ஈரோடு கல்வித்தந்தை எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் ex Chairman

1

செங்குந்தர் கைக்கோள முதலியார் 

 ⚜️குலத் தோன்றல்⚜️

ஈரோடு கல்விதந்தை, கொங்கு மண்டலத்தில் பெண்கள் கல்விக்காக பாடப்பட்டவர், ஈரோடு முன்னாள் நகர்மன்ற தலைவர், சுதந்திர போராட்ட வீரர். OC பிரிவில் இருந்த செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை BC பட்டியலுக்கு கொண்டு வந்தவர்.

                     

(25.12.1898 - 14.05.1973)

ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார்  அல்லது  ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தரனார்  என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தவர். ஈரோடு வட்டாரத்தில் பெண்களின் கல்விக்காக பாடப்பட்டவர். ஈரோடு நகர மக்கள் இவரை "ஐயா" என்று அன்போடு அழைத்தனர்.

வாழ்க்கைக் குறிப்பு
மீனாட்சிசுந்தர முதலியார் 1898 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் செங்குந்த கைக்கோளர் மரபு, வடுவன் கோத்திரம் பங்காளிகள் சீரங்க முதலியார் - செல்லம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதில் இருந்து கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் இளங்கலை இலக்கியம் வரை படித்தார்.



1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சித் தலைவராகப் பணியாற்றிய பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.
பெண்கள் கல்வி வளர்ச்சியில்தான் சமூகத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை உணர்ந்த இவர், தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையம் என்ற மகளிர் பள்ளியைத் துவக்கி லட்சக்கணக்கான பெண்கள் கல்வியில் உயர்நிலை பெற காரணமானார்.

ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து துவக்கினார். இன்று செங்குந்தர் கல்விக்கழகத்தால் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1972 ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட "கலைமகள் கல்வி நிலையம்" நிர்வாகக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கி, இவர் உருவாக்கிய கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு பொது மக்களுக்கு சொந்தம் என எழுதி வைத்து அர்ப்பணித்தார்.

வரலாற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஈரோட்டில் கலைமகள் பள்ளி வளாகத்தில் "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்" என்ற பெயரிலான அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.


ஆசிரியர் பணி

ஐயா அவர்கள் ஆசிரியர் பணிக்கின்று பிறந்தவர் ஆவார். 1921 ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரி பி.ஏ.பட்டம் பெற்றார். 1924 முதல் 1926 வரை பயிற்சி ஆசிரியராக ஈரோடு மசான உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். ஐயா 1927 ஆம் ஆண்டு எல்.டி.பட்டம் பெற்று 1928 முதல் 1932 வரை சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்பு ஈரோடு மசான உயர்நிலை ஆசிரியராகவும் இருந்தார். நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றினார்.


ஈரோடு ஐக்கிய ஆசிரியர் சங்கம்

தோற்றம்: 


1928-ல் ஈரோடு ஆசிரியர் ஐக்கிய சங்கம் நிறுவினர். இச்சங்கத்தின் ஆதரவில் பல கருத்தரங்குகள், ஆய்வு அரங்குகள் நடைபெற இடவசதி மற்றும் பணி வசதி அளித்து ஆசிரியர் ஊக்கப்படுத்தியுள்ளார்.

சங்கத்திற்கு நிலையான கட்டிடம் வேண்டும் என்று நினைத்து ஈரோடு திருநகர் காலனி 4720 சதுர அடியில் குறைந்த விலையில் இடம் வாங்கி தனது சொந்த பணம் ரூபாய் 3,500 அளித்து மூன்று மாதங்களுக்கு கட்டிடம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.

மேலும் இந்நகரில் ஆசிரியர் குடியிருப்பு ஏற்படுத்தி கொடுத்ததில் அய்யா சேவையும் பெரிதும் போற்றத்தக்கது.

இந்நகரில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் என இருபால் வேறுபாடின்றி தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து தீர்வு காண இச்சங்கம் பெரிதும் பயன்படுகிறது.

அனைத்து உரிய ஆசிரியர்களாகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து தென்னிந்தியாவிலேயே இந்நிலை என்ற சிறந்த முறையில் இச்சங்கம் பணியாற்றத் துணையாக விளங்கினார்.


வணிகத்துறை


1942 ல் ஐயா அவர்கள் நூல் மற்றும் ஜவுளி தொழிலை மேற்கொண்டார். ஈரோட்டிலும் புதுக்கோட்டையிலும் கடைகளை தொடங்கினார். 15 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக நடத்தினார். நூல், ஜவுளி கட்டுப்பாடு அரசாங்கத்தினால் இருந்த காலத்தில் நூல் வழங்குவதற்கு பொறுப்பாளராக (நூலுக்கு மாநில வேட்பாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வளம் பலவும் தந்த வணிகத்துறையை கல்வி வளர்ச்சியின் பொருட்டு கைவிட்டார்.



