும் ஆகியவர்களையும் தேர்ந் தெடுத்து வெற்றிலை பாக்கு கொடுத்து நியமிப்பார்கள், அவ்வாரக நியமிக்கப் பட்ட காரியக்காரர்களும் பெரியதனக் காரர்களும் நாட்டாண்மைக்காரர்களும் அடங்கிய ஊர்ப் பொது மக்களின் கூட்டத்தில் ஒருவர் வழக்குமுறை யிட்டால், ஊராரால் நியமிக்கப்பட்ட சங்கோதி என்றழைக்கப்படும் பொது ஊழியர் எதிர் தரப்பார்.- பிரதிவாதி யிடம் சென்று இன்னார் அவர் பேரில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்று அறிவித்து மேலும் குறிப்பிட்ட காலத் தில் அந்த வழக்கு குறித்து நியாயம் பேரி முடிவு செய்ய ஊர்க் கூட்டம் கூட இருப்பது பற்றியும் அறிவித்து ஊரிலும் பாவடிகளிலும் கூவி பறை சாற்றி விடுவார். குறித்த தேதியில் ஊர்க் கூட்டம் கூடிய பின் அக் கூட்டத்தில் பெரியதனக்காரர்கள், காரியக்காரர்கள், குடிமக்கள் சங்கோதி ஆகியவர்கள் முன்னிலையில் வாதி யும் பிரதிவாதியும் அவரவர் வழக்கு விவரத்தை முறையிடலாம். பின்னர் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்யப் பட்டுத் தீர்ப்பு கூறப்படும். தீர்ப்பில் வாதி பிரதிவாதிகள் பேரில் கூறப்படும் அபராதமோ அல்லது தண்டனையோ கடுமையானதாக தென்பட்டால் அவர் தன் மார் பொது மக்கள் முன்பு டி தண்டனை என்னால் தாங்க முடியாது. சற்று குறையுங்கள் என்று மிகவும் வணக்கத்துடன் கேட்டுக் கொண்டால் அவர்கள் மீண்டும் கலந்து ஆலோசித்து தண்டனையையோ, தண்டணை  காலத்தை குறைத்து மறுதீர்ப்பு வழங்வதும் உண்டு. அப்படி  குறைக்கும்படி கொள்ளுவதற்குச் சபையைக் கொள்ளுதல் என்று பெயர்.

அந்தப்படி கூறப்படும் தீர் பேரில் அப்பீல் செய்துகொள்ள தீர் பினால் பாதிக்கப் பட்டவருக்கு உரிமைம் யுண்டு. அவர் அப்பீல் செய்துக்கொள் ரும் உரிமையை அப்போதே மிகவும் சொன்ன அப்போதே) தெரிவித்து கொள்ளுதல் மேவுதல் என்றழைக்க படும்.


சிறிது சிக்கலான வழக்காக இரும் பின் மேலூர்க்காரர்களையும் முதை படி அழைத்து மேலூர்காரியக்காரர் பெரியதனக்காரர்கள், அனுபவ மிக்க குடிமக்கள் ஆகவர்களையும் வைத்துக் கொண்டு நியாயம் பேசி முடி வெடு தலும் (தீர்ப்பு கூறுதல்) உண்டு.


க்ஷை தீர்ப்பின் பேரில் குறிப்பிட்ட காலாவதிக்குள் அந்த ஊர் எந்த நாட்டின்கீழ் உள்ளதோ அந்த நாட்டில் சங்கோதி, காரியக்காரர். பெரிய தன காரர், நாட்டாண்மைக்காரர் ஆகிய வர்களிடம் முறையிட்டு அப்பீல் விசாரிக்கச் செய்ய வேண்டியது பிறகு நாட்டிலிருந்து அப்பீல் பிரதி வாதிக்கும் தீர்ப்பு கூறிய ஊருக்கும் சங்கோதி மூலம் அறிவிப்பு கொடுக்க படும். அதன் பிறகு சம்மந்தப் பட்ட ஊர். மேலூர் முதலியவைகளின் பிரதிநிதிகளையும், மற்றும் நாட்டின் கீழ் உள்ள ஊர் பிரதிநிதி களையும் அழைத்து குறித்த தினத்தில் நாடு கூடும். அந்த அப்பீலுக்குச் சம்மந்தப் பட்ட தீர்ப்பின் நாட்டில்

வழக்கு பற்றி ஆதிமுதல் கேட்கப்பட்டு விசாரித்து நாட்டில் தீர்ப்பு கூறப்படும்.

