காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு செங்குந்த முதலியார் வாழும் ஊர்களை நாட்டாண்மை, பெருதனகாரர் மற்றும் காரியக்காரர் என பாவடி சபை மூலம் 72 கிளை நாடாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்செங்கோடு, சேலம், தாரமங்கலம் ஆகியவை கிளை நாடாக உள்ளது.
இருப்பினும் விஜயநகர காலமான பிற்காலத்தில் நிர்வாக வசதிக்காக எழுகரை நாடு என்னும் கூட்டமைப்பை ஏற்படுத்தப்பட்டது. இதில் செங்குந்த கைக்கோள முதலியார்கள் வாழும் சேலம் & நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
இந்த எழுகரை நாடு 7 எல்லைகளாக பிரிக்கப்பட்டு இதில் பழைமையான நகரமான திருச்செங்கோடு எழுகரை நாட்டின் 7 நாடுகளின் தலை நகராக இருந்து வருகிறது(தலைமை நாடு). சில பத்திரிக்கையில் திருச்செங்கோடு மகாநாடு என்று உள்ளது ஆனால் இது தவறு. மகாநாடு என்பது காஞ்சிபுரம் செங்குந்தர் நாட்டாமை சபை மட்டுமே
தலைமைநாடு - திருச்செங்கோடு
பூவேழ்நாடு - தாரமங்கலம்
சேலம் நாடு - சேலம்
பருத்திபள்ளி நாடு - மல்லசமுத்திரம்
இராசீபுரம் நாடு - பாச்சல்
ஏழூர் நாடு - R.85-கொமாரபாளையம்
அரைய நாடு - கபிலர்மலை
மேலே கூறப்பட்டுள்ள ஏழு நாடுகளாகிய ஒவ்வொரு நாட்டின் கீழ் 10 முதல் 20 சிறிய பாவடி வைத்துள்ள செங்குந்த முதலியார் கிராமங்கள் இருக்கும். நமக்குள் ஏற்படும் பிரச்சனைகள் சட்ட விதிகளுக்கு கிராம பாவடி பெருதனக்காரர் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் அந்தந்த நாட்டின் நாட்டாண்மையை தீர்ப்பை நாடி செல்வர் அதுவும், பிடிக்கவில்லை என்றால் எழுகரை நாடு தலைமை நாட்டாண்மை தீர்ப்பை நாடி செல்வர். இதிலும் திருப்தி இல்லை என்றால் காஞ்சிபுரம் மகாநாடு ஆண்டவர் நாட்டாண்மையிடம் சென்று முறையிட வேண்டும்.
இந்த செங்குந்த முதலியார் நாட்டாமை சபை என்பது செங்குந்த முதலியார் சமூகத்தின் வணிகத் தொழில் உதவிக்காகவும், கோவில் திருவிழா நடத்துவதற்காகவும் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தங்கள் சட்ட விதிகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்தி இருந்தது அந்த காலத்தில்.
தலைமை நாடு திருச்செங்கோடு என்று அழைக்கப்படும்.
திருக்கொடிமாடச்செங்குன்றூர் நகரமானது கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் சிறப்புமிக்கதும், திருஞான சம்பந்தர் 7ஆம் நூற்றாண்டு தேவாரப் பாடல், அருணகிரிநாதர், சங்க இலக்கியமான 2 ஆம் நூற்றாண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலமும், அம்மையும் அப்பனும் ஓர் உருகொண்டு திருமலைமேல் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரருக்கும், அசுரரை அழித்து அமரர்களை காத்த நம் செங்குந்தர் குல தெய்வமாம் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத செங்கோட்டுவேலவருக்கும், கருணைக் கடலாம் கார்முகிழ் வண்ணனாம் அருள்மிகு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஆதிகேசவப்பெருமாளுக்கும் கோவில் உள்ள ஊர்.
இந்த ஊரில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் சமூகம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகமாகும்.
இவ்வூர்களின் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பு தந்த பழம்பெரும் மக்கள் பிறந்த ஊர்கள் இவையாகும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள உரிமைகள் :
வருடம் தோறும் வைகாசி மாதம் 18ம் நாள் தொடங்கி வைகாசி மாதம் 31 ம் நாள் முடிய நடைபெறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவிற்கு வைகாசி 23, 24 வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறும். நமது எழுகரை நாட்டுச் செங்குந்த முதலியார்கள் மண்டபக்கட்டளைக்கும், செங்குந்தர்கள் திருப்பணி செய்த தங்க சப்பரம் வெள்ளி யானை வாகனத் திருவீதி உலாவிற்கும், அபிஷேக அலங்கார திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் உற்சவ அறக்கட்டளை நடைபெறும்.
6-ம் திருவிழா மண்டபக்கட்டளை நிகழ்ச்சிநிரல்
வைகாசி 23, இரவு 7.00 மணி அளவில் நாடழைத்தல், வைகாசி 24, பகல் 12.00 மணி அளவில் தொடங்கி நமது செங்குந்த முதலியார்கள் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.
