கொடுப்பு - சுப்பிரமணியர் கோவில் வரலாறு
பாலக்காட்டிலிருந்து சித்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. இல் உள்ளது. தமிழ்நாட்டு அமைப்பினைக் கொண்ட திருக்கோயில் இதற்குப் பாலபுரம் என்ற பெயரும் உண்டு. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் கல்யாண சுப்பிரமணியர் என்ற திருநாமம் கொண்டவர். காஞ்சியைச் சார்ந்த செங்குந்த முதலியார்கள் மாட்டின் மீது நூல் பொதி ஏற்றி இத்தலம் அருகே வந்த போது, "நானும் வருகிறேன். அழைத்துச் செல்லுங்கள்" என்ற அசரீரி கேட்டது. குரல் வந்த திசையில் ஒரு சிறு கல் இருக்க அதனையும் மாட்டின் மீது கட்டி எடுத்து வந்தனர். இத்தலம் வந்ததும் மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் படுத்து விட்டது. அங்கேயே அக்கல்லை பிரதிஷ்டை செய்து வேலையும் பிரதிஷ்டை செய்தனர். அந்தக் கல் மூலமூர்த்தியின் பீடத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. மந்திரவாதி ஒருவன் பிற பகவதிகளைத் தம் ஏவலுக்குப் பயன்படுத்தியது போல இம் முருகனையும் பயன்படுத்த எண்ண முருகப் பெருமான் அவனைச் சம்ஹாரம் செய்ததாக வரலாறு. "பழனியில் பாதி கொடும்பு" என்பது இத்தல வழக்கு. 'திருகுபொறி சிகண்டிக் குதிரை விடும் செட்டித் திறவர் கொடும்பு' என அருணகிரிநாதரால் பாடப் பெற்ற தலம்.கேரளா செங்குந்த கைக்கோள முதலியார்
0