ஒருமுறை செங்குந்தர் யாவரும் ஒன்று திரண்டு வந்து கூத்தரைப் பணிந்து தமது குலத்தின் சிறப்பைப் பாட வேண்டு மென்று கேட்டனர். காளிக்கே நிபந்தனை விதிக்கக் கூடியவ ரான கூத்தர் எளிதில் இதை ஏற்றுக் கொள்வாரா? “நீங்கள் கேட்பதுபோல் நான் பாடவேண்டுமானால், நமது குலத்தில் பிறந்த ஆயிரத்தியெட்டு தலைப்பிள்ளைகளின் சிரங்களையறுத்துச் சிரச்சிங்காதனமிடவேண்டும்”” என்றார். போர்க்களங்களில் ஆயிரக்கணக்கான பகைவர் சிரங்களை அறுத்து விளையாடும் வீரமரபினரான செங்குந்தர் தமிழுக்காகத் தங்கள் தலைப் பிள்ளைகளின் சிரங்களை அறுக்கத் தயங்குவார்களா?
அவர் நிபந்தனையை அப்படியே ஒப்புக்கொண்டு ஆயிரத்தியெட்டு தலைப்பிள்ளைகளின் சிரங்களைக் கொய்து சிரச்சிங்காதன மிட்டனர். கூத்தர் அதன் மீது அமர்ந்து செங்குந்தரின் வீரச் சின்னமாக விளங்கும் குந்தம் என்ற ஈட்டியை மையமாகக் கொண்டு “ஈட்டி எழுபது” என்ற நூலைப் பாடினார். அதன்