வைகாசி மாதம் 24, மாலை 3.00 மணிக்கு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வெள்ளி யானை வாகனத்தின் மீது தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி நமது உறவின்முறையார்கள் புடைசூழ திருவீதி உலா வருதல் மாலை 4.00 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் திருமுலைப்பால் உற்சவமும், பட்டம் பரிவட்டம் கட்டும் அறக்கட்டளையும் நடைபெற்று, பட்டம் பரிவட்டம் கட்டப்பட்ட அனைத்து எழுகரை (ஏழு நாடு) மற்றும் அதன் மேலூர் கீழூர் கிராமங்களின் நாட்டாண்மைக்காரர்கள் மற்றும் பெருதனக்காரர்களிடம் நமது திருச்செங்கோடு பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நமது உறவின்முறையார்கள் நல்வாக்குகள் ஆசீர்வாதம் பெற்று மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள் நிறைவுபெறுதல்.
• திருச்செங்கோடு செங்குந்த முதலியார்கள் கொடியேற்றம் மண்டகப்படி கோவில்கள் - அர்த்தநாரீச்சுரர், நிலட்டம்பிரான் கைலாசநாதர் கோவில், பரிமளவல்லித் தேவி யார், செங்கோட்டு வேலவர், மலை அடிவாரம் ஆறுமுக சுவாமி.
• கயிலாயநாதர் ஆலயத்தில் நடந்துவரும் பிரதோஷத்தன்று காப்பரிசி வழங்கும் கட்டளையை செங்குந்தர்கள் செய்கிறார்கள்.
• V.V.C. இராமலிங்க முதலியார் அவர்களால் உபயமாகச் செய்து வைக்கப்பெற்ற பிரதோஷ வெள்ளி வாகனத்தின்மீது உமாமகேச்சுரரை எழுந்தருள்விக்கும் கட்டளை.
 |
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் சூரசம்ஹாரம் மண்டகப்படி - செங்குந்த முதலியார் |
எழுகரை நாடு தலைமை திருச்செங்கோட்டை சேர்ந்த புகழ்பெற்ற செங்குந்த முதலியார்கள்:
ராவ் சாஹிப் V.V.C.V. நடேச முதலியார் : பிரெஞ்சு போர்ட் பிரசிடெண்ட், திருச்செங்கோடு தாலுக்கா போர்ட் தலைவர், சேலம் ஜில்லா போர்டு உறுப்பினர். (கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
கல்விதந்தை மீனாட்சிசுந்தரம் முதலியார் : ஈரோடு முன்னாள் நகர்மன்றதலைவர், பெண்கள் கல்வி பெற பாடுபட்டவர், செங்குந்தர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய இச்சமூகத்தைப் பொதுப் பட்டியலில் இருந்து பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்த சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டவர். ஈரோடு சென்னிமலை குருசாமிபாளையம் 3 செங்குந்தர் பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தவர்.ஈரோடு நகர்மன்றத் தலைவராக பணியாற்றி தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என உயில் எழுதி வைத்தவர். இவர் பூர்வீகம் திருச்செங்கோடு உலகப்பம்பாளையம்.(வடுவன் கோத்திரம்)
சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர். சுந்தரம் முதலியார்: தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர். ஐந்து முன்னாள் முதல்வர்களுக்கு முதலாளியாக இருந்தவர். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இவரின் பூர்விகம் திருச்செங்கோடு.(கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம்)
சைவப்பெருவள்ளல் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் : நூற்றுக்கும் மேற்பட்ட கோவில், கல்வி நிலையங்களை புதுப்பிக்க நிதி அளித்தவர்.ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர்.பழனி முருகன் கோவிலுக்கு வின்ச் ரயில், தங்கத்தேர், வைரவேல், தங்க மயில் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியவர்.பழனியில் செங்குந்தர் தர்ம பரிபாலன சபை நிறுவியவர். திருச்செங்கோடு வைகாசி திருவிழா செங்குந்தர் மண்டகபடிக்கு தங்க சப்பாரம் சமர்ப்பணம் செய்தார். (கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம்)
டி.பி. ஆறுமுகம் முதலியார்.,exMLA : திருச்செங்கோடு செங்குந்தர் கலை கல்லூரியின் நிறுவனர், எழுகரை நாட்டு செங்குந்தர் சமூக நட்டாண்மைக்காரர் மற்றும் திருச்செங்கோடு முதல் நகர்மன்றத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.),இவரின் பெயரில் தான் திருச்செங்கோடு பேருந்து நிலையம் உள்ளது.(வீரபத்திரன் கோத்திரம் பங்காளிகள்)
டி.ஏ. ராமசாமி முதலியார் : ராஜா சைசிங், ராஜா அரிசி ஆலை, வர்க்ஷா உலகளாவிய பள்ளி, டி.ஏ.ராமசாமி முதலியார் திருமண மண்டபம். (வீரபதிரன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்)
திருவேங்கடம் முதலியார் : குட்டி நூற்பு ஆலை, செங்குந்தர் நூற்பு ஆலை, குட்டி சைசிங் மில், திருச்செங்கோடு ஜோதி தியேட்டர்கள் நிறுவனர். வீரபத்திரன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
வி.வி.சி.ஆர் வையபுரி முதலியார் : புள்ளிகார் நூற்பு ஆலை நிறுவியவர் (சேலம், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நூற்பு ஆலை). (கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
வி.வி.சி.ஆர். கந்தப்ப முதலியார்: திருச்செங்கோடு யூனியன் முதல் சேர்மன்.(கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
அர்த்தநாரி முதலியார் :திருச்செங்கோடு நகராண்மைக் கழகத்தின் முதல் தலைவர்.