கல்வித்துறை நிபுணர்


தமிழக ஆசிரியர்கள் ஐய்யாவின் கல்விப் பணியை நன்கு அறிந்து 1947 - ல் தமிழ்நாடு ஆசிரியர் சம்மேளத் தலைவராக தேர்வாக்கி ஆசிரியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். செய்தனர். அப்போதைய கல்வி அமைச்சர் உயர்திரு.அவிநாசிலிங்க செட்டியார் அவர்களிடம் பேசி ஆசிரியர் ஊதிய உயர்வு ஐயா வழி வகுத்தார்.

தமிழக அரசு 1955 டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு 6 உறுப்பினர்களை ஐயாவையும் உறுப்பினராக்கியது. சார்பில் இந்தியா முழுவதும் சென்று டாக்டர் ஜாகிர் உசேன்,காகா கர்லேல்கர், அரிய நாயகம் ஆகியோருடன் கருத்துக்களை பறிமாறிக் கொண்டார். ஐயா அவர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர் நலனுக்காகவும், ஆரம்ப பள்ளி முன்னேற்றத்திற்காகவும் 64 சிபாரிசுகளை தமிழக அரசு அனுப்பிய பெருமை ஐயாவிற்கு உண்டு.

தமிழக அரசு தனியார் பள்ளிகள் பணியாற்றும் ஆசிரியர்கள் குறைகளை ஆய்வு செய்யும் குழுவிலும் இவரை உறுப்பினராக்கியது.

பாகிஸ்தான் படையெடுப்பு போது கிராம கிராமமாக சென்று நாட்டு நிகழ்ச்சிகள் பற்றியும், மாணவர்கள் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நடத்தி மக்களுக்கு நாட்டுப்பற்று ஏற்படுத்தியும் யுத்தநிதி ஏராளமான மக்கள் உதவுமாறு செய்தார்.

1945 ஆம் ஆண்டு ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி தொடங்கிய பெருமையும், சென்னிமலை, குருசாமிபாளையம் போன்ற பல ஊர்களில் செங்குந்தர் உயர்நிலையும் பள்ளி உருவாக காரணமாக ஐயா இருந்தார்.


சுதந்திர போராட்டம்

சுதந்திர போராட்டக் களத்தில் ஆங்கிலேயரின் அடக்குமுறையில் இந்தியா கட்டுண்டு கிடந்தபோது, ​​ஈரோட்டில், கதர் இயக்கம், கல்லுக் கடை மறியல், அந்நியத் துணி எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்திய ஈ.வெ.ரா. சிறை சென்ற போது, ​​அந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து நடத்தியவர் மீனாட்சி சுந்தரனார். சுதந்திர போராட்டக் களத்தில் திருச்செங்கோடு வந்திருந்த மகாத்மா காந்தியடிகளுக்கு ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு சென்று அவருக்குப் பணிவிடை செய்து அவரின் சீரிய தொண்டரானார். 

1921ல் மகாகவி பாரதியார் ஈரோடு வந்த காலத்தில் கருங்கல் பாளையம் நூலகத்தில் நேரில் சந்தித்து, அவரை நெருங்கிய நண்பரானார். 

காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட செயலாளராகவும், ஈரோடு மாவட்ட தலைவராகவும் இரண்டு முறை இருந்துள்ளார். அந்நிலையில் முன்னாள் பிரதமர் மோதிலால் நேரு, சரோஜினி தேவி, சி.எஃப்.ஆண்ருசு போன்ற தேசிய தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றார். அனைத்து தலைவர்களுடன் தொடர்பு உண்டு. சுதந்திரப் போர் காலத்தில் தனக்கு சிறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பெருங்குறையாக ஐயா அவர்கள் கூறுவார்கள்.



திருநகர் குடியிருப்பின் தலைவராக கல்வியையும், பொதுவாழ்வையும் இரு கண்களாக போற்றிய மீனாட்சி சுந்தரனார். 



