திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாவது படைவீடாகும். முருகப்பெருமான் தேவர்களை காக்க சூரபத்மனை வதம் செய்த ஊராகும். முருகப்பெருமானின் மற்ற படை வீடுகளின் திருத்தலம் மலையின் மீது இருந்தாலும் திருச்செந்தூர் திருத்தலம் கடற்கரை அமைந்துள்ளது தினச்சிறப்பாகும். இப்படி சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சத்தினரான செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தினர் பிற அறுபடை வீடு முருகன் கோயில் உள்ளது போல திருச்செந்தூர் முருகன் கோயில் பல வரலாற்று ரீதியாக தொடர்புகளை பிரபலிக்கின்றன.
திருச்செந்தூரில் 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை சங்கம் மற்றும் 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு தர்ம காரியங்களை தொடர்ந்து பாரம்பரியமாக செய்து வருகின்றன.
திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் பூர்வீக ஊர்கள்
1. திருச்செந்தூர்(தலைமை)
2. கடலையூர்,
3. எட்டயபுரம்,
4. அருப்புக்கோட்டை,
5. நாகலாபுரம்,
6. விளாத்திக்குளம்,
7. புதியம்புத்தூர்,
8. ஏரல் கீழவூர்,
9. ஏரல் மேலவூர்,
10. முக்காணி,
11. ஆத்தூர்,
12. வல்லநாடு,
13. பிரமியம்,
14. அயன்பொம்மையாபுரம்
திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் (கோத்திரம் ஐம்பெரும்கிளை) பெயர்கள்
1. மஞ்சன்
2. மாறிலான்
3. வெற்றியான்
4. பேறிலான்
5. சலிப்பிலான்
ஒரே கிளை கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அண்ணன்-தம்பி அக்கா-தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அறிவியல் காரணங்கள் என்பது அவள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது.
திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் குலதெய்வங்கள்.
1. சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில், திருச்செந்தூர்.
2. வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவவீரர்கள், திருச்செந்தூர்.
3. வெயில் உகந்த அம்மன் (வெயிலுகந்தம்மன் கோவில்), திருச்செந்தூர்.
4. பெரிய சாஸ்தா அய்யனார், சவராமங்கலம்.
5. ஸ்ரீஹரி கோவிந்த அய்யனார், ஆத்தோரங்கால்.
6. அங்காளம்மன், கருங்குளம்.
7. பாலாறு அய்யனார், புதியம்புத்தூர்.
8. சிவன் கோவில், உவரி
9. நட்டாத்தியம்மன் கோவில், ஏரல்
10. ராசாகோவில், வல்லநாடு
11. பூரண சமேத ஸ்ரீ மேகமுடையார் சாஸ்தா,வல்லநாடு
12. அருள்மிகு திட்டுமுட்டு சாஸ்தா,ஆத்தூர்,முக்காணி
திருச்செந்தூர் முருகப்பெருமானின் கோவிலில் செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் உரிமைகள்:
1.திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் ஆவணி மற்றும் மாசி திருவிழாவில் முதல் நாள் திருவிழா கொடியேற்றம் திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த முதலியார் சமூகத்தினர் நெய்து உபயமாக கொடுக்கும் கொடிசீலை(கொடிப்பட்டத்தை) திருச்செந்தூர் முருகன் கோவில் கொடிமரத்தில் ஏற்றினால் தான் இக்கோவிலில் விழாவே தொடங்கும். அதேபோல் கொடியேற்றம் அன்று கொடி மர பூஜையும் 14 நாட்டு செங்குந்த முதலியார் மரபினர் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
2. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் ஆவணி,மாசி மாத திருவிழாவில் 12-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா மண்டகப்படி செங்குந்தர் மரபினர் உடையது. 14 நாட்டு செங்குந்த முதலியார் 12-ம் திருவிழா மண்டபம் சுவாமி உற்சவர் அபிஷேக பூஜைகள் நடத்தி வைத்து கோவில் திருவிழாவின் கணக்கு வழக்குகளை சரி பார்த்து முருகப்பெருமானின் உற்சவர் கோவிலுக்குள் அனுப்பி வைப்பார்கள்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான் நரகாசுரன் என்ற அசுரனை சூரசம்ஹாரம் செய்ததால் தனது போர்ப்படையை தலைமையேற்று நடத்திய வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் விழா தொடங்கும் போதும்,விழா முடிவின் போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற முருகப்பெருமானின் ஆணைப்படி திருவிழாவில் முதல் நாள்,12-ம் நாள் மண்டகப்படி செங்குந்தர் மரபினர் உடையது என்று புராணங்கள் கூறுகிறது.
3.ஆவணி/மாசி திருவிழா திருநெல்வேலி செங்குந்தர் வடக்கு வம்சத்தினர் சார்பாக மடம் முன்பு 7-ம் நாள் (சிவப்பு சாத்தி) மண்டகப்படி நடைபெறுகிறது.
4.திருநெல்வேலி செங்குந்தர் வடக்குவம்சத்தினர் பாத்தியப்பட்ட அருள்மிகு அகத்தியர் ஆலயம் திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.
5.திருநெல்வேலி(நெல்லை) செங்குந்தர் பக்தமுடையார் வம்சத்தினர் மடம் சார்பாக 8-ம் நாள் (பச்சை சாத்தி) மண்டகப்படி நடைபெறுகிறது.
5.திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் கடைசி குலகுரு: தாராபுரம் பிரமியம் ஸ்ரீலஸ்ரீ ஏகானந்த சுவாமிகள் & காஞ்சிபுரம் கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம். குலகுரு முறை தற்போது 14 நாட்டு செங்குந்தர் மரபு மத்தியில் வழக்கத்தில் இல்லை
வெயில் உகந்த அம்மன் என்பதை வேலுகந்த அம்மன் என்றும் சொல்வார்கள்.முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு சென்றபோது, அம்பாள் தனது சக்தியை வேலாக மாற்றி அவரிடம்கொடுத்தாள். வேலனுக்கு உகந்த வேலைக் கொடுத்ததால் அவள் வேலுகந்த அம்மன் ஆனாள். இதுவே வெயிலுகந்த அம்மனாக திரிந்தது என்பர்.
திருச்செந்தூர் நகரில் 14 நாட்டு செங்குந்த முதலியார் மரபினர் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட செங்குந்தர் என்று பல மண்டபங்கள் மற்றும் மடங்கள உள்ளன.