பச்சியண்ண முதலியார்: திருச்செங்கோடு ஊராட்சியின் முதல்தலைவர். (வீரவேல் கோத்திரம் பங்காளிகள்)
தியாகி K.A.காசிவிஸ்வநாத முதலியார்: சுதந்திரப் போராட்ட வீரர், மகாத்மா காந்தி கோவில் கட்டியவர். நெசவாளர்களின் காவலர். (ஞானபண்டிதன் கோத்திரம்)
ஜான்சன் டி. எஸ். நடராஜன் முதலியார்: தொழிலதிபர், ஜான்சன் குரூப்ஸ் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சபை முன்னாள் நாட்டாண்மை, திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி குழுமத்தின் தலைவர்.(சிங்காரவேல் கோத்திரம்)
பி. செங்கோட முதலியார்: இராஜாகவுண்டம்பாளையம் புதிதாக 4 பாவடிகளை உருவாக்கி செங்குந்த முதலியார்கள் குடியேற வைத்தவர், முத்துகுமார் சாமி கோவிலை சீரமைத்தவர். ஜெயா தியேட்டர், செங்கோட முதலியார் சைசிங், செந்தில்ராஜா பஸ் சர்வீஸ் போன்ற நிறுவனங்களின் நிறுவனர்.(சமுதிரப்பாளையத்தார் கோத்திரம்)
VVCRM. சண்முகவடிவேல் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். (புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
V.S. அங்கப்ப முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
S.V.S. கார்த்திகேயன் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் தற்போதைய அறங்காவலர். எழுகரை நாடு செங்குந்த முதலியார் நாட்டாண்மை. (வஜ்ரவேல் கோத்திரம்)
இ. வேலாயுத முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். 1925களில்
டி.ஆர். பெருமாள் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். 1957களில்
டி.சி. செங்கோடன் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். 1971களில்
டி.சி. அண்ணாமலை முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
செங்குந்தர் சமூகம் அவர்கள் வாழும் பகுதிகளை தங்கள் தொழில் மற்றும் நிர்வாக வசதிக்காக 72 நாடுகளாக பிரித்தனர். அதில் திருச்செங்கோடு நகரம் எழுகரை நாடு என்ற பகுதியில் வரும்.
 |
எழுகரை நாடு செங்குந்தர் பஞ்சாயத்து சபை |
 |
16ஆம் நூற்றாண்டு ராசிபுரத்தை ஆண்ட சின்னான் முதலியார் கட்டிய அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பாதை மண்டபத்தில் வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் சிற்பம் |
 |
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சூரசம்ஹாரம் எழுகரை நாடு செங்குந்தர் மண்டகப்படி செங்கோட்டு வேலருடன் வீரபாகு உள்ளிட்ட செங்குந்தர் நவ வீரர்கள் |
திருச்செங்கோடு வடக்கு ரத வீதி செங்குந்தர் மடம் நெல்லு குத்தி மண்டபத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான முருகன், வீரபாகு செங்குந்தர், உள்ளிட்ட நவவீரர்கள் சிற்பம்.
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் ஆறாம் திருவிழாவை முன்னிட்டு எழுகரைநாடு செங்குந்தர் மாளிகையில் நமது மகாநாட்டிற்கு உட்பட்ட அனைத்து கிளை நாடு மற்றும் ஊர் நாட்டண்மைக்காரர், பெருதனக்காரர், பட்டக்காரர், காரியக்காரர் போன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்த காட்சி மற்றும் செங்குந்தர் திருமண மண்டபத்தில் வந்திருந்த உறவினர்களுக்கு சிறப்பாக விருந்தோம்பல் நடைபெற்றது.
