தமிழ் புலவர்கள்/ தமிழ் அறிஞர்கள்/ தமிழர் மத தலைவர்கள்:
செங்குந்தர் குல அருணகிரிநாதர் சுவாமிகள்: பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகப்பெருமானின் மீது உள்ள தீவிர பக்தியால் திருப்புகழ் உள்ளிட்ட பல்வேறு அருளிய சைவசமய ஆன்மீகவாதி.
சிதம்பர சுவாமிகள்: தொண்டைமண்டலத்தின் திருப்போரூர் ஆதீனத்தை மடத்தைச் சேர்ந்த சைவமத அறிஞர்.
தமிழ் இலக்கியம்
ஒட்டக்கூத்தர் முதலியார்: கவிச்சக்கரவர்த்தி,கவிராட்சசன் என புகழப்படும் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அம்பலா கூத்தனாகப் பிறந்தார், சோழ பேரரசின் ராஜகுரு, அரசவை கவிஞராகவும், சோழ சாம்ராஜ்ய அமைச்சராகவும் இருந்தார்.
காங்கேயர் முதலியார் : தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் உரிச்சொல் நிகண்டு எழுதியவர் (14 ஆம் நூற்றாண்டு படைப்பு), தமிழ் மொழியின் பழமையான அகராதிகளில் ஒன்று.
பொய்யாமொழிப் புலவர்: தொண்டைமண்டலத்தின் உரையூரைச் சேர்ந்த கவிஞர். தஞ்சைவாணன் கோவை படைப்பை உருவாக்கியவர்
இரட்டைப் புலவர் : (மதுசூரியார் முதலியார் மற்றும் இளஞ்சூரியார் முதலியார்), ஏகம்பரநாதர் உலாவை எழுதிய கவிதை-இரட்டையர் (ஒருவர் காது கேளாதோர் மற்றொருவர் நொண்டி). 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.
கோனேரியப்பர்: (பிறப்பு பெயர் கோனேரியப்ப முதலியார்) 15 ஆம் நூற்றாண்டில் பிரபல கவிஞர்.
பாடிக்காசு புலவர்: தொண்டை மண்டலத்தில் பொன்விளைந்த களந்தூரைச் சேர்ந்த கவிஞர். வேந்தாந்தங்களை விரிவுரை செய்வதில் திறமையான அறிஞர் தொண்டமண்டல சதகம் எழுதியுள்ளார் .
பகழி கூத்தர்: திருச்செந்தூர் முருகன் பிள்ளை தமிழ் நூலை எழுதிய ராம்நாட்டின் சன்யாசி கிராமத்தைச் சேர்ந்தவர்.
மனோன்மணி அம்மையார்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சித்த மருத்துவர் மற்றும் பல மருத்துவ இலக்கிய நூல்களை எழுதியவர்.
காஞ்சி நாகலிங்க முனிவர்: பல தமிழ் நூல்களை எழுதியவர் செங்குந்தமித்திரன் நிறுவனர்.
திருத்தணிகை கச்சியப்ப முனிவர்: இவர் விநாயக புராணம், தணிகைப் புராணம், பேரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், பூவாளூர்ப் புராணம் முதலியவற்றை இயற்றியவர். இவரே கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, அந்தாதிகள், பதிகங்கள் இயற்றியிருக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் : (பிறப்பு பெயர் கனகசுப்புரத்தினம் முதலியார்) பாவேந்தர், புரட்சி கவிஞர், தமிழ் கவிஞர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என அறியப்படுகிறார். புதுவை காசுக்கடை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
வெள்ளைவாரணனார்: திருவாரூரைச் சேர்ந்த மூத்த தமிழ் அறிஞர், தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றார். தொல்காப்பியம் பற்றி நிறைய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞர் ஆவார்.
ஈரோடு தமிழன்பன்: அவர் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர். 2004 ல், அவரது கவிதை தொகுப்பு தமிழ் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
கு. மு. அண்ணல் தங்கோ: ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் அறிஞர்.
காஞ்சி மணிமொழியார்: தமிழ் அறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, சமூகத் தொண்டாளர் ஆவார். பல்வேறு இதழ்களின் ஆசிரியராவார்.
ஞானசம்பந்தன்: ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பேராசிரியர், சொற்பொழிவாளர்
சுந்தர சண்முகனார் : தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நபர்.
சாலமன் பாப்பையா: பிரபல தமிழாசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவர்.பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்.
சண்முகசுந்தரனார்: வட்டார மொழி வழக்கத்தில் நூல் எழுதுவதில் புகழ் பற்றவர்.
சி. பாலசுப்பிரமணியன்: தமிழறிஞர், பிரபல தமிழ் பேராசிரியர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
வை.இரத்தினசபாபதி முதலியார்: தலைசிறந்த தமிழறிஞர் மற்றும் சைவசித்தாந்த அறிஞர், தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றார், சென்னை தமிழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர், பேராசிரியர் ஆவார்.தமிழ்,சைவ சித்தாந்தம் பற்றி பல்வேறு நூல்களை எழுதியும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார்.
மா.இளஞ்செழியன்: சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.
மன்னர் மன்னன் முதலியார்: ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன்.
ச.செல்வராஜ் முதலியார்: "தமிழ் தொல்லியல் ஆராய்ச்சிக்காக தமிழர் மரபு காவலர் விருது பெற்றவர்.
காஞ்சிச் சரவணப்பத்தர்: இவர் மத்தூர் சாமிநாத முதலியாரின் மூன்றாவது பாட்டனார். ஞானநூல்கள் செய்தவர்.
