செங்குந்தர் நவகண்டம் சாவான் கல் நாடுகள் செற்பம் மற்றும் கல்வெட்டு

0

 #சாவங்கோயில் என்ற பெயரில் 

👉செங்குந்தர் கைக்கோளர் சமூக மக்கள் வணங்கப்படும்_ நவகண்ட நடுகற்கள்.


வரலாற்று தேடலில் #சாவாங்கோயில் கோவில் என்ற பெயரில் மக்களால் வணங்கப்படும் #நடுக்கற்கள் இடம்:ராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி வட்டம் #திருமால் பேறு என்கிற 


திருமால்பூர் கிராமத்தில் ஐந்து நடுக்கற்க்கள். மற்றும் பள்ளுர் கிராமத்தில் ஒரு நவகண்ட சிற்பம். 


#திருமால்பூர் கிராமத்தில் ஒரே இடத்தில் நான்கு அரிகண்ட சிற்பங்களும் அதில் ஒரு நடுகல்லின் பின்புறம் தமிழ்எழுத்துக்களில் கல்வெட்டு வாசகம் இடம் பெற்றிருந்தது.மற்றொன்று  ஊரின் கிராம தேவதை அருள்மிகு #பொன்னியம்மன் ஆலயத்தின் வாயிலின் வலதுப்புறம் ஒரு அரிகண்ட சிற்பமும் காணமுடிந்தது.


#திருமால்பூர் அருகே உள்ள #பள்ளுர் என்ற கிராமத்தில் அருள்மிகு மந்திர காளியம்மன் ஆலயத்தின் எதிரே ஒரு #நவகண்ட சிற்பம் என ஒரே நாளில் ஆறு நடுக்கல் சிலைகளை இன்றைய வரலாற்று தேடலில் கண்டறிந்தேன். திருமால்பூரியில் உள்ள நடுகல்கோயிலில் தை மாதம்

பொங்கல் முடிந்த ஏழு நாட்களுக்கு பிறகு இக்கோயிலுக்கு நாள் குறித்து ஊர் மக்களால் மிகப்பெரிய #கும்பபடையல் போடப்படுகிறது அதில் ஆடு,கோழி கருவாட்டு குழம்பு முட்டை மற்றும் வடை ,கொழுக்கட்டைகள் போன்ற பெரும்பாலும் அசைவ வகைகளையே படையலிடுகின்றனர் இதற்குப் பின்னே உள்ள ஒரு நடுக்கலுக்கு மட்டும் மது வகைகள் மற்றும் சுருட்டு,பீடி  போன்ற போதைப் பொருட்களை படைக்கப்படுகிறனர்.இங்கு வழிபாடு செய்யும் செங்குந்த மரபினர்கள் இக் கோயிலில் படையில் போட்ட பின்புதான் அந்த ஆண்டு நெசவு பணியை தொடங்குகின்றனர். 


#சாவாங்கோயில் எனப்படும் நடுகல் கோவிலுக்கு கும்பப்படையல் இடாமல் நெசவுத் தொழிலை தொடங்கும் நபர்களிடமிருந்து ஊர் சார்பில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. 



இதுபோல் உங்கள் ஊரில் சாவான் கல் அல்லது நவகண்ட சிற்பம் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு தகவலை அனுப்பவும்


#சரி செங்குந்தர்கள் எனப்படும்  இந்த கைக்கோளர் களை பற்றி ஒரு சிறு வரலாற்றைப் பார்ப்போம்.செங்குந்தம் செம்மை+குந்தம். குந்தம் என்பது ஈட்டியை குறிக்கும் சொல்லாகும் செம்மையான ஈட்டியினை கையில் ஏந்தியவர்கள் என்று பெயர் சோழர் காலத்தில் பராந்தகச் சோழன், கரிகாலன் சோழன்,கண்டராதித்த சோழன் போன்ற மன்னர்களின் காலாட்படையில் கைக்கோளப்படை சிறந்து விளங்கியிருக்கிறது. இவர்களுக்கு சோழமன்னர்கள் பல விருதுகளையும்,பட்டங்களையும் வழங்கியுள்ளனர். இன்று இவர்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் தன்னிகரற்று திகழ்கின்றனர்.


இந்தத் தகவலை சேகரித்த குழு: #தொண்டைமண்டல வரலாற்று தடயங்கள்.


https://www.facebook.com/தொண்டை-மண்டல-வரலாற்று-தடயங்கள்-108632981455834/




இது போல் உங்கள் ஊரில் நம் சமூகம் வழிபடும் சாவான்கல்  நவகண்ட சிற்பங்கள் இருந்தால் அதன் போட்டோவை செங்குந்தர் வரலாறு மீட்புக் குழு எண்ணுக்கு அனுப்பவும்









திருமால்பூர் ஊர் வரலாற்று புத்தகத்தில் செங்குந்தர் நவகண்ட செய்தி







martial races of India புத்தகத்தில் செங்குந்தர் நல கண்ட சாபங்கள் சிற்பம் பற்றிய செய்தி

Post a Comment

0Comments
Post a Comment (0)