 |
திருச்செங்கோடு எழுதரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மாளிகையில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நாட்டுப் பிள்ளையார் |
 |
திருச்செங்கோடு எழுகரைநாடு செங்குந்தர் பாவாடி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பாவடி பஞ்சாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டபங்களில் இடம்பெற்றுள்ள நமது செங்குந்தர் சமூக குலகுரு கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் படம் |
 |
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சைவபெருவள்ளல் திரு.வி.வி.சி.ஆர்.முருகேச முதலியார் அவர்களால் செங்குந்தர் மண்டபக்கட்டளைக்கு தங்கசப்பரத்தில் எழுந்தருளி அம்மையப்பன் பவனி வர திருக்கோயில் உபயமாக வைத்தார். இது நமது மண்டபக்கட்டளைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. |
 |
.4 ஆம் திருவிழாவிற்கு இன்று அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகள் பட்டினப் பிரவேசத்தை முன்னிட்டு நமது செங்குந்தர் மண்டபத்தில் சுவாமிகளை வரவேற்கும் ஏற்பாடுகள்
|
எழுகரை நாடு செங்குந்தர் நெல்லுகுத்தி மடம்(செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சபை)
எழுகரை நாடு செங்குந்தர் மாளிகை
திருச்செங்கோடு
செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மகாநாடு
திருச்செங்கோடு பாவடி பஞ்சாயத்து செங்குந்தர் அறக்கட்டளை இலவச மருத்துவமனை
.jpg)

.jpg)

.jpg)


 |
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசித் தேர் திருவிழா கொடியேற்றம் செங்குந்த முதலியார் சமூகம் உரிமையான கொடிசீலை வழங்கும் நிகழ்வு எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பாக நாட்டாண்மைகாரர்கள், காரியக்காரர்கள், உறவின்முறையர்கள் படைசூழ ஊர்வலமாக சென்று திருக்கோயில் கொடிசீலை வழங்கப்பட்டது. |
 |
திருச்செங்கோடு எழுகரைநாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மாளிகையில் உள்ள நமது செங்குந்தர் குலச் சின்னம் |
 |
இராசிபுரம் மன்னர் சின்னான் முதலியார் 450 வருடம் முன்பு கட்டிய திருச்செங்கோடு மலை பாதை மண்டபத்தில் நபவீரரகள் சிலை |
 |
வடக்கு ரதாவீதி நவாவீரர் சிலை உள்ள செங்குந்தர் மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் அபிசேகம் |
எழுகரை நாடு செங்குந்தர் மடம் அம்மையப்பனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
 |
நமசிவாய முதலியார் வழங்கிய வெள்ளி யானை |
 |
சைவபெருவள்ளல் VVCR முருகேச முதலியார் வழங்கிய தங்க சப்பரம் |
 |
திருச்செங்கோடு வைகாசி விசாகப் பெருவிழாவில் எழுகரைநாடு செங்குந்தர் சுவாமிகள் நான்குரதவீதிகளில் வலம்வந்து பின் கைலாசநாதர் ஆலயத்தில் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் உற்சவம் முடிந்தபின் மதிப்பிற்குரிய எழுகரை நாடு நாட்டினர் உறவினருக்கு நல்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இடம்: பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபம் |
 |
திருச்செங்கோடு எழுகரைநாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து நாட்டாண்மைக்காரர்கள். காரியக்காரர்கள் மற்றும் உறவின்முறையர்கள் முன்னிலையில் செங்கோட்டுவேலவர் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம் |
 |
6 ஆம் நாள் வெள்ளியானை வாகனம் செங்குந்தர் குல நமச்சிவாய முதலியார் அவர்களால் உபயமாக அம்மையப்பனுக்கு வழங்கப்பட்டது. |
 |
எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பாக தைப்பூச விழா |
சூரன் உடல் அற வாரி சுவரிட வேலை விட்ட கந்தக் கடவுளின் சூரசம்ஹார விழா இன்று ஆயிரக்கணக்கான இறையன்பர்கள் புடைசூழ முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வழிவந்த திருச்செங்கோட்டில் செங்குந்தர் சமுதாயத்தினரால் நடத்தப்பட்டது.
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் இருக்கும்
சொக்கப்ப முதலியார் அரங்கம்
எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சபை முன்னாள் நாட்டாண்மை திரு.டி.பி.ஆறுமுகம்.எம்.எல்.ஏ அய்யா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பெரும் முயற்சி எடுத்து அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி துவங்கப்பட்டது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் முதல் மண்டபம் திருக்காளத்தி அடிகள் மண்டபம், ஈரோடு மாவட்டம் கீழ்வானி மூங்கில்பட்டி சிதம்பரத்தார் கோத்திரம் எங்கள் பாட்டனார் திருமிகு. நாட்டாண்மை கரும முதலியார் முன்னிலையில் சகோதரர் வெங்கடாசல முதலியார் அவர்களால் கட்டப்பட்டது. நான்காம் திருவிழா அன்று அந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
 |
திருச்செங்கோடு எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்திற்கு உரிமையான செங்குந்தர் குல கடவுள் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் சுவாமிக்கு இன்று தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. |
 |
மகாத்மா காந்தியடிகள் 1932 ஆம் ஆண்டு திருச்செங்கோடு வருகை தந்து உரையாற்றிய ஞாபகார்த்தமாக திருச்செங்கோடு செங்குந்தர்கள் ஏற்பாட்டில் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பாக திருச்செங்கோடு பெரிய பாவடியில் மகாத்மா கோவில் கட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டது👇
|
 |
திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோவிலில் பின் புறத்தில் (முடி காணிக்கை செலுத்தும் இடம் அருகில்) உள்ள செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து கோவில் |
 |
முன்னாள் எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சபை நாட்டாண்மை தலைவர் மக்கள் சேவகர் T.P.ஆறுமுகம்.exMLA அவரின் பெயரில் திருச்செங்கோடு பேருந்து நிலையம் உள்ளது. |
.jpg)
https://online.flippingbook.com/view/322482758/1👆🏻👆🏻அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகம் தேர்த்திருவிழா பத்திரிகை-2023
2001 வருட ஆண்டுக்கு முன் மிகவும் அதிக செல்வாக்கு உடன் எம்.எல்.ஏ /சேர்மன் என்று அரசியல் செல்வாக்கு மட்டும் பொருளாதார செல்வாக்குடன் இருந்த திருச்செங்கோடு செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் தற்போது வழிவந்து எம்எல்ஏ சேர்மன் கூட இத்தொகுதியில் வாங்க முடியாத அளவுக்கு விழுந்து போய் உள்ளது.
