செங்குந்த கைக்கோள முதலியார் சமூக வணிகம் மற்றும் கலாச்சார கட்டமைப்பில் அந்த கட்டமைப்பை உயிர்ப்புடன் வைத்துருக்க வைக்கப்பட்ட மக்களின் பெயர்: நாட்டு கட்டாத நாயனார் அல்லது பொன்னம்பலத்தார். பேச்சு வழக்கில் நாட்டுகிட்டான் என்பர். இவர்களும் செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
செங்குந்த கைக்கோள முதலியார் மக்கள் தங்கள் ஆழ்ந்த பகுதிகளை 72 நாடாக(தற்போதைய மாவட்டம் போல்) பிரித்து ஒவ்வொரு நாட்டின் கீழும் 18 முதல் 30 கிராமங்கள் இருப்பது போன்று விர்வாகம் செய்தனர். தற்போது உள்ள மாவட்ட நீதிமன்றம் உயர்நீதிமன்றம் போல் கிராம செங்குந்தர் நாட்டாமை தீர்ப்பில் திருப்தி அடையாதவர்கள் நாட்டு நாட்டாமை சபைக்கு செல்வர். அங்கும் பிடிக்காதவர்கள் காஞ்சிபுரம் மகாநாடு செங்குந்தர் ஆண்டவர் நாட்டாமை சபைக்கு செல்வர்.
இந்த காஞ்சிபுரம் செங்குந்தர் ஆண்டவர் மகாநாடு நாட்டாமையின் நேரடி கீழே வேலைபார்த்தவர்கள் தான் இந்த நாட்டுகிட்டான்
இவர்களுக்கு வேலை எப்போதும் ஒரு ஊரில் இருக்கலமாட்டார்கள். செங்குந்தர்கள் வாழும் ஒவ்வொரு கிராமம் நடக்க சென்று. ஆண்டவர் மகாநதி நாட்டாமையின் உத்தரவுகளை நிறைவேற்றுவது, ஒவ்வொரு ஊர் செங்குந்தர்களுக்கு பெரிய பிரச்சனை என்றால் அதை ஆண்டவர் நாட்டமையிடம் தகவல் சொல்லி அந்த பிரச்சனையை தீர்ப்பது. செங்குந்தர் வரலாறு சொல்லும் ஈட்டி எழுபது, வீரநாராயண விஜயம் பிரசங்கம் செய்வது, கோவில் உரிமைகளை நிலைநாட்டுவது, தமிழ் கல்வி கற்று கொடுப்பது, செங்குந்தர் செய்யும் நெசவு ஜவுளி ரகங்களுக்கு ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு order வாங்கித்தடுவது, ஏற்றுமதி ரகங்களை பாதுகாப்புடன் துறைமுகம் எடுத்து செல்வது, நாட்டாமை சபைக்கு வரி வசூல் செய்வது போன்ற பல வேலைகளை தன்னலம் கருதாது செய்து வந்தனர்.
மன்னர்காலங்களில் அதிக வருவாய் தரும் தொழில் ஜவுளி ஏற்றுமதிக்கான இருந்தது. அதை திறம்பட செய்த செங்குந்தர்கள் பிறரை விட வசதியாக வாழ்ந்தனர் இதற்கு பெரிதும் உதவியாக இருந்தது இந்த நாட்டுகிட்டான் தான்.
ஐரோபியர்கள் east india company ஆரம்பித்து நாடு பிடிக்கும் முன் அவர்கள் இங்க வருவதற்கு காரணம் இங்க இருந்த தரமான ஜவுளி ரகங்களும். குறிப்பாக தாவில் நெசவாளர்களான செங்குந்தர் தயாரிக்கும் ரகங்களை பெறுவதற்கு முதன் முதலில் இந்தியாவிலேயே த்யாமில் நாடு கடலோரத்துக்கு தான் வந்தனர்.
