ஈரோடு ஆர்.ஏ.என். முத்துசாமி முதலியார்

0



                      (3.09.1913 - 13.01.2000)   
  
பிறப்பு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் ராய்க்காபாளையம் என்ற ஊரில் செங்குந்தர் மரபில் பிறந்தார் கல்விதந்தை செவாலியர் டாக்டர்.RAN. முத்துசாமி முதலியார்.  

மக்கள் பணிகள்:
நெசவு தொழில்அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நெசவுக்கென்றே தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்து அதில் படித்த பல்லாயிரம் மாணவர்கள் குடும்பங்கள் வாழ்க்கை தரம் உயர காரணமானவர்.

கல்வி தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவரது தலைமையில் முதலமைச்சர் பக்தவாத்சலம் அவர்களால் திறக்கப்பட்ட கவுந்தப்பாடி சுதேசி ஜவுளி வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்கபட்டு அதன்மூலம் கலைமகள் கல்வி நிலையம் என்ற பள்ளியை ஆரம்பித்தார்.

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு 1.5 ஏக்கர் இடம் கொடுத்தார்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்க பெரும் நன்கொடை வழங்கினார்.

புயல் வெள்ளம் நிவாரணம் யுத்தகால உதவி என்று பல்வேறு சமுதாய பணிகளில் இன்றும் ஈடுபட்டு வருகிறது.

ஈரோடு கலைக்கல்லூரி, காமாட்சி அம்மன் தொழில்பயிற்சி நிறுவனம், பாலிடெக்னீக் கல்லூரி ஆகியவை கொண்ட முதலியார் கல்வி அறக்கட்டளையினை நிறுவினார்.

வகித்த பதவிகள்:
1950இல் கவுந்தப்பாடி சுதேசி வர்த்தகர் சங்கம் தலைவர்.

கவுந்தப்பாடி கலைமகள் கல்வி நிலையம் நிறுவனர் தலைவர் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அதற்குப் பின்பு ஈரோடு நூல் வியாபாரிகள் சங்கம் ஜவுளி மார்க்கெட் சங்கம் மற்றும் பல பொதுவான பதவிகள் வகித்தார்.

நூல் வியாபாரம் RANM.சிட்பண்ட்ஸ் அலுவலகம் ஈஸ்வரன் கோவில் வீதி ஈரோடு மாநகரில் உள்ளது அதன் ஸ்தாபகர் இவரே.

ஈரோடு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத்தலைவர் .



*ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் முதல் தலைவரும், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான 'கல்விதந்தை செவாலியர்'  'அருள் நெறி புரவலர்' டாக்டர்.R.A.N.முத்துசாமி முதலியார் அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ராய்க்காபாளையம் என்ற ஊரில் செங்குந்தர் மரபில் பிறந்தார். நெசவுத்தொழில் அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நெசவுக்கென்றே தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்து அதில் படித்த பல்லாயிரம் மாணவர்கள் குடும்பங்கள் வாழ்க்கை தரம் உயர காரணமானவர். இவர் கல்வி தந்தை என்று அனைவராலும்  அழைக்கப்பட்டார். அவரது தலைமையில் முதலமைச்சர் பக்தவாத்சலம் அவர்களால் திறக்கப்பட்ட கவுந்தப்பாடி சுதேசி ஜவுளி வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு அதன்மூலம் கலைமகள் கல்வி நிலையம் என்ற பள்ளியை ஆரம்பித்தார். ஈரோடு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு 1.5 ஏக்கர் இடம் கொடுத்தார். கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்க பெரும் நன்கொடை வழங்கினார். ஈரோடு கலைக்கல்லூரி, காமாட்சி அம்மன் தொழில் பயிற்சி நிறுவனம், பாலிடெக்னீக் கல்லூரி ஆகியவை கொண்ட முதலியார் கல்வி அறக்கட்டளையினை நிறுவினார்.*
         *1950இல் கவுந்தப்பாடி சுதேசி வர்த்தகர் சங்கம் தலைவரானார். ஈரோடு நூல் வியாபாரிகள் சங்கம், ஜவுளி மார்க்கெட் சங்கம் மற்றும் பல பொதுவான பதவிகள் வகித்தார்.*                     
           *சென்னை வள்ளல் சபாபதி கட்டட அமைப்பு பொறுப்புகளை பெரியார் மாவட்டத் தலைவர் பெரியவர் Dr.R.A.N.முத்துசாசாமி முதலியார் அவர்களிடம் மாநிலச் சங்கம் கொடுத்தது. இதை இன்முகத்துடன் பெற்று கொண்டு செயலில் இறங்கி அன்றைய தென்னாற்காடு, தஞ்சை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, இராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து மாநில சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.*
            *1990இல் ஈரோட்டில் முதல் மாவட்ட மாநாடு இவரது தலைமையில் நடைபெற்றது. இவர் நம் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு எண்ணிலடங்காதவை, அந்த கல்வி தந்தையின் நினைவுநாளான இன்று(13.01.25) திங்கள்கிழமை அனைத்து செங்குந்தர் சொந்தங்களும் Dr.R.A.N.முத்துசாசாமி முதலியார் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்...*

*இப்படிக்கு*
*ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்.*


இவரது குல தெய்வமான
செங்குந்த கைக்கோளர் மரபு, குழந்தைசெட்டி முதலி கோத்திரம் பங்காளிகள்
காமாட்சி அம்மன் கோவில் நிறுவன தலைவர் என பல நற்காரியங்களை செய்த பெரும் தலைவர்.









இவரின் 
கூட்டம் பெயர்: குழந்தைசெட்டி முதலி கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் காமாட்சியம்மன் கோவில்,  கவுந்தப்பாடி.
குலகுரு: இறையமங்கலம் இம்முடி பரஞ்சோதி குருக்கள் மடம்.


செங்குந்தர் சமுதாயத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அருள்நெறி புலவர் செவாலியர் சர் கல்விதந்தை டாக்டர்.ஆர் ஏ என் முத்துசாமி முதலியார் வாழ்க்கை வரலாறு புத்தகம்

👇🏻👇🏻

Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்



அருள்நெறி புலவர் செவாலியர் சர் டாக்டர்.ஆர்.ஏ.என்.முத்துசாமி முதலியார் முத்து விழா மலர்

👇🏻👇🏻
Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்


ஆர்.ஏ.என்.முத்துசாமி முதலியார் வாழ்கை வரலாறு புத்தகத்தை ஸ்கேன் செய்து செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவிற்கு வழங்கி உதவி செய்தவர்: 
திரு பூ.விஜயபார்த்திபன்,
துணைத்தலைவர் முதலியார் பேரவை கவுந்தப்பாடி வட்டாரம், 
ஈரோடு மாவட்டம்.






Post a Comment

0Comments
Post a Comment (0)