************************************
 |
திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சீர்பாதம் செயும் உரிமை. தொன்றுதொட்டு செங்குந்தர் சமுதாயம் செய்துவந்தனர். 1860ஆம் ஆண்டில் செங்குந்தர் நட்டமைக்கும், அப்போதிருந்த கோவில் தர்மகர்த்தாககும் ஏற்பட்ட சண்டையால் இந்த உரிமை போனது. |
 |
திருச்செங்கோடு கோவில் அறங்காவலர் அங்கப்ப முதலியார் மற்றும் V.V.C.R.M. சண்முகவடிவேல் முதலியார் போன்றவர்கள் |
திருச்செங்கோட்டில் பெரிய மாரியம்மன் பண்டிகை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி ஒட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். 12 நாட்கள் பண்டிகையில் கம்பம் போடும் நாள் முதல் ஐந்து நாட்கள் நமது பாவடி பஞ்சாயத்து சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 11 வந்து நாள் வெள்ளிக்கிழமை பகல் நமது சமுதாய இளைஞர்கள் எடுப்புத் தேர்கள் ஐந்தும் இடுப்பில் கயிறு கட்டி இழுத்து வரும் தேர்கள் இரண்டும் எடுப்பார்கள். எழுகரைநாடு செங்குந்தர் மாளிகையில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயத்தில் தேர் குத்தும் நிகழ்வு நடைபெறும். முதுபக்கமும் மார்பிலும் ஊசிகள் குத்தி அவற்றில் உள்ள நூலை தேரில் கட்டி விடுவார்கள். பின்னர் பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் ஆலயங்களில் வழிபட்டு நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து அதன் பின்னர்தான் கோயிலில் தேர் இறக்கி வைப்பார்கள். மறுநாள் சனிக்கிழமை காலை கம்பம் பிடுங்கப்பட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் விடப்படும். அங்கேயும் கம்பத்திற்கு முன்னால் தேர் குத்திய வர்கள் ஆடிச் செல்வார்கள். பின்னர் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்தின் திருமண மண்டபத்திற்கு அனைவரும் வந்து வாராந்திர ஊர்க் கூட்டத்தில் தேர் குத்தியவர்களுக்கு சன்மானமும் அர்ச்சகர் பூசாரி வாத்தியகாரர்கள் ஆகியோருக்கு உரிய தொகையும் பாவடி பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பண்டிகை இனாமும் வழங்கப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் வந்திருக்கும் உறவின்முறையார் களுக்கும் பிரசாதம் வழங்கப்படும். மேலே உள்ள வீடியோ தேர் குத்திய வர்கள் கம்பம் விட்டு திருமண மண்டபத்திற்கு வரும்போது பதிவு செய்தது
மேலும் திருச்செங்கோடு செங்குந்தர் பற்றிய சிறப்புகள் மற்றும் வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு +91 78269 80901 தகவலை அனுப்பவும்
திருச்செங்கோடு செங்குந்தர் போர் வீரர்கள் சாவான் சிலைகள்
***********************
 |
1996 MLA வாக வெற்றி பெற்ற T.P. ஆறுமுகம் முதலியார் பாராட்டு விழா |
 |
திருச்செங்கோடு செங்குந்தர் முத்துகுமாரசாமி கோவில் கல்வெட்டு |
 |
செங்குந்தர் கல் மண்டபம் இருந்ததை செங்குந்தர் கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது. |
 |
எழுகாரை நாடு செங்குந்த முதலியார் நாட்டாண்மை சபையில் நடுவில் உள்ள ஒட்டக்கூத்தர் முதலியார் படம். |
 |
1982 எழுகரை நாடு செங்குந்த முதலியார் நாட்டு குருக்கள் சதாசிவ குருக்கள் பட்டாபிஷேகம் செய்துவைத்து எழுகரை நாடு செங்குந்தர் நாட்டாண்மை, காரியகாரர்கள் |
 |
திருப்பூர் குமரன் நினைவாக கட்டப்பட்ட குமரன் கல்வி நிலையம் |
 |
1940 களின் நாட்டாமை |
 |
கோவில் அறங்காவலர்கள் VVCRM சண்முகவடிவேல் முதலியார் & அங்கப்பா முதலியார் |
 |
வைகாசி தேர் திருவிழா செங்கோட்டு வேலர் தேருக்கு துணி கொடுக்கும் உரிமை |
 |
1 பாவடி மட்டுமே இருந்த திருச்செங்கோட்டில் கீழ ஊர் கிராமம் இரஜாகவுண்டம்பாளையம் ஊரில் புதிதாக 4 பாவடிகளை விலைக்கு வாங்கி உருவாகி அந்த ஊரில் நிறைய செங்குந்த முதலியார்களை குடியேற செய்தவர் ப. செங்கோட முதலியார் (சமுதிரபாளையத்தார் கோத்திரம்) |
 |
இராஜகவுண்டம்பாலையம் செங்கோட முதலியார் அவர்கள் நடத்திய திருவிழா |
 |
அத்தனூர் செங்குந்த முதலியார் |
 |
சூரியம்பாளையம் பாவடி செங்குந்தர்கள் |
 |
திருச்செங்கோடு தேற்களுக்கு துணி அலங்காரம் பொருள்களை தொன்று தொட்டு வழங்கிவரும் செங்குந்த முதலியார்கள்
|
பூவேல் நாடு தாரமங்கலம் முதலியார்கள்.