நாட்டின் தீர்ப்பில் ஏற்பட்ட முடிவு படி அந்த நாட்டின் கீழுள்ள அனைத்து கிராமங்களிலும் அதே போன்ற வழக்கு களில் அதே போன்ற அமுலுக்கு வரும். முடிவு

நாட்டின் தீர்ப்பை முடிவானதாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மகா நாட்டுக்கு அப்பில் செய்ய பாதிக்கப் பட்டவருக்கும், நாட்டுத் தீர்ப்பு ஊர்த் தீர்ப்பை மாற்றியிருந்தால் முதல் தீர்ப்பு வழங்கிய ஊருக்கும் உரிமை யுண்டு.

நாட்டில் நியாயம் பேசுவதானால் சிக்கலான வழக்குகள் மேல் நாடுகளையும். மற்ற சக நாடுகளையும் கலந்தோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளையும் அழைத்தோ நியாயம் பேசி முடிவு செய்து தீர்ப்பு கூறுவதும் உண்டு.

நாட்டின் தீர்ப்பின் பேரில் அப்பீல் செய்து கொள்வதென்றால் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மேவுதல் கேட்டுப்பெற வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் மகாநாட்டுக்கு அப்பீல் செய்து விடவேண்டும்.

மகாநாட்டுக்கு ஒவ்வொரு ஊரிலிருத்தும் நாட்டிலிருந்து பிரதிநிதிகள் உண்டு. மகாநாட்டுக்கும் நாட்டாண்மைக்காரர்கள், பெரியதனக்காரர்கள், காரியக்காரர்கள் உண்டு.

மகாநாட்டில் நியாயம் கொடுத்து விட்டால் இரு பார்ட்டிகளுக்கும் தீர்ப்புக்குச் சம்மந்தப்பட்ட ஊருக்கும். நாட்டுக்கும் முறைப்படி தெரிவித்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் மற்ற ஊர் பிரதிநிதிகளும் நாட்டுப்பிரதிநிதிகளும் அடங்கிய மகாநாட்டுக் கூட்டத்தில் மீண்டும் ஓடி வழக்கும், ஊர்த்தீர்ப்பும் நாட்டுத் தீர்ப்பும் விவாதிக்கப் பட்டு ஆராயப்பட்டு தீர்ப்பளிப்பார்கள். அத் தகைய மகா நாட்டுக் கூட்டத்திற்கு மற்ற மகா நாட்டுப் பிரதிநிதிகளும் அழைக்கப் படலாம்.

மகா நாட்டின் தீர்ப்புகளும், அனு சரிக்கப்பட்ட முறைகளும் அதன் கீழுள்ள நாடுகள். ஊர்கள் ஆகிய அனைத்திலும் பின்பற்றப்படும்.

இவ்வாராக செங்குந்தர்கள் தங்களுக்குள் ஏற்பட்டு வந்த சிறு பூசல் களையும் தகாறுகளையும் மற்றெல்லா வித சச்சாவுகளையும் தீர்த்து வந்திருக்கின்றனர் என்பது இப்போதும் சில ஊர்களிலும் நாடுகளிலும் மகாநாடு களிலும் கையாளும்முறைகளிலிருந்தும் தெரிய வருகிறது. மேற்கண்ட முறை களை நாம் பின்பற்றினால் நீதி மன்றங் களுக்குச் சென்று பல வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய தில்லை என்பதும்

 நம்முள் ஒற்றுமை வளரும் என்பதும் திண்ணம்.

பொதுவாக  நாட்டாண்மை, பட்டக்காரர் பெருதனக்காரர் போன்ற பதவிகள் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரும் மற்றும் காரியக்காரர்கள் பதவி மட்டும் சுழற்சி முறையில் அனைத்து குடும்பத்தை சேர்ந்த செங்குந்தர்களுக்கும் வரும்.

சரியாக செயல்படாத மற்றும் மக்களிடம் ஒற்றுமை குறைக்கும் பெருதனக்காரர், காரியக்காரர் மகாநாடு முறையிட்டு குடிமக்கள் மாற்றியும் உள்ளனர்.


