ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார்

0




ரலாறு மிகவும் அற்புதமானது, இன்று சாதாரணமாக காணப்
படும் பல இடங்கள் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றங்களை
ஏற்படுத்திய இடமாக இருந்திருக்கலாம். ஊர்கள், நாடுகளின்
பெயர்கள் கூட ஏதோ ஒரு சம்பவத்தின் அடிப்படையில், ஏதோ ஒரு
வரலாற்று நிகழ்வின், வரலாற்று கதை நாயகர்களின் நிலை
உருவாக்கப்பட்டவையாக இருக்கும்
நமது ஈரோட்டை பொறுத்தவரை ஆன்மிக ரீதியாக ஒரு பெயர்
காரணமும், புவியியல் ரீதியாக ஒரு பெயர்க்காரணமும் கூறப்படுகிறது. ஈரோடை என்பதோ ஈரோடு என்று மருவியதாக ஒரு குறிப்பு
ஈர + ஓடு = ஈரோடு என்று மாறியதாக ஒரு குறிப்பும் உண்டு
ம்நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிஞர் என்பவர் கொங்கு
மண்டல சதகத்தில்

சிறிய செங்கமலமாய மேவுந் திரு வெழின்மிக்
காரிரு வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற்
பொரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ
மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே
என்று பாடி இருக்கிறார்

12ம் நூற்றாண்டிலே ஈரோடு ஈரோடை என்றபெயரில் கொங்கு
மண்டலத்தின் சிறப்புக்கு உரிய ஊர்களில் ஒன்றாகவே நிகழ்ந்தது
இருக்கிறது. அது மட்டுமின்றி ஈரோடை சூழ் கொங்கு மண்டலமே
என்ற பாடல் வரிகள் கொங்கு மண்டலத்தின் மையப்பகுதியாக
ஈரோட்டை குறிக்கிறது
கி.பி.17-ம் பகுதியில் ஈரோட்டில் கோட்டை கட்டப்பட்டது
இந்த கோட்டையை கட்டியவர் சந்திரமதிமுதலியார் என்ற மன்னர்
என்பது. இவருடைய முன்னோர்கள் அனைவரும் போர்வீரர்களாக இருந்தனர்.கொங்குமண்ணில் பிறமன்னர்களின் படை எடுப்பு காலங்களில்
கொங்கு பகுதியை ஆட்சி செய்த அந்தந்த பகுதி ஆட்சியாளர்களுக்கு சேனை வீரர்களாக பணியாற்றியவர்கள் செங்குந்த வீரர்கள்
தொடக்க காலத்தில் காஞ்சிபுரம்  பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின்
பிற பகுதிகளில் பரவலாக இருந்த செங்குந்த வீரர்கள் கொங்கு
மண்டலத்தை பாதுகாக்கும் வீரர்களாக இருந்தனர்

கொங்கு முதலி என்பவரின் பட்டயப்பாடல் ஒன்று
ஆதி முதல் செங்குந்தர் அதில் வந்த கொங்கனுக்கு
சாதி, குலம், கல்யாணம் தனது முறைப்படியாக
நீதியுடன் எந்நாளும் நிலைத்திருக்க வேண்டும்
ஓதி வைத்தான் பூந்துறை நாட்டு உத்தமளே - என்று
கூறுகிறது