பூவேல் நாட்டின் கீழூர் மேலூர் பாவடி கிராமங்கள்
1. மேழூர் கச்சுப்பள்ளி
2. தோப்பூர்
3. ஓமலூர்
4. கீரபாப்பம்பாடி
5. தொளசம்பட்டி
6. சின்னப்பம்பட்டி
7. எடப்பாடி கவுண்டன்பட்டி
8. காடையாம்பட்டி
9. கோனேரிபட்டி
10. கார்திகாரனூர்
11. சவுரியூர்
12. மேல் வனவாசி
13. கீழ் வனவாசி
14. மேல் நங்கவள்ளி
15. கீழ் நங்கவள்ளி
16. வெப்படை
17. புதுசாம்பளி
சேலம் நாடு செங்குந்த முதலியார்கள்.
சேலம் நாட்டின் கீழூர் மேலூர் பாவடி கிராமங்கள்
1.மேலூர் வெண்ணந்தூர்
2.கீழூர் அம்மாப்பேட்டை
3.மல்லூர்
4.மல்லூர் குமாரபாளையம் III
5.மல்லூர் குமாரபாளையம் III A
6.அலவாய்ப்பட்டி கிராமம்
7.நடுப்பட்டி கிராமம்
8.ஓலைப்பட்டி கிராமம்
9.செம்மாண்டப்பட்டி கிராமம்
10,மின்னக்கல் கிராமம்
11,கொமரசாமிப்பட்டி கிராமம்
12.கைலாசம்பாளையம் புதூர்
13.இருசனாம்பட்டி கிராமம்
14.வள்ளுவர் காலனி
சேலம் நாடு செங்குந்த முதலியார் கோவில்கள்
சேலம் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணியர் கோவில்
செங்குந்தர் மந்தை மாரியம்மன் கோவில்
சின்ன மாரியம்மன் கோவில்
செங்குந்தர் பாலசுந்தர கணேசன் கோவில்
அளவாயோட்டி செங்குந்தர் சொன்ன மாரியம்மன் கோவில்
செம்மாண்பட்டி மாரியம்மன் கோவில்
கொமாரசாமி பட்டி முத்துகுமாரசாமி கோவில்
இருசனாம்பட்டி மாரியம்மன் கோவில்
வள்ளுவர் காலனி செல்வா மானியம்மன் கோவில்
 |
சேலம் நாடு பாவடி செங்குந்த முதலியார்
|
 |
எழுகரை நாட்டின் கீழ் உள்ள சேலம் நாடு பாவடி சூரசம்ஹாரம்
|
இராசிபுரம் நாடு
 |
18ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சான்று தொன்று - தொட்டு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இராசிபுரம் சிவன் கோவிலில் நடைபெரும் மண்டகப்படி. இராசிபுரம் நாடு பாச்சல் பாவடி செங்குந்த முதலியார் தலைமை தாங்கி இந்த மண்டகபடியை சிறப்பாக நடத்தி வருகிறது. 7 பாவடி ஊர்களை சார்ந்த செங்குந்த முதலியார்கள் வந்த பின்னரே பூஜைகள் நடைபெறும். |
 |
J |
 |
ராசிபுரம் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சித்திரைத் தேர் பெருவிழா பிரம்மோற்சவம் பங்குனி கொடியேற்றத்துடன் (துவஜாரோகணம்) துவக்கம். இந்நிகழ்ச்சியை பாச்சல், ராசிபுரம், குருசாமிபாளையம், அத்தனூர், சீராப்பள்ளி, சிங்களாந்தபுரம், ஆண்டலூர் கேட், பாலப்பாளையம், கடந்தபட்டி, கூனவேலம்பட்டி புதூர், தொப்பமபட்டி, ஜேடர்பாளையம் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய இராசிபுரம் நாடு pபாச்சல் செங்குந்தர் முதலியார் சமுதாயத்தினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. |
 |
ராசிபுரம் நாடு பாச்சல் பாவடி செங்குந்த முதலியார்
|
எழுகரை நாடு(சேலம் & நாமக்கல் மாவட்டம்) செங்குந்த முதலியார் திருமண நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருட்கள்
1. முகூர்த்தக்கால் நடுதல் :
1. மூங்கில் (11 கணு அல்லது ஒற்றைப்படை)
2. நவதானியம்
3. 1 ரூபாய் நாணயம்
4. மஞ்சள் துணி (நவதானியம் முடிந்து வைக்க)
5. கற்பூரம்
6. ஊதுபத்தி
7. சாம்பிராணி
