ஆறகழூர் செங்குந்த முதலியார் வரலாறு மகத நாடு தலைநகரம்

0

தமிழ் நாடின் சேலம் கிழக்கு பகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் தெற்கு பகுதி வரலாற்று ரீதியாக நடுநாடு என்று அழைக்கப்படும் மட்ககமண்டலம் ஆகும். இதன் தலைநகர் ஆறகழூர்.


வானகோவரையர்களின் ஒரு பிரிவு ஆட்சி செய்த ஊர் ஆகும். இவர்கள் வழிவந்த செங்குந்த முதலியார்கள் இந்த ஊரின் பரம்பரை நாட்டாராக இருந்து வருகின்றனர்.


சேலம் மாவட்டம் ஆறகழூர் அம்பாயிரம் அம்மன் கோவில் கடைசி நாள் ஒன்பதாம் திருவிழா 

மாலை தேர் நிலையை அடைந்தவுடன் எல்லைசட்டியை உடைத்தல்.

மாலை 7.00 மணிக்கு ஆறகழூர் நாட்டுக்கு நாட்டார் ஆறுமுகம் செங்குந்தர் வகையறாக்கள், சேலம் நாட்டு எதிர்நாட்டார் மற்றும் பெரிய தனக்காரர்களையும் காரியக்காரர்களையும் 18 கிராம செங்குந்தர்களையும் எதிர்கொண்டு அழைக்கும் வைபவம்.


இரவு 8.00 மணிக்கு ஆறகழூர் நாட்டார் ஆறுமுகம் வகையறா பல்லாக்கிலும் எதிர் நாட்டார் எதிர் பல்லக்கிலும்

கூகையூர் நாட்டார் சிற்றம்பலம் முதலியார் வகையறாக்கள் குதிரையிலும் வருவார்கள். அத்துடன் குடை பிடித்து செங்குந்தர் சமூகத்தினர் அனைவரும் நடத்தும் "பட்டினப்பிரவேசம்" ஊர்வலம் நடைபெறும்.


விடியற்காலை 4.00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். (திட்டக்குடி செங்குந்தர் மக்கள்)

ஆடி மாதம் 16ம் தேதி 01.08.2025 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு செங்குந்தர்கள் தீவட்டி பிடிக்கப்பட்ட மரியாதையுடன் பட்டிணபிரவேச ஊர்வலம் நடைபெறும்.

காலை 10.00 மணிக்கு 'அலகு குத்துதல்" நடைபெறும்.

மாலை 2.00 மணிக்கு 'அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா' நடைபெறும்.

மாலை 4.00 மணிக்கு அம்பாள் ஊர்வலமாக சென்று மூலவரிடம் காப்பு அவிழ்த்தல் நடைபெறும்.


ஆறாம் திருவிழா-உற்சவதாரர்கள் : ஆறகளூர் சாவான் செங்குந்தர் குல S.R.நாராயணசாமி முதலியார் மற்றும் S.R .ஆறுமுக முதலியாரி வகையறாக்கள்


விசுவாவசு ஆண்டு ஆடி மாதம் 12 ம் தேதி 28.07.2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சிவன் கோவிலிலிருந்து 108 வலம்புரி சங்குடன் திருவீதி உலா வந்து மூலவர் அம்பாளுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறும். சுவாமி மீனாட்சி அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வானவேடிக்கையுடன் நையாண்டி மேள கச்சேரியுடன் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.


ஆறகளூர் செங்குந்த முதலியார் பெருமை விளக்கும் கல்வெட்டு: 

ஆறகளூர் கைக்கோளர் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த கொத்தன் என்பவர்கள் பாண்டியர்கள் காலத்தில் 13 ஆம் நூற்றாண்டில்  கோட்டைக்கரை என்ற பகுதியில் குடி அமர்த்தப்பட்டதற்கான கல்வெட்டு ஆறகளூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.

கோயிலில் மெய்க்காவல் பணி செய்வதற்காக இந்த இடம் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.

தியாகனூரில் உள்ள ஆறகளூர் மலைமண்டல பெருமாள் கோயிலில் இந்த கைக்கோளர்களுக்கு மெய்க்காவல் பணி வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33


ஊர்:ஆறகளூர்                                             வட்டம்:ஆத்தூர்

திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்

அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்

காலம்: கி.பி.1287

மொழி:தமிழ்                                     க.ஆ.அ. 138-1913

செய்தி  :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்கு புதிதாக குடிமக்களைக் குடியேற்றிய  செய்தியை குறிக்கிறது..