அதாவது உலகுடைய மன்றாடி என்ற பட்டம் ஏந்தி பூந்துறை
நாட்டை ஆண்ட காலிங்கராயன், செங்குந்தர்களைக் காஞ்சிமாநகரிலிருந்து கொங்கு நாட்டுக்குக் குடியேறி அவர்களை கொங்கர்கலாக மாற்றி தன் படை அணிகளில் போர் வீரர்களாக்கிக் கொண்டான்.
என்று கொங்கு வெள்ளாளர் வரலாறு என்ற புத்தகத்தில் டி.கே.சக்திதேவி என்பவர் பதிவு செய்து இருக்கிறார்.
இப்படி படைகளாக வாழ்க்கையை தொடங்கிய செங்குந்தர்கள் பின்னாளில் சேதுபதிகளாக, குறுநில மன்னர்களாக மாறினர்.
அப்படி கி.பி.1628-ம் ஆண்டு ஈரோட்டின் மன்னராக ஆட்சி செய்தவர்
சந்திரமதி முதலியார். இவர்தான் ஈரோடு மண் கோட்டையை கட்டி
னார். சூரம்பட்டி பகுதியில் மன்னரின் அரண்மனை இருந்தது.
ஈரோடு பஸ் நிலையம் பகுதி போர் வீரர்கள் பயிற்சி பெறும் இடம்
மற்றும், வ.வு.சி, பூங்கா பகுதி மன்னர், சேனாதிபதிகள் ஓய்வு
எடுக்கும் பகுதியாகவும் இருந்தது. அப்போது மதுரையில் திருமலை
நாயக்கர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது, கொங்குநாட்டின் பல
பகுதிகளில் ஆட்சியில் இருந்த மன்னர்கள் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்டி, பழையக்காரர்களாக இருந்தனர். ஆனால்
சந்திரமதி முதலியார் கப்பம் கட்ட முன்வரவில்லை. அடங்கிப்போகவும்
இல்லை.கொங்கு பகுதியில் கப்பம் வரவில்லை திருமலை நாயக்கரின் தளபதி ராமப்பையன் படையுடன் ஈரோடு வந்தார். ஈரோட்டில்
தங்கி இருந்து சுற்று வட்டார பாளையக்காரர்கள், ஆட்சியாளர்கள்டம் கப்பம் வசூலித்தார். ஆனால் சந்திரமதி முதலியார் வரி கொடுக்கவில்லை.
இவரைப்போன்று கப்பம் செலுத்தாத  பல பாளையக்காரர்கள் கைது செய்து சங்ககிரி சிறையில் அடைத்தார்.
திருலைநாயக்கர் படைகளை எதிர்த்து நின்ற மன்னர் சந்திரமதி முதலியார் வீழ்த்த
வியூகம் அமைக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற ஈரோட்டு போர் நடந்தது.
இதுதான் ஈரோட்டில் நடந்த முதல் போர் கி.பி.1628-ல் நடந்த இந்த
போரில் பெரும்படையுடன் சந்திரமதி முதலியார் திருமலை நாயக்கர் படையுடன் மோதியது. அவர் போரில் வீரமரணம் அடைந்தார். கோட்டை 'ராமப்பையனால் கைப்பற்றப்பட்டது. சந்திரமதியின் உறவினர்கள், குடும்பத்தினர் எனமேபோரில்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது
எனவே மன்னரின் வாரிசு இல்லாத நகரமாக ஈரோடு மாறியது. ஈரோடு
வ.உ.சி.பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் சந்திரமதி
முதலியார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டு
கி.பி.1628-ல் செதுக்கப்பட்டது
சந்திரமதி முதலியார் என்ற மன்னர் கட்டிய ஈரோடு கோட்டை
திருமலை நாயக்கர் படையால் கைப்பற்றப்பட்டது. அவர் போரின்
போது ஏற்பட்ட சிதிலங்களை சிரமப்பட்டு மீண்டும் கோட்டையாக
கட்டினார். கி.பி.1656-ம் ஆண்டு அடுத்த போர் நடந்தது. மைசூர்
மன்னர் கண்டவ நரசராஜர் வின் தளபதி ஹம்பையன் என்பவர்
படை எடுத்து வந்தார். அப்போது ஈரோட்டின் ஆட்சிப்பொறுப்பு