8. தூபக்கால்
9. விபூதி
10. குங்குமம்
11.சந்தனம்
12. பூஜை தட்டு
13. பசுஞ்சாண பிள்ளையார்
14. மாவிலை
15. காய்ச்சாத பசும்பால்
16.தண்ணீர்
17.பால், தண்ணீருக்கு சொம்பு 2
18. தேங்காய் 2
19. பழம் 2 சீப்பு
20. வெற்றிலை பாக்கு
21. புஷ்ப சரம்
22. தீப்பெட்டி
23.அரிவாள்
ே
24. குத்துவிளக்கு 2
25. திரி பாக்கெட்
26. நல்லெண்ணை
27. மஞ்சள்தூள் (தேங்காய் உடைத்ததும் பூச)
28.மளிகை கடையில் மங்கலப் பொருட்கள் வாங்க வேண்டும்
2. பாலிகை போட
1. மூங்கில் தட்டு
2. வைக்கோல்
3. மாட்டுசாணபொடி
4. நவதானியம்
5. நவதானியம் ஊறவைக்க பாத்திரம்
3. பூப்பு நன்னீராட்ட
1. 6-7
2. சந்தனக்கிண்ணம் 2
3. பன்னீர் சொம்பு-1
4. குண்டு சொம்பு-2
5. நவதானியம்
6. புட்டு
7. அடை
8. படி 1
9. கம்பு (படியில் நிறைக்க)
10. தார்குச்சி 1 (படியில் வைக்க)
11.நெல் - 1படி
13. விபூதி
த்திரம்
4. நிச்சயதாம்பூலம்
1. பேழைப்பெட்டி
2. மஞ்சள்துணி முடிப்பு (நவதானியம் + 5 ரூபாய்)
3. விபூதி
4. குங்குமம்
5. சந்தனம்
6. விரலி மஞ்சள்
7. வெற்றிலை பாக்கு
8. பழம் 2 சீப்பு
9. மாலை
10. புஷ்ப சரம்
11. வெற்றிலை 2 கவுளி
12. பாக்கு 2 பாக்கெட்
13. தண்ணீர் சொம்பு 1
14. பானக சொம்பு 1
15. சொம்புகளுக்கு பூ சரம்
16. டம்ளர்
17. பானகம் அல்லது எலுமிச்சை ஜூஸ்
5. நாள் குறிக்கும் தட்டு
1. மஞ்சள் துணி முடிப்பு (நவதானியம் + 5 ரூபாய்)
2. விபூதி
3. குங்குமம்
4. சந்தனம்
5. விரலி மஞ்சள்
6. வெற்றிலை பாக்கு
7. பழம் 2 சீப்பு
8. தேங்காய் -5
9. புஷ்ப சரம்
6. திருமாங்கல்யம், கூறைப்புடவை, வேஷ்டி படைக்க
1. மஞ்சள் பிள்ளையார்
2. மஞ்சள் பொடி (தேங்காய் உடைத்ததும் பூச)
3. சிறிய தலைவாழை இலைகள் 22
4. சாதம், வாழைக்காய் பொரியல், பருப்பு, ரசம், தயிர், நெய்
5. இனிப்பு பணியாரம்
6. பழம் 1 சீப்பு
7. தேங்காய் 2
8. வெற்றிலை, பாக்கு
9. பூச்சரம், (படங்களுக்கு, குத்துவிளக்குகளுக்கு, பாலிகை தட்டிற்கு)
13. கற்பூரம்
14. ஊதுபத்தி
15. சாம்பிராணி, தூபக்கால்
16. தீப்பெட்டி
17.திருமாங்கல்யம், பட்டம். காலாழி
18. கூறைப்புடவை, வேஷ்டி சட்டை
19. சுக்குமிளகு கருப்பட்டி
20. பாலிகை தட்டு
7. அரசாணிக்கால் நடுதல்
1. மஞ்சள் பிள்ளையார் (அல்லது பசுஞ்சாண பிள்ளையார்)
2. வெற்றிலை, பாக்கு, பழம் 2, தேங்காய்-1, கற்பூரம், ஊதுபத்தி, விபூதி, குங்குமம், தீப்பெட்டி
3. காய்ச்சாத பசும்பால்
4. தண்ணீர் 1 பக்கெட்+சொம்பு 2
5. மஞ்சள்துணி முடிப்பு (நவதானியம்+ 1 ரூபாய்)
6. அரச இலைகொத்து
7. கரும்பு சோகை
8. அரசாணிக்கால் மூங்கில் குச்சி 11 கணு)
9. மாவிலை
10. பக்கெட் அல்லது இரும்பு சிலிண்டர் (அரசாணிக்கால் நட)
11.மணல்
12. அரசாணிக்கால் கட்டிவிட சரடு
13. தேங்காய் உடைக்க அரிவாள்
8. மணப்பொங்கல் வைக்க
1. தேக்சா 2
2. தட்டு 2
3. அடுப்பு 2
4. கரண்டி 2
5. எரி கரும்பு (தேவையானது)
6. சருவச்சட்டி
7. பச்சரிசி 1 கிலோ
8. பச்சரிசி மாவு
9. தீப்பெட்டி
9. சீக்குச் சுற்றுதல்
1. क्र 7
2. சந்தனக்கிண்ணம் 2
3. பன்னீர் சொம்பு 1
4. குண்டு சொம்பு!