கல்வெட்டுகளை பார்க்கும் போது ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்கலும் செங்குந்தர்கள் செய்து உள்ளனர் அதன் ஒவ்வொன்றுக்கும் லாபத்திற்கு ஏற்றவாறு வரியும் கட்டி உள்ளனர். உதாரணமாக தறிக்கு வரி, நூல் தயாரிப்பதற்கு வரி, பாவு போடும் பாவேடு வேலை செய்பவர்களுக்கு வரி, சாயம் போடுவதற்கு வரி, அதை விடுப்பது ஏற்றுமதி செய்வதற்கு தனி வரி. இது அனைத்துக்கும் உறுதுணையாக இருந்தவர்கள் நாட்டுகிட்டான்.
தற்போது தொழில் செய்வது போல் அந்த காலத்தில் தொழில் செய்வது சுலபம் கிடையாது. வழிபரி, கொலை கொள்ளை அதிகமாக இருக்கும் அதனால் செங்குந்தர் நெசவுக்கு ஜவுளி தொழிலுக்கு அதை இன்னொரு துறைமுகத்துக்கு எடுத்துப்செல்வதட்கு எல்லாம் இந்த நாட்டு கிட்டான் உதவி செய்து வந்தனர்.
இன்னைக்கு இருக்கும் காலத்தில் கூட வெளிநாட்டு order களை ஜவுளி தொழில் வாங்குவது கடினம். ஆனால் அந்த மாலத்தில் நாட்டு கிட்டான் செங்குந்தர் உதவியோடு செங்குந்தர் வெளிநாட்டு ஆர்டர்களை பெற்று பெறும் செல்வந்தர்களாக இருந்தர். இதனால் தான் கல்வெட்டுகளை பார்கும் போது இவ்ளோ காசு வைத்திருந்த செங்குந்தர் கள் அதிகமாக கோவில் தானம் செய்து உள்ளனர். விலை அதிகமான இருந்த கடலோர உப்பளங்களை வைத்து இருந்தனர். குறிப்பாக உடையார்குடி சிவன் கோவிலுக்கு கிராமத்திலுள்ள செங்குந்த கைக்கோளர்கள், தங்கத்தால் செயல்பட்ட ஒரு குடைக்கம்பை வடிவமைத்து, அதில் 19,908 முத்துக்கள் பதித்து, கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கினர்கள்
1 கலஞ்சு என்பது சுமார் 4.4 கிராம் தங்கத்திற்கு சமம்.
உயர்தர முத்துக்கள் ஒவ்வொன்றும் 0.5 முதல் 2 கலஞ்சு மதிப்புடையவை.
மொத்த காணிக்கை மதிப்பு 30,000 முதல் 40,000 கலஞ்சுகள் வரையிலானதாக மதிக்கப்படுகிறது.
இன்றைய மதிப்பீட்டில், இது சுமார் 172 கிலோ தங்கத்திற்கு ஒப்பானது, அதாவது ரூ 110 கோடியை நெருங்கும் மதிப்புடைய காணிக்கை.
இதேபோன்ற காணிக்கைகளுடனான ஒப்பீடு:
ராஜராஜ சோழன் மன்னர்– 13,000 முத்துக்கள் (திருவையாறு கோவிலுக்காக கொடுத்து உள்ளார்)
சோழி ராணி பஞ்சவன் மாதேவி – சுமார் 10, 000 முத்துக்கள்
உடையார்குடி கைக்கோளர்கள் – 19,908 முத்துக்கள்
அதாவது மன்னர்களை விட அதிகமாக கோவிலுக்கு தாபம் செய்த உடையார்குடி செங்குந்த முதலியார்கள்
இது வரை அறியப்பட்ட மிகப்பெரிய முத்துக் காணிக்கையாகும். மேலும், இது அரசு அல்லாத ஒரு சமூகத்தினரால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அளவு செல்வாக்குடன் இருந்த செங்குந்தர் சமூகத்தின் உயிர்நாடியாக இந்த நாட்டுகிட்டான் இருந்தனர்.
