பழனியும் செங்குந்த முதலியார் மரபினரும்

0

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு போர்படைத் தளபதிகளாக இருந்த வீரபாகு உள்ளிட்டவை வீரர்களின் வம்சத்தில் வந்தவர்கள் செங்குந்தர் கைக்கோள முதலியார் என்பதால் பொதுவாக முருகன் கோவிலில் இவர்களுக்கு அதிக மரியாதை இருக்கும்.




செங்குந்தர் தர்ம பரிபாலனசபை, பழனி மலை அடிவாரம் நமக்கு பழனி கோவிலில் உள்ள உரிமைகள்👇

1. சூரசம்ஹாரம்:- முன் வழக்கம்போல் உள்ளூர் செங்குந்தர் உறவின் முறையார்கள் முருகனுக்கு சீர்பாதம் சேவை செய்து சூரசம்ஹாரம் செய்வது. செங்குந்தர் நிர்வாக காரியஸ்தர் மடத்து பண்டாரம் இவர்களுக்கும் பரிவட்டங்கள் வழங்குவது.

2. தைப்பூசக் கொடியேற்றம்:- வழக்கம்போல் இடும்பன்பாளையம் பட்டக்காரர் முத்துக்காளி தரகன் முதலியார் வகையறாக்கள் தலைமையில் கொடிசேலை செய்து யானைமீது வந்து கோவில் நிர்வாகத்திடம் கொடிசீலை கொடுப்பது மற்றும் தைப்பூச முதல் நாள் அன்று தலைமையேற்று கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கிவைப்பது. உள்ளூர் (பழனி) பெரியதனம் மடத்துப் பண்டாரத்திற்கும் பரிவட்டங்கள் வழங்குவது. 

3. பங்குனி உத்திரம் (கொடிகட்டும் உற்சவம்)!- நீண்டநாளாய் கொடியேற்றம் நின்றுவிட்டதால் இந்து- மத பரிபாலன போர்டுக்கு அப்பீல்செய்து மாமூல் வழக்கங்களை மீண்டும் கொண்டுவர முயற்சித்தல். 

4. பங்குனி உத்திரம் தண்ணீர் பந்தல் தர்மம்:- இந்த தர்மம் தொன்றுதொட்டு ஆயக்குடி உறவின் முறையார்களால் பழனி அடிவாரம் 16-வது வார்டு, 73,74.& 75-நிர் தண்ணீர் பந்தல் மடத்தில் நடத் தப்பட்டு வருகிறது. உற்சவம் முடிந்ததும் ஷயார்- களால் அன்னதானமும் நடைபெறும


பழனியில் நம் சமூகத்துக்கு சொந்தமான கட்டிடங்கள்:

1. செங்குந்தர் முத்துக்குமாரசாமி மண்டபம்:- பழனி அடிவாரம் சன்- னத்தித் தெரு, வார்டு 15. D-196 / S No. 940 திர். உள்ள கட்டிடம், கடைகள் வகையரு. 

2. செங்குந்தர் தண்ணீர் பந்தல் மடம்:- பழனி அடிவாரம், சன்ன தித்தெரு, வார்டு நிர்-16, டோர் நிர் 73, 74 & 75/S No. 897 மூன்று நம்பர்களடங்கிய சுடைகள் கட்டிடம் வகையரு

3. செங்குந்தர் மேலத் தெரு மடம்:- பழனிடவுனில் வார்டு நிர்-1 டோர் நிர்-7 உள்ள "பழைய' மடமும் காலியிடமும் 

4. கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோவில் சன்னதி:- பழனிமலையின் மத்- திய பாகத்தில் உள்ள கற்பக்கிரஹமும், முன்கல் மண்டபமும் நம் சமூகத்துக்கு சொந்தமானது. 

5. பழனி மலையின் மேலுள்ள அறைக்கோவில் நவவீரபாகுதேவர் சன்னிதானம்:- சூரசம்ஹாரத்தன்று செங்குந்தர் குல வீரபாகு தேவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும் செங்குந்தர் கல்மண்டபம், 

6. திருவாவினன்குடி கோயில் கொடிமரம்:- துவஜாரோகணக் கொடிமரமும், யாகசாலையும். 

7. பெரியநாயகி அம்மன் கொடிகட்டுமண்டம்:- பழனிடவுன் வார்டு நிர்-1 ரத வீதியில் பெரிய நாயகி அமமன்கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ளது கொடி- மரமும். கல்மண்டபமும்.


இதேபோல் பழனி முருகன் கோவிலிலும் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்துக்கு முதல் மரியாதை உள்ளது. பழனியை ஆண்ட மன்னர் முத்துக்காளி தரகன் என்பவரும் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.



பழனி மன்னர் செங்குந்தர் குல முத்துகாளி தரகனாருக்கு பழனி மலையில் ஒரு சிலை உள்ளது ,

திருப்பூர் இடுவம்பாளையம் சின்ன காளியம்மன் கோவிலிலும் ஒரு சிலை உள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு 1948 ஆம் ஆண்டு 300 கிலோ எடை கொண்ட தங்க தேர் செங்குந்தர் குல சைவப்பெருவள்ளல் VVCR.முருகேச முதலியார் என்பவர் நன்கொடையாக வழங்கினார்.