5. நவதானியம்
6. அடை
7. படி 1
8. கம்பு (படியில் நிறைக்க)
9. தார்க்குச்சி
10. நெல் 1 படி
11. சந்தனம், குங்குமம், விபூதி, கற்பூரம்
12. நாட்டு சர்க்கரை
13. சாதம்
14. வெற்றிலை 2 கவுளி
15.பாக்கு 1 பாக்கெட்
16. பூ சரம்
17. குத்துவிளக்கு, திரி
18.விரிப்பு
19. சுண்ணாம்பு, மஞ்சள்தூள் (ஆரத்திக்கு)
20. தீப்பெட்டி
10.முகூர்த்தம் பேழைச்சீர்
1. மஞ்சள் துணி முடிப்பு ( நவதானியம் + 15 ரூபாய்)
2. விபூதி, குங்குமம். சந்தனம்
3. விரலி மஞ்சள்
4. வெற்றிலை பாக்கு
5. பழம் 2 சீப்பு
6. தேங்காய் 5
7. மணமகளுக்கு மாலை 1 செண்டு 1
8. புஷ்பம்
வேல்
9. உப்பு 2 கிலோ
10. தலைவாழை இலை 2
11. சீப்பு 1, கண்ணாடி 1
12.கூறைச்சேலை, காலாழி, பட்டம்
13.மாங்கல்யம் (அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்)
14. வெற்றிலை 2 கவுளி
15.பாக்கு 2 பாக்கெட்
11.மணமகன் பிள்ளையார் கோயில் சென்றுவர
1. மணமகனுக்கு மாலை, செண்டு
2. தேங்காய் 1
3. கற்பூரம், தீப்பெட்டி
12. மணமகனுக்கு பாதபூஜை செய்ய
1. தலைவாழை இலை 1
2. பால் 1 டம்ளர்
3. தண்ணீர் 1 சொம்பு
4. விபூதி
5. குங்குமம்
6. ஆரத்தி தட்டு
7. தேங்காய்
8. கற்பூரம், தீப்பெட்டி
9. வெற்றிலை, பாக்கு, 1 ரூபாய் நாணயம்
13.முகூர்த்தத்திற்கு தேவையானவை
1. மஞ்சள்தூள்
2. குங்குமம்
3. விபூதி
4. பூஜை தட்டு
5. கற்பூரம் 1 பாக்கெட்
6. ஊதுபத்தி
7. சந்தனம்
8. பாக்கு 1 பாக்கெட்
9. வெற்றிலை 2 கவுளி
10. பச்சரிசி 2 கிலோ
11. தேங்காய் 10
12. பழம் 2 சீப்பு
13. விரலி மஞ்சள் (கங்கணம் கட்ட) + கஞ்சி போடாத நூல்
14. தலைவாழை இலை 5
15. சந்தனக்கிண்ணம் 2
16. புஷ்பம்
17. மாவிலை
18.சமித்து கட்டு 10
19.நெய்
20.
21.உமி
22. குடம் 2
23. சொம்பு 2
24. தட்டம் 4
25. டம்ளர் 4
26. தீப்பெட்டி
27. மாங்கல்யம் மற்றும் பட்டத்திற்கு நூல் (கஞ்சி போடாத நூல்)
28. மணமக்கள் மாற்றுமாலை 2
29. சம்பந்திகள் மாலை 4
30. சுவாமிக்கு மாலை (கோவிலில் திருமணம் வைக்கும்போது)
31. கற்கண்டு அல்லது சாக்லேட்
14.நாகவல்லி செய்தல்
1. சங்கு 1,மோதிரம் 1
2. பழம் 2, தேங்காய் 1
3. ஊதுபத்தி, கற்பூரம், தீப்பெட்டி
4. விபூதி, குங்குமம்
5. பச்சரிசி மாவு களி
6. எண்ணை
7. சீயக்காய்த்தூள்
8. தட்டம் 1
9. தலைவாழை இலை 1
10. தண்ணீர், சொம்பு
15.பாலிகை கொண்டு விடுதல்
1. தேங்காய் 1, பழம் 2
2. வெற்றிலை பாக்கு
3. விபூதி, குங்குமம்
4. ஊதுபத்தி, கற்பூரம், தீப்பெட்டி
5. पु பாலிகை தட்டு
6. தட்டு 1, சொம்பு
7. குடை 2
16.சம்பந்தம் கலக்குதல்
1. மூங்கில் கூடை
2. பழம் 2 சீப்பு
3. சர்க்கரை 1 கிலோ
4. நெய் 1/2 கிலோ
5. வெற்றிலை பாக்கு
6. சந்தனம், குங்குமம், சந்தனக் கிண்ணம் 2
7. விபூதி, விரலிமஞ்சள், புஷ்பம்
17. மணமக்கள் மணமகன் இல்லம் & மணமகள் இல்லம் வரும்போது
1. மணைப்பலகை
2. ஆரத்தி தட்டு, விபூதி
3. தண்ணீர் குடம் (பச்சரிசி மாவில் கற்பூரம் வைத்து)
4. தேங்காய் (திருஷ்டி சுற்ற )
5. தீப்பெட்டி
6. பால், பழம்