பனைப்பாக்கம் சின்னையா முதலியார்

0

 சின்னையா முதலியார் - கி.

(1910)

தொண்டை வளநாட்டில் பனைப்பாக்கம் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் கிருட்டிணப்ப முதலியார் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர். @LDIT. நாராயண முதலியார் என்பவரிடங் கல்வி கற்றார். "வணிகவஞ்சி விலாசம்" என்னும் நாடகம் இவரால் இயற்றப் பெற்றிருக்கிறது. நூலைப்பாராட்டி வித்துவான் சிவப்பிரகாசையர், பாலூர் வேலுத் தேசிகர் எல்லப்ப முதலியோர் என்போர் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர். பின்வருங் காப்புச் செய்யுள் வணிகவஞ்சி விலாசம் எதுபற்றிப் பாடப்பட்டதென்பதை விளக்குகிறது:


" மருவளர் கடுக்கைசூடி மான்மியம் இயம்பா நிற்கும் திருவிளை யாடல் தன்னில் செப்பிய வன்னி கூவம் பொருவறும் இலிங்கம் மூன்றும் புகரற வரவ ழைத்த பெருகதை விலாசஞ் செய்யப்பேழ்கய முகவன் காப்பே"


குணசீலி தாலாட்டல்


கண்ணேயென் கண்மணியே கற்பகமே கற்கண்டே


பண்ணே பசுங்கிளியே பைந்தொடியே கண்வளராய்


(ग)


நந்தா மணிவிளக்கே நாயகமே நறுந்தேனே


சிந்தா குலந்தீர்த்த செந்திருவே கண்வளராய்


(ग)


ஆரா அமுதேஎன் அறிவுள்ள செந்தேனே


தீராத பெண்கலியைத் தீர்த்தவளே கண்வளராய் ()


தாரார் தனபதிக்குத் தாலைச் சிவனருளால்


பேராக வந்துதித்த பெண்ணரசே சுண்வளராய்


()


இவர் ‘ஆலடி விநாயகர் பதிகம்' என்னும் நூலும் பாடியுள்ளார்

Post a Comment

0Comments
Post a Comment (0)