மேலும் சூரசம்ஹார போரில் வீரபாகு செங்குந்த நவவீரர்கள், சூரபத்மனின் படை தளபதியான 100 அடி உயரம் இருந்த வஜ்ரவாகு வை வீழ்த்தி அவனது முதுகெலும்பில் ஏறி வீழ்த்திய நுட்பமான போர் யுத்தி காளைகளை செய்யத் தெரிந்தவர்கள் இந்த நாட்டு நாட்டுகிட்டான்கள்
அதாவது செங்குந்தர் வாழும் பொருட்களுக்கு சென்று கோவில் கோபுரம் மேல் 72 அடி உயர கம்பம் நாட்டு அதில் இந்த போர் காளையை செய்து காட்டுவர். அது செய்யும் போது உறுதி களையான ஒரு குழந்தையை 72 அடி உச்சிக்கு கூட்டி சென்று மேலே தூக்கி போற்றி பிடித்து செய்து காட்டுவார்கள்.
இருந்து வரை சூரசம்ஹார திருவிழாவில் ஒருசில ஊர் செங்குந்தர்கள் இந்த 72 கம்பம் நாட்டு இந்த கலையை சிறிது அளவு செய்து காட்டுவார்கள்.
இறுதியாக நாம் சொல்லவருவது இந்த நாட்டு கிட்டான் தான் நம் செங்குந்தர் சமூகத்தின் கட்டுக்கோப்புடன், வரலாறு சொல்லி கொடுத்து, ஜவுளி தொழிலுக்கு உதவியாக இருந்து, தமிழ் காற்று கொடுத்து(இதனால் தான் இன்று வரை அதிக தமிழ் ஆசிரியர்களை கொண்ட சமூகம் நம் சமூகம்) நம் சமூகத்தை பாதுகாத்தனர்.
ஆனால் இன்று நாட்டு கிட்டான்/ காஞ்சிபுரம் செங்குந்தர் மகாநாடு ஆண்டவர் நாட்டாமை சபை முற்றிலும் அழிந்துவிட்டது.
புகழ் பெற்ற சேவூர் சித்தர் முத்துகுமாரசாமி ஒரு நாட்டு கிட்டான் வகை செங்குந்தர் தான்.
************
கைகோளர்கள் செங்குந்த மகா சபை அல்லது செங்குந்தர்கள் காஞ்சிபுரத்தில் வசிக்கும் தலைவர் அல்லது மகாநாட்டனின் அதிகாரத்தை ஒப்புக்கொள்கிறார்கள் , அவர் முந்தைய நாட்களில் செங்குந்தர்கள் பெரும்பான்மையாகக் கூடிய கிராமங்களில் பயணம் செய்து பரிசுகளைப் பெற்று சாதி தகராறுகளைத் தீர்த்து வைத்தார் . "முடிவு ஏற்றுக்கொள்ளப்படாத இடங்களில் மூங்கில் கம்பம் நடுவதற்கான ஒரு விழாவின் செலவுகளை அவர் பயனற்ற நெசவாளர்கள் மீது சுமத்துவார். இந்தப் பதவியின் மேலிருந்து, மகாநாட்டன் தனது முடிவை அறிவித்தார், இது தொடர்பு விலக்கின் வலியால் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியிருந்தது ". கைகோளர்களுடன் நாட்டுகட்டாத நைன்மார்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகை பிச்சைக்காரர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். "இந்த பெயர் நைன்மர்களைக் குறிக்கிறது, அவர்கள் சாதனைகளைச் செய்யும்போது, தங்கள் மூங்கில் கம்பங்களை தரையில் நடுவதற்குப் பதிலாக ஒரு கோவிலின் கோபுரத்தில் பொருத்துகிறார்கள். அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும், மேலும் சாதி தகராறுக்கு தீர்வு தேவைப்பட்டால், ஒரு சபைக் கூட்டம் கூட்டப்பட்டது, அதில் அவர்கள் காஞ்சீபுரத்தில் உள்ள மகாநாட்டன், தலைமை கைகோளனின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். தகராறு