திருமலை நாயக்கர் வசம் இருந்தது. மதுரைநோக்கி படை எடுத்து
வந்த மைசூர் வீரர்களை திருமலை நாயக்கர் படை ஈரோட்டில்
தடுத்து நிறுத்தியது. தளபதி சேதுபதி, திருமலை நாயக்கரின் தம்பி
முத்தியாலு நாயக்கர் என்ற குமாரமுத்து நாயக்கர், திண்டுக்கல்
அரங்கண்ண நாயக்கர் ஆகியோர் நலைமையிலான படைகள்
மைசூர் படைகளை, விரட்டி வெற்றிவாகை சூடினார்கள். இதன்
மூலம் திருமலை நாயக்கர் படைகள் ஈரோட்டில் 2 போர்களிலும்
வெற்றி பெற்றன. இதுவே வரலாற்றில் மூக்கு போர் என்ற
பதிவைப்பெற்றது.
கி.பி.1672-ல் அடுத்த போர், மைசூர் தொப்டதேவராயன் உடையார்
வடிவில் வந்தது, கொங்குநாட்டின் உரிமை பிரச்சினையில் எழுந்தது
இந்த போர் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளிலும் நடந்தது
போரின் முக்கிய தலைநகராக ஈரோடு இருந்தது. அப்போது மதுரையை சொக்கநாத நாயக்கர் ஆட்சி செய்தார். மைசூர் உடையார்
தொட்ட தேவராயன் படைக்கு தளபதி சிக்க தேவராயன் தலைமை
தாங்கி வந்தார்.மதுரை படைக்கு ஆதரவாகசெஞ்சிநாயக்கர் படை
பீஜப்பூர் சுல்தான் படை, தஞ்சை மராட்டியர் படை, விஜயநகரத்தின்
ஆட்சியை இழந்த 3-ம் சீரங்கன் ஆகியோர் படை எடுத்து
வரை யானைப்படை, குதிரைப்படை என்று ஈரோடு அல்லோக
லப்படும் வகையில் நடந்த இந்த போரில் மைசூர் படை வெற்றி
பெற்றது குறிப்பிடத்தக்கது, பின்னர் ஈரோடு அமைதிப்பூங்காவாக
திகழ்ந்தது. சுமார் 90 ஆண்டுகள் எந்த போர் அச்சமும் இன்றி
ஈரோடு வளர்ச்சி அடைந்தது
அப்போது ஈரோடு ஐதர் அலி வசம் இருந்தது, ஆங்கிலேயப்ப
டைகள் ஈரோட்டை கைப்பற்ற எண்ணி கி.பி.1768-ம் ஆண்டு போர்
தொடுத்தனர். இந்த போரில் ஆங்கிலேயப்படை தோல்வியை சந்
தித்தது, மைசூர் மன்னர் ஐதர் அலி மறைவுக்கு பின்னர் திபட்புகல்
தான் ஆட்சியில் ஈரோடு இருந்தது. கி.பி.1790-ல் மீண்டும் ஆங்கி
லேயப்படைக்கும் மைசூர் படைக்கும் ஈரேட்டில் போர் நடந்தது
ஆங்கிலேய தளபதி மெடாஸ் தலைமையில் இந்தப்பொரில்
திட்புவின் படை தோல்வியை சந்தித்தது. ஆனால் 4 மாதத்திலேயே
திப்புவின் படை மீண்டும் ஒரு போர் நடத்தி ஈரோட்டை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றியது. திப்புலின் மறைவுவரை ஈரோடு மைசூர்
வசமே இருந்தது
பின்னர் மீண்டும் ஈரோடு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்கு வந்தது
அகழி சூழ்ந்திருந்தா ஈரோடு கோட்டை கி.பி.1878-ல் இடிக்கப்பட்டது
போரில் மரணம் நிகழ்ந்தாலும், அவர் கட்டிய கோட்டை இல்லை
போனாலும், கோட்டையை கட்டி ஈரோட்டை ஆட்சிசெய்த சந்திரமதி
முதலியார் நினைவுகள் இன்னும் மிச்சமிருக்கின்றன. கோட்டை
இல்லாவிட்டாலும் கோட்டைபகுதி என்றோ நுற்றாண்டுகள் கடந்தும்
அழைக்கப்படும் ஈரோடு இன்று பல மறைந்திருக்கும் வரலாறுகளை கொண்டது

தகவல்கள்: கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு மற்றும் ஆடிட்டர்
எம். மாரிமுத்து  எழுகிய மாவீரன் சந்திரமதி முதலியார் புத்தகம்.










1.




நன்றி தினத்தந்தி




Post a Comment

0Comments
Post a Comment (0)