  


கல்வெட்டு    ;

1.     ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ  ர்க்   கூற்றத்து  ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு


2.      ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்


3,   டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்

     குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா 


4.    டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)


 5.  ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்

  கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்


 6.  த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து























செங்குந்தர் குல அண்ணாமலை மூப்பனார்

செங்குந்தர் குல காமநாத மூப்பனார்

மூப்பர் பட்டம் கொண்ட செங்குந்தர் 




செங்குந்த கைக்கோள முதலியார், கொத்தான் வகையறா அய்யனார் .

ஆறகளூர் கோட்டைக்கரை முனி: ஒரு மனைவியுடன் அருளும் பழமையான ஐயனார்



கட்டுரையாளர்: ஆறகளூர் பொன்.வெங்கடேசன்


ஐயனார் வழிபாட்டின் பரிணாமம்

இன்று நாம் பல ஊர்களிலும் காணும் பெரும்பாலான ஐயனார் கோயில்களில், ஐயனார் பூரணி மற்றும் புஷ்பகலை என இரு தேவியருடன் (மனைவியருடன்) காட்சியளிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால், கிராமிய தெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்தால், ஆரம்ப காலகட்டங்களில் ஐயனார் தனித்தே வழிபடப்பட்டார் என்பது தெரியவரும்.


 அதன் பின்னரே ஒரு மனைவியுடனும், காலப்போக்கில் இரு மனைவியருடனும் அவர் வழிபாட்டில் உருவகப்படுத்தப்பட்டார்.


கோட்டைக்கரை முனி

இந்த வரலாற்றுப் பரிணாமத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது ஆறகளூர் கோட்டைக்கரை என்னும் இடத்தில் அமைந்துள்ள பழமையான சிற்பம். இங்குள்ள சிற்பத்தில், ஐயனார் தனது ஆரம்பகால வடிவங்களில் ஒன்றான ஒரு மனைவியுடன் காட்சியளிக்கிறார்.


 இது இந்தச் சிற்பத்தின் நீண்ட நெடிய தொன்மையை நமக்கு உணர்த்துகிறது. தொன்மை வாய்ந்த இந்த ஐயனாரை, எங்கள் பகுதி மக்கள் 'முனி' என்ற பெயரிலேயே தலைமுறை தலைமுறையாகப் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.


கைக்கோளர் மரபும் மெய்காவல் பணியும்


ஆறகளூர் கோட்டைக்கரையில் பூர்வீகமாகக் குடியிருந்து வரும் கைக்கோளர் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள், ஆறகளூரில் உள்ள கோயில்களில் பாரம்பரியமாக மெய்காவல் (பாதுகாவல்) பணியைச் செய்து வருகிறோம். காவல் தெய்வமான இந்த முனியே, காவல் பணியில் இருக்கும் எங்களுக்கும் எங்கள் சமூகத்திற்கும் அரணாக விளங்குகிறார்.


தனித்துவமான நள்ளிரவு வழிபாடு

இந்த முனிக்கான வழிபாட்டு முறைகளும் எங்கள் பாரம்பரியத்தில் மிகவும் தனித்துவமானவை. நாங்கள் எங்கள் வீட்டுத் தெய்வத்தைக் கும்பிடும் நிகழ்வுகளில், இரவில் நடைபெறும் சடங்கு மிக முக்கியமானது.


இரவு நேரத்தில் சூல் ஆட்டை அறுத்து, அதன் இரத்தத்தை சுடச்சுடச் சோற்றில் கலந்து பிசைந்து கொள்வோம். பின்னர், அப்பகுதியில் அடர்த்தியாக அமைந்துள்ள புளியந்தோப்பிற்குச் சென்று, அந்த இரத்தச் சோற்றை வானை நோக்கி (மேல் நோக்கி) வீசுவோம். அந்த நள்ளிரவு வேளையில், புளிய மரத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் எங்கள் முனி, அந்த இரத்தச் சோற்றைத் தன் கைகளால் பிடித்துச் சாப்பிடுவார் என்பது காலம் காலமாக நாங்கள் ஈடுபாட்டுடன் நம்பி வரும் ஆழமான ஐதீகமாகும்.


பழமையான சிற்பக்கலைக்கும், உயிரோட்டமுள்ள கிராமிய வழிபாட்டுச் சடங்குகளுக்கும் ஒரு வாழும் சாட்சியாகத் திகழ்கிறது எங்கள் ஆறகளூர் கோட்டைக்கரை முனியின் வரலாறு.