சைவப்பெருவள்ளல்                VVCR.முருகேச முதலியார்:

30 ஆண்டுகள் பழனி முருகன் கோவிலுக்கு அறங்காவலராக இருந்துள்ளார். மேலும் தங்கதேர், வைரவேல், தங்கமயில் போன்றவையும்  இவர் கொடுத்த நன்கொடையே!!!

தமிழகத்தில் இந்து சமய கோவில்களில் பயன்படுத்தப்பட முதல் தங்க தேர் என்பது குறிப்பிடத்தக்கது

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 
 முன்னாள் அறங்காவலர்
   சைவப்பெருவள்ளல்  
VVCR.முருகேச முதலியார்





பழனி வரலாற்று ஆவணங்கள் நூலிலுள்ள குறிப்புகள்





 





செங்குந்தர் தர்ம பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட
செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி மண்டபம்,
பழனி அடிவாரம்



செங்குந்தர் தர்ம பரிபாலனசபைக்கு  பாத்தியப்பட்ட தண்ணீர் பந்தல் மடம்


தொன்று தொட்டு பழனி செங்குந்தர் குல முத்துக்காளி தரகன் மன்னர் வம்சத்தில் வந்தவர்களுக்கு பழனி கோவில் விழாவில் கொடிச் சேலை எடுத்து கொடிமரத்து கொடியேற்றும் உரிமை உள்ளது. (ஆதாரம் கீழே போட்டோவில் காண்க)👇🏻👇🏻


செங்குந்தர் நாட்டாண்மை, பெருதனக்காரர், பட்டக்காரர்






      

முத்துக்காளிதரகன கோத்திரம் பங்காளிகள்





  • பழனி முருகன் கோவிலில் பட்டம் கட்டும் உரிமை வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சமான செங்குந்தர்கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள  "முத்துக்காளி தரகன்" கோத்திரம் பங்காளிகளுக்கு மட்டுமே உள்ளது.
  • இந்த விழாவையொட்டி நாள்தோறும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தங்கமயில் தங்கத்துரை வெள்ளி யானை வெள்ளி ஆட்டுக்கிடா வெள்ளி காமதேனு அந்தப்புரம் என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருகிவார்கள்.




பழனி பங்குனி உத்திரம் விழா.







4ஆம் திருநாளில் செங்குந்தர் தர்மபரிபாலன சபை கட்டிய முத்துக்குமாரசுவாமி  மண்டபத்தில் செங்குந்தர் தர்மபரிபாலன சபை சார்பில் மண்டகப்படி நடைபெறும்.




செங்குந்தர் குல சைவப்பெருவள்ளல் VVCR.முருகேச முதலியார் கணபதி ராமலிங்கம் நிலையம் 7-ம் திருநாள் மண்டகப்படி


கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா மண்டகப்படி









முருகப்பெருமானானின் போர்படை தளிபதி வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சத்தின் சார்பாக  (செங்குந்தர் தர்ம பரிபாலன சபை-பழனி)
செங்குந்தர் பாத்தியப்பட்ட
 நவவீரர்கள் சன்னதியில் உள்ள வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் மற்றும் முருகப்பெருமானின் வேல் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பின்பு செங்குந்தர் பாத்தியப்பட்ட 
குராவடி குமரன் கோயில் சிறப்பு பூஜை செய்யபட்டு செங்குந்தர் தர்ம பரிபாலன சபை மரியாதை செய்யப்படுகிறது.




மற்ற முருகன் கோயில்களில் உள்ளது போலவே பழனி முருகன் கோவிலிலும் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழாவின்போது போது
முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சாவளியினரான  செங்குந்தமுதலியார் மட்டுமே நவவீரர்கள் வேடமணிந்து சூரசம்ஹாரம் செய்யும் உரிமை உள்ளது.




பழனி ஆண்டவருக்கு சாத்தப்பட்டு ஏற்றுகொண்ட முதல் காவடி 
'நமது செங்குந்தர் சமுதாய காவடி தான்.  