சிக்கலானதாக இருந்தால், அவர்கள் அனைத்து செங்குந்தர் வீடுகளுக்கும் சென்று, தறியில் இருக்கும் துணியில் சிவப்பு அடையாளத்தை இட வேண்டும், இது தலைவனின் கட்டளைப்படி செய்யப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு, கைகோளர்கள் தகராறு தீர்க்கப்படும் வரை தங்கள் வேலையைத் தொடர முடியாது. விசாரணை நாளில், இந்த நைன்மர்கள் ஒரு கோபுரத்தை அமைத்தனர், அவர்களின் மூங்கில் கம்பத்தில் 72 இடை முனைகள் இருந்தன, அதில் சமூகம் பிரிக்கப்பட்டது. காமாட்சி அம்மன் தெய்வம், காமாட்சி அம்மன். செங்குந்தர்கள் வழிபட்டனர், நைன்மார்கள் கம்பத்தில் ஏறி பல்வேறு சாதனைகளைச் செய்தனர். வீரபாகுவின் வழித்தோன்றல்கள் என்று கூறும் நாட்டுகட்டட நைன்மார்களின் தலைமையகம் காஞ்சீபுரம் என்று கூறப்படுகிறது. அவர்கள் கைகோலன்களை விட தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், அவர்களுடன் அவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.
தாரமங்கலம் காட்டுக்கார கூட்டம் பங்காளிகள் சிவகுரு. அர்த்தனாரி முதலியாரின் பொன்னம்பலத்தார் நாட்டு கிட்டான் செங்குந்தர் பற்றிய பாடல்கள் (அவரின் கையெழுத்துப் பிரதியிலிருந்து தொகுக்கபட்டது)
சேலம் மாவட்டம் தாரமங்கலம் சன்மார்க்க சீலர் சிவகுரு என்கிற காட்டுக்கார அர்த்தனாரி முதலியார் அவர்கள் உள்ளுரில் நடைபெறும், அருள்மிகு மாரியம்மன் பண்டிகையின் போது பழைய நம் குல வரலாற்றை நினைவுகூறும் வகையில் "பொன்னம்பலத்தார்" வேடம் பூண்டு செங்குந்தர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளை பற்றிய பாடல்களை முக்கிய வீதிகளின் வழியே பாடிக்கொண்டு, இறுதியில் கோயிலை அடைந்து பல மாயாஜல வித்தைகளை செய்து மக்களை மகிழ்விப்பார். அவர் பாடிய அக்காலத்து பாடல்களின் தொகுப்பு சிலவற்றை கீழே தரப்பட்டுள்ளது.
1. ஈசர் கலியுகந்தனில் சீமையிலிருந்து சென்னைப்பட்டிணத்தில் சீமை நூல் வந்திறங்கும் செட்டி, கோமிட்டிகள் கடிதாசி எழுதியே அது செவ்வாய்ப்பேட்டையில் வந்திறங்கும். சிவனுடைய கோத்திரம் செங்குந்தமுதலியார் சில வேலைகள் செய்வதற்கு சேலமது போயுமே சிலவுக்கு தகுந்த சீமை நூல் எடுத்து வந்து அதை அவசரமாகவே தட்டி பிழிந்து அறுபது முழ பாவுகள் நீட்டி அஞ்சாமல் தோய்ந்து வந்தார். அதை ஆறு முழ, ஏழு முழ அளவில் புனைந்துமே அன்றாடம் ஒரு சோமனம் தப்பாமல் நெய்து வந்தார். முப்பத்தி ரெண்டு குஞ்சத்தில் மூன்று முழ அகலத்தில் பெரிய அஞ்சி, சிறிய அஞ்சி ஜரிகைகள் வைத்துமே வெகுவி
நோதமாய் நெய்து வந்தார். பட்டுத் தறிகளும் பாலர்கள் நெய்கிறார்கள் என்று சொல்லி அதை
| நாட்டு கிட்டான் கம்பம் ஏறும் அழைப்பு |
| செங்குந்தர் நாட்டாண்மை சபை நாட்டுகிட்டான் கல்வெட்டு |