ஆறகழூர் வெங்கடேசன் பொன்


ஆறகளூர் கைக்கோளர் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த கொத்தன் என்பவர்கள் பாண்டியர்கள் காலத்தில் 13 ஆம் நூற்றாண்டில்  கோட்டைக்கரை என்ற பகுதியில் குடி அமர்த்தப்பட்டதற்கான கல்வெட்டு ஆறகளூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.


   கோயிலில் மெய்க்காவல் பணி செய்வதற்காக இந்த இடம் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.


தியாகனூரில் உள்ள ஆறகளூர் மலைமண்டல பெருமாள் கோயிலில் இந்த கைக்கோளர்களுக்கு மெய்க்காவல் பணி வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33


ஊர்:ஆறகளூர்                                             வட்டம்:ஆத்தூர்

திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்

அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்

காலம்: கி.பி.1287

மொழி:தமிழ்                                     க.ஆ.அ. 138-1913

செய்தி  :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய  செய்தியை குறிக்கிறது..

  


கல்வெட்டு    ;

1.     ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ  ர்க்   கூற்றத்து  ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு


2.      ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்


3,   டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்

     குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா 


4.    டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)


 5.  ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்

  கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்


 6.  த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து


#ஆறகளூர்




ஆறகளூர் சாவான் குடும்ப வகையறா செங்குந்த கைகோள முதலியார்




500ஆண்டுகள் பழமையான தேர்


சேலம் மாவட்டத்தில் ஆறகளூரில் 500 ஆண்டுகள் பழமையான தேர் ஒன்று உள்ளது.


பாண்டியர்காலத்தில் இருந்து தேர் இல்லாமல் இருந்ததால் 26.01.1509 ஆம் ஆண்டு எறமாஞ்சி திம்மய்ய நாயக்கரின் மகன் துலுக்கண்ண நாயக்கர் என்பவர் ஆறகளூர் திருக்காமீசுரமுடைய நாயனாருக்கு திருத்தேர் ஒன்றை செய்து கொடுத்தார்.


நீண்ட நாளாக தேர் ஓடாமல் இருந்ததால் தேர் தடையின்றி ஓட நவகண்டம் என்ற முறையில் ஒரு வீரரை பலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.


  யாரை பலி கொடுப்பது ?


அதற்க்கு முன்வந்தார் கைக்கோளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர்


தாமதநல்லூர் என்ற ஊரைச்சேர்ந்த கைக்கோளர் பெருமான் என்பவருடைய மகன் பறையன்பறை என்பவர் தன்னை இந்த தேருக்கு முன்பு தன்னுடைய உடல் பாகங்கள் ஒன்பது இடங்களில் சதையை அரிந்து வைத்து தன் தலையை தானே வெட்டிக்கொண்டு தேருக்கு பலியிட்டுக்கொண்டார்.


  இதற்காக அவருக்கு நவகண்ட நடுகல் எடுக்கப்பட்டது.


மேலும் ஆறகளூரில் வசிக்க அவர் குடும்பத்தாருக்கு திருமஞ்சன வீதியில் இரண்டு மனை அளிக்கப்பட்டது. ஆறகளூர் காளிக்கோயில் அருகே உள்ள ஓடைக்கு அருகே தியாகனூர் எல்லையில் நன்செய் நிலம் 250 குழியும், புன்செய் நிலம் 100 குழியும் வழங்கப்பட்டது.


கி.பி 1510 ஆம் ஆண்டு இப்படி நவகண்டம் கொடுத்துக்கொண்டவர்களுக்கு ஆறகளூர் சிவன் கோயிலில் இருந்து இரு வேளை உணவு அளிக்கப்பட்டது.இதற்காக இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நில தானமும் அளிக்கப்பட்டது.


  இந்த செய்திகள் அனைத்தும் ஆறகளூர் திருக்காமீசுர நாயனார் கோயிலில் மூன்று கல்வெட்டுகளில் உள்ளது.


  இந்த தேரைப்பற்றி 3 கல்வெட்டுகள் பேசுகின்றன. இதற்காக நவகண்டம் கொடுத்துக்கொண்ட கைக்கோளர் வீரனின் சிற்பமும் உள்ளது.


  இயற்க்கையின் பாதிப்பால் இந்த தேர் அழிந்து விட்டது.


புதிய தேர் ஒன்று இப்போது செய்யப்பட்டுள்ளது.


#ஆறகளூர்பொன்வெங்கடேசன்

Post a Comment

0Comments
Post a Comment (0)