72 செங்குந்தர் நாடுகளின் பட்டியல்இலக்ஷ்ணக் குறவஞ்சி இன்றைய இலக்கியத்தில் செய்யுள் வடிவில் இருந்ததை  decode செய்யப்பட்ட பெயர்கள் கீழே

செங்குந்தர் தலைநகர்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில்

முதலாவது கிழக்கே சிவபுர நாட்டின் கிளை நாடுகள் 17

1 மேல் படப்பை கீழ்படப்பை. ஆத்தஞ்சேரி

2. மானாம்பதி, செம்பாக்கம், அகரம், மூணத்தொன்று

3. முன்னூர், பரமேச்சுர மங்கலம், மதுராந்தகம்

4. திண்டிவனம்

5. அக்கரைப்பத்து, மைலம்

6. திருவக்கரை, புதுச்சேரி, ஒழுகரை, கதிர்காமம்

7. திரிபுவனம், நல்லாத்தூர்

8. திருவதிகை, பாலூர்

9 இடையாற்றூர், திருவெண்ணெய்நல்லூர்

10 பனமலை, அனந்தபுரம்

11 வழுதலைப்பட்டு

12 மாப்பறை,ஆரூர்

13 பட்டினம், கருங்குழி

14 காட்டு மன்னார் கோயில்

15 பாளையம்

16 குப்பாக்கம். திருக்கண்டேச் சரம்

17 ஜம்பை, திருவரங்கம்



2ஆவது தெற்கே தொந்திபுர நாட்டின் கிளை நாடுகள் 17

1 முருகமங்கலம்

2 திருவாமாத்தூர்

3 திருவண்ணாமலை

4 வரத்தூர், செங்குறிச்சி

5 கச்சித்திடல்

6 விருத்தாசலம்

7 திட்டைக்குடி

8 திருமலைப்பாடி

9 திருக்கோவல்

10 திருநாகேச்சுரம் கும்பகோணம்

11 திருச்செம்பொன்பள்ளி

12 கோயில், சீர்காழி

13 மாப்பிள்ளைகுப்பம்

14 திருமருகல்(இதன் கீழே 18 கிராமங்கள் உள்ளன)

15 தேவூர், காட்டூர்

16 நல்லாச்சேரி, போலகம்

17 இராமேச்சுரம், குமரி


3ஆவது மேற்கே விரிஞ்சிபுர நாட்டின் கிளை நாடுகள் 17

1 ஆமூர், குடியேற்றம்

2 வாணியம்பாடி

3 கொறட்டை

4 தருமபுரி

5 பவானி

6 பூவேழ்நாடு (தாரமங்கலம்)

7 எழுகரை நாடு (திருச்செங்கோடு)

8 புகழாரை

9 பூரத்திரை

10 சேலம்

11 வையாபுரி நாடு,பழநி

12 அவிநாசி

13 நஞ்சுண்ட குடி

14 காவல்பாளையம்

15 கரூர், நத்தம்

16 கருகூர் காங்கேயம் சிவன்மலை, சென்னிமலை(தட்டயனாடு)

17 நாமக்கல்


4ஆவது வடக்கே சோழசிங்கபுர நாட்டின்(சோளிங்கர் எச்சான் கூட்டம் பங்காளிகள் பரம்பரை நாட்டாமை) கிளை நாடுகள் 17

1 திருத்தணி

2 கெளிநாடு

3 நெறிநாடு

4 திருவடி நாடு

5 திருமேழிசை

6 கொந்தம்பாக்கம்

7 திருக்காளத்தி, காளஹஸ்தி

8 தொண்டைமாநாடு

9 வரை நாடு

10 வேங்கடகிரி

11 திருப்பதி திருவேங்கடம்

12 ஜெகந்நாதம்

13 சீட்டம்பள்ளி

14 செம்புரம்

15 வரதபுரி

16 சந்திரகிரி

17 காசி, கயா, அயோத்தி, இமய நாடு




இலக்ஷ்ணக் குறவஞ்சி என்னும் தமிழ் நூலில் எழுதித்தரண்டு செங்குந்தர் நாடுகளின் பெயர்கள் உள்ளன. அந்த கீழே காணவும்











Post a Comment

0Comments
Post a Comment (0)