நகராட்சி தலைவர் பணி


ஐயா அவர்கள் ஒன்பதாவது வட்ட உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஈரோடு நகராட்சி தலைவராக (1952-1955) இருந்துள்ளார். ஐயா காலத்தில் தான் நகரில் குடிநீர் இணைப்பு, சாலை வசதி மிகப்பெருகின. ஈரோடு கோட்டை, கைக்கோளன் தோட்டம், பட்டக்காரர் தோட்டம் ஆகிய பகுதிகளில் ரூபாய் 1,98,000 செலவில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் பிரிவு குழாய்கள் அமைத்தார். குடிநீர் இணைப்பு நிலையத்தில் குறைந்த பல கருவிகளை நகராட்சி நிதியிலிருந்து மாற்றி அமைத்தார்கள். 1000 புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. 20.2.1955 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் அமைச்சர் ராமசாமி படைச்சியார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா செய்தார்கள். 

15 ஆண்டுகளாக நகரில் நாள்தோறும் வழங்கும் நீரின் அளவு 5 லட்சம் காலனாக இருந்தது. ஐயா அவர்களின் மூன்றாண்டுகளில் 6 லட்சம் காலனாகவும் பின் 7 லட்சம் காலனாகவும் உயர்த்தப்பட்ட பெருமையும், சாதனைகளையும் பாராட்டத்தக்கது. சாலைகளில் மரங்கள் வைக்கப்பட்டன. பிரசவ விடுதி கட்டப்பட்டது. நகரத்தை சுத்தி ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் எடுத்துக் கொள்ளாத 30 தெருக்களை எடுத்து புதிதாக அமைத்தனர்.


பொதுப்பணியில் ஆர்வம்


ஈரோடு திருநகர் நகரின் தலைவராக 9 ஆண்டுகள் இருந்துள்ளார். அய்யாவின் காலத்தில் தான் சாலை, விளக்கு, குழந்தைகள் விளையாடுமிடம் அமைக்கப்பட்டன.

ஈரோடு சுழற்குழு தொடங்கி இதிலிருந்து 15 ஆண்டுகள் உறுப்பினராகவும் ஒரு முறை தலைவராகவும் இருந்துள்ளார். ஈரோடு சுழற்குழு சார்பில் குழந்தைகள் விளையாட்டு அரங்கினை போலீஸ் குடியிருப்பில் ஏற்பட காரணமாக இருந்தது. SPCA தலைவராகவும், கூட்டுறவு அர்பன் வங்கி தலைவராகவும், பென் கோர்ட் தலைவராகவும் இருந்துள்ளார்.


அருள்நெறி திருப்பணி இயக்கம்


பெரியாரின் பிள்ளையார் உடைப்பு இயக்கம், கடவுள் மறுப்பு இயக்கம் நாட்டில் எப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டி பக்தி உணர்ச்சியை ஊட்டி சமய வளர்ச்சிக்கு துணைபுரிய அருள்நெறி இயக்கத்தை தமிழ்நாட்டில் தொடங்கியவர்கள் ஐயாவும் ஒருவர்.

தவத்திரு.குன்றக்குடி அடிகளார் தலைவராகக் கொண்டு அந்த இயக்கத்தில் மாநில பொதுச் செயலாளராக திரு.கணேசன் அவர்களுடன் ஐயா இணைந்து பணியாற்றினார். தமிழகமெங்கும் பல கிளைகள் தொடங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள், பயிற்சிப் பள்ளிகள், புண்ணிய இல்லங்கள் பல தொடங்கப்பட்டன. ஈரோட்டில் உள்ள அருள்நிதி திருப்பணி மன்றத்தின் பயிற்சி பள்ளியும், புண்ணிய இல்லமும் அப்போது ஏற்படுத்தப்பட்டவைகளே.

1955 அருள் நெறித்திருப்பணி மன்றத்தின் மூலம் ஆசிரியர் பயிற்சி பள்ளி,அனாதை இல்லம் நிறுவி திறம்பட நடத்தி தக்கார் பொறுப்பில் ஒப்படைத்துள்ளார்.


எழுத்து துறை


பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள பல பாடநூல்களை ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.சமயம், அறிவுரை கட்டுரைகள் பல எழுதியுள்ளனர். கற்றோர் சிலர் கோவிலுக்கு போகாமலேயே கடவுளை வணங்க முடியாதா? கோயிலில் தானே கடவுள் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையாக 1964 - ல் கோயிலுக்குப் போக வேண்டுமா? என்ற சிறு ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். ஈரோடு நகர மக்களுக்கு நல்ல கருத்துக்களை அளிக்க "நகர மித்திரன்" என்ற வார இதழை தொடங்கினார். மாணவ, மாணவிகள் மொழி, சமயம் பண்பாடு, நன்னெறி போன்றவற்றை அறிய வேண்டி குறள், திருமந்திரம், புறநானூறு போன்ற பற்பல நூல்களில் இருந்து தொகுத்து எளிமையாக புரியும் வண்ணம் வெளியிட வேண்டும் என்ற பேராவினை ஐயா அவர்கள் கொண்டாடியுள்ளார். திருமந்திரம் இரண்டு முறை கலைமகள் கல்வி நிலையம் வெளியீடாக வெளிவந்துள்ளது. மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவின் போது பள்ளி மாணவ, மாணவர்களுக்கு எளிய முறையில் அடிப்படை காந்திய தத்துவங்களை ஊட்டச் சிறு சிறு வெளியீடுகள் பல வெளியிட்டார்கள்.