செங்குந்தர் தர்ம பரிபாலன சபை பதிவு எண் S.No. 32 OF 1956 அடிவாரம், பழனி

நிறுவனர்: சைவப்பெருவள்ளல்  வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் 





அறுபடை வீடு பழனி ஸ்தலத்தில் செங்குந்தர் கைக்கோளர் சமூகத்திற்கு சொந்தமான மண்டகப்படி உரிமை, மடம் மண்டபம் மற்றும் கோவில் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்காக  உருவாக்கப்பட்ட செங்குந்தர் தர்ம பரிபாலன சபை அறக்கட்டளையின்  கடமைகள் செயல்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை பற்றி கூறும் புத்தகம்.
 Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்

இந்தப் புத்தகத்தை செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவிற்கு வழங்கி உதவி செய்தவர்: திருப்பூர் பிரகாசம் முதலியார்

திருப்பூர் இடுவம்பாளையதிலுள்ள முத்துகாளி தரகன் முதலியார் சிலை

பழனி மலை பாதையில் உள்ள செங்குந்தர்  குல வையாபுரிநாட்டு பட்டகாரர் சுவாமி முத்துகாளி தரகன் முதலியார் சிலை







VVCR.முருகேச முதலியார் அவர்கள் தாய் தந்தை நினைவாக பழனியில் கட்டப்பட்ட கணபதி இராமலிங்க நிலையம் (சத்திரம்)

பழனி கணபதி இராமலிங்க நிலையத்தில் உள்ள சைவப்பெருவள்ளல் VVCR.முருகேச முதலியார் சிலை


👆🏻👆🏻👆🏻 
1930 ஆண்டு சைவப்பெருவள்ளல்
VVCR.முருகேச முதலியார் அவர்கள் தாய் தந்தை நினைவாக பழனியில் கட்டப்பட்ட கணபதி இராமலிங்கம் நிலையம் (சத்திரம்)

கட்டணம்: ரூ 20

பழனிக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்


இவர் தான் பழனி முருகன் கோவிலுக்கு தங்க தேர், வைர வேல், தங்க மயில், விஞ்சு ரயில் தானமாக செய்து கொடுத்தார், தேவஸ்தான கல்லூரி கட்ட இடம் தானமாகவும், செங்குந்தர் தர்ம பரிபாலன சபை கட்ட நிலம் தானாம் செய்தவர்.




பழனி முருகன் கோவில் யானை படிக்கட்டில் சைவப்பெருவள்ளல் 
VVCR.முருகேசமுதலியார் கட்டிய 
ஸ்ரீ சண்முக விலாஸ் மண்டபம்

 
1972 ஆண்டு கும்பாபிஷேகம் அறங்காவலர்கள் குழுவில் VVCR.முருகேசமுதலியார் அவர்களின் மகன் VVCRM.கந்தசாமிமுதலியார்.Bcom


1960 ஆண்டு கும்பாபிஷேகம் அறங்காவலர்கள் குழுவில்     
சைவப்பெருவள்ளல் VVCR.முருகேசமுதலியார்-டிரஸ்டி


பழனி மலை முருகன் திருக்கோயில் புதுச்சேரி செங்குந்தர் மரபினர் கட்டி கொடுத்த நிழல் மண்டபம்




பழனி செங்குந்தர் கந்தசஷ்டி சூரசம்ஹார மண்டகப்படி செப்பேடு

பழனி ஸ்தானீக மிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கம் கிடைத்த 1703 ஆண்டு பட்டயம்









பழனி முருகன் கோவில் செங்குந்தர் முதலியார் சமூக சூரசம்கார மண்டகப்படிக்கான 1703-ம் ஆண்டு செப்பு பட்டயத்துடன் பழனி செங்குந்தர் தர்ம பரிபாலனசபை தலைவர் திரு.S.K.C.சண்முகவேல் முதலியார், செயலாளர் திரு.A.பரமசிவம்,மாவட்ட தலைவர் திரு.V. தண்டபாணி,பழனி ஸ்தானீக மிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்களான திரு.சக்திவேல்,திரு.ஜெயன்கருப்பையா மற்றும் செங்குந்தர் பரிபாலனசபை உறுப்பினர்கள் மற்றும் செங்குந்தர் உறவின்முறையர்கள்

தினதந்தி நாளிதழ்-2023

தினமலர்-2023

காலைகதிர்-2023

தினமணி-2023

இந்த செப்பு பட்டயம் நூற்றாண்டு காலமாக பாதுகாப்பு செய்து வரலாற்றை வெளி கொண்டு வந்த பழனி ஸ்தானீக மிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்கள்  சங்கம் மற்றும்  திரு.சக்திவேல், திரு.ஜெயன் கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்  திரு.நாரயண மூர்த்தி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்


https://youtu.be/oiZLCwmchyw
              
🖕🏻🖕🏻🖕🏻
பழனி 18-ம் நூற்றாண்டு செங்குந்த முதலியார் செப்பு பட்டயம்
#கந்தசஷ்டி #சூரசம்ஹாரம்  #வீரபாகு #நவவீரர்கள்
1984 ஆம் ஆண்டு பத்திரிக்கை





👆🏻👆🏻திருமணவிழா மற்றும் தங்குமிடம் தேவைக்கு  தொடர்பு கொள்ளுங்கள்.




பழனி செங்குந்த முதலியார் பற்றி மேலும் வரலாற்று தகவல்கள், புத்தகங்கள், கல்வெட்டு, சுவடிகள் இருந்தால் புகைப்படம் அனுப்புங்கள்
செங்குந்தர் வரலாறு மீட்பு குழு
78269 80901




Post a Comment

0Comments
Post a Comment (0)