4-10-1969 ஆம் ஆண்டு கோவையில் நடந்த விழாவில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் ஆங்கில பேச்சை ஐயா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்கள்.


கலைமகள் தந்தை


தம்மை ஆளாக்கிய தாயாரும், தங்கையின் தியாகத்தை எண்ணி அவர்களை கைமாறு செய்யும் விதத்தில் பெண் குலத்தின் முன்னேற்றத்திற்காக "கலைமகள்" என்ற கல்வி நிலையம் தொடங்கினார். 1945 ஆம் ஆண்டு ஜூலை 77 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொண்டு கல்வி நிலையம் ஆரம்பித்தார். 1957 ஆம் ஆண்டு முதல் முறையாக எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு பெண்கள் சென்றனர்.

இன்றே 3401 குழந்தைகள் நல்கல்வி பெறுகின்றனர், 104 ஆசிரியைகள் கற்பிக்கும் திருத்தொண்டு ஈடுபட்டுள்ளனர்.


அங்கீகாரங்கள்


கல்விப் பணியில்...... 'கடமையைச் செய் பலனை கலைமகள் கல்வி நிலையத்தை வாசகத்துக்கு சான்றாகக் கல்வியையும், பொது வாழ்வையும் தம் கண்களாகக் வாழ்ந்து கல்வி தருமொழி ஐயா எதிர்பாராதே!' என்ற நிர்வகித்து வந்தார். உண்மையான சமுதாய முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி மறைந்த தந்தை எஸ்.மீனாட்சிசுந்தரனாருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஈரோடு பொது மக்கள் சார்பாக வேண்டிக்கொண்டதற்கு இணங்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு பிரப் சாலைக்கு மீனாட்சி சுந்தரனார் சாலை என பெயர் மாறுதல் செய்து அறிவித்துள்ளதற்கு ஈரோடு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 


சுதந்திர போராட்ட வீரராகவும், கல்வி ஆசானாகவும், ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கும் பல அரிய சேவைகளை ஆற்றிய மீனாட்சி சுந்தரனாரின் 'நினைவை. போற்றும் வகையில், ஈரோடு மாநகரின் முக்கிய சாலையான பிரப் ரோட்டிற்கு மீனாட்சி சுந்தரனார் சாலை என்ற பெயர் மாறியது.

ஈரோடு செங்குந்தர் கல்விக்கழகம் இவரின் நினைவாக, மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை நடத்தி வருகிறது. பள்ளி வளாகத்தில் இவருக்கு வைக்கப்பட்ட சிலை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரால் வைக்கப்பட்டது. எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார், துணையோடு ஈரோட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் இணைத்து "ஆசிரியர் ஐக்கிய சங்கம்" தொடங்கினார்.

செங்குந்தர் சமுதாய பணி: 

1929 ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்தர் சங்க மாநில மாநாட்டில் தொண்டர் படை தலைவராக இருந்து குலக்கொடி ஏற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க பொதுச்செயலாளராக இருமுறையும், துணைத்தலைவராக இருமுறையும் இருந்து பணியாற்றினார். ஐயா அவர்கள் சீரிய முயற்சி செய்து OC பிரிவில் இருந்த செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை BC பட்டியலுக்கு கொண்டு வந்தவர்.





இவரின்
கோத்திரம் பெயர்: வடுவன் கூட்டம் பங்காளிகள்
குலதெய்வம்: பழனி முருகன், திருச்செங்கோடு வட்டம் உலகப்பம்பாளையம் பெரியாண்டவர் - எல்லைம்மன்.



















                                             




YouTube வீடியோ 👇



மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், பதவிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தால் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது கருத்து தெரிவிக்கவும்.





இவரின் அண்ணன் மகன் எஸ்.பி. வெங்கடாசலம் எழுதிய புத்தகத்தில் இவர் பற்றிய குறிப்புகள் நிறைய வருகின்றன👇

 




25 வயதில்
நமது ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார் முன்னாள் தலைவர்

1934 ஆம் ஆண்டு செங்குந்தர் வாலிபர் மாநாட்டு தலைவராக பணியாற்றிய போது.



Post a Comment

1Comments
Post a Comment