தமிழறிஞர் சோ. ந. கந்தசாமி முதலியார்: இந்திய குடியரசு தலைவரிடம் தொல்காப்பியர் விருது பெற்றவர்.தமிழ் ,ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பலமொழிகளில் புலமை பெற்றவர்.
கச்சி கச்சாலை தேசிகர் : காஞ்சி பராணம் நூலை இயற்றியவர், திருக்கச்சியாள வந்த வள்ளலார் செங்குந்தர் ஆதீனம் முன்னாள் மடாதிபதி.
கச்சபாலய தேவர்: பழனி வெண்பாமாலை வீரன நாராயணர் விஜயம் போன்ற நூல்களை மொழிபெயர்த்தவர்.
கோவை வேலப்ப வாத்தியார் சுப்பிரமணிய முதலியார்: அருணாசல புராணம் நூலை இயற்றியவர்
பூசை நமச்சிவாயப் புலவர்: இவர் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபத் தெருவில் வாழ்ந்த செங்குந்தப் புலவராவார். சிவஞான முனிவர் மாணவர் பரம்பரையிற் கல்விபயின் புலவர் பெருமக்களுள் முதன்மையானவர் இவரே.
பூறசை அருணாசல சுவாமிகள்
இராமநாதபுரம் சோமசுந்தர முதலியார்.
காஞ்சிச் சிதம்பரநாத முனிவர்,
காஞ்சி முத்துக்குமார தேசிகர்,
சங்கரநயினார்கோயில் முத்தையா முதலியார்: சங்கர நயினார் கோயில் அலங்காரச்சிந்து நூலை இயற்றியவர்.
புதுச்சேரி சிவானந்த மூர்த்தி (பொன்னையா முதலியார்): 19ஆம் நூற்றாண்டு தமிழ் சமஸ்கிருத மொழி வல்லுனர். வல்லம் தலபுராணம், விநாயக இருப்புகழ், முருகர் மும்மணிக் கோவை போன்ற பல நூல்களை எழுதியவர்.
வீரமார்த்தாண்ட தேவர்: 19 நூற்றாண்டு புகழ் பெற்ற தமிழ் நூலான பஞ்சதந்திரம் நூலை எழுதியவர்.
மருத்துவர் வாலசுப்பிரமணிய முதலியார்: தேவகோட்டை முருகானந்த வைத்தியசாலை நிறுவனர். 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
அறிவானந்த அடிகள்: காட்டுமன்னார்குடியில் சேர்ந்த தமிழறிஞர்.
வண்டிப்பாளையம் வை. கந்தசாமி முதலியார்
புதுவண்டிப்பாளையம் ஆ.சிவலிங்கனார் செங்குந்தர்: உலகத் தமிழாராய்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர்.
குறிஞ்சி வேலன் (எ) செல்வராஜ்: அவர் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்,பன்மொழிப்புலவர். 2004 ல், அவருக்கு விஷக்கன்னி என்ற மலையாள நாவல் தொகுப்பை தமிழ் மொழிபெயர்ப்பு செய்தமைக்கு சிறந்த மொழிபெயர்ப்புகான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
சித்தாந்த சிகாமணி காஞ்சி வஜ்ஜிரவேல் முதலியார்.பி.ஏ.பில்: இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய பேரறிஞர் ஒருவர்.தமிழக அரசு திருக்கோயில், தமிழ் ஆதீனங்கள் சைவ சித்தாந்த பத்திரிகை ஆசிரியராகவும், சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார்.பல்வேறு தமிழ் ஆதீனம் புலவராகவும், பல்கலைக்கழகங்கள் சைவ சித்தாந்த துறை பணி ஆற்றி உள்ளார். சிறந்த ஆசிரியருக்காக இந்திய அரசால் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றார்,இவர் தமிழ், ஆங்கிலம்,வட மொழியில் புலமை பெற்று சைவ சித்தாந்தம் தொடர்பாக பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
செந்தமிழ் சைவமணி புலவரேறு ந.ரா.முருகவேள்.M.A.M.O.L: சிறந்த தமிழறிஞர் மற்றும் சைவ சமய பேரறிஞர்.மறைமலை அடிகளார் அன்பு மாணவர்,இந்து அறநிலையத்துறை திருக்கோயில் பத்திரிகை மற்றும் தமிழ் ஆதீன இதழ்கள் மற்றும் சைவ சித்தாந்த இதழ்கள் ஆசிரியர் பணியாற்றி உள்ளார், பல்வேறு சைவ சமய மாநாடுகள் சொற்பொழிவு ஆற்றியும், பல்வேறு தமிழ் மன்றங்கள், ஆதீனங்கள் சிறப்பு விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.தமிழ் சைவ சித்தாந்தம் தொடர்பாக பல்வேறு அரிய ஆராய்ச்சி நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
திருப்பத்தூர் ஆ. ௧ . குமாரசாமி முதலியார்: சில ௫௫கங்கள், முசுகுந்த விலாசம், செங்குந்த புராணம், தசாரண்ய மான்மியம் என்னும் திருப்பத்தூர்ப் புராணம், குடியேற்றத் தல பமாணம, பனசை தல. புராணம் முதலிய பால்கள் இவராலியற்றப்பெற்றன.
ஐயன்பேட்டை சூரப்ப முதலியார்: கந்தபுராணச் சங்கிரகம்.
ஐயன்பேட்டை சிவப்பிரகாச ஐயர்:
வாத்தியார் சுவாமிகள் (எ) அம்மாசையப்பர்:
சேவூர் சித்தர் முத்துக்குமாரசுவாமி நயினார்: பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற சைவசமய சித்தர் காளியை வேண்டி நவகண்டம் செய்து கொண்டு சாவான் சமாதி அடைந்தவர்.
துறவி சடையம்மா: இலங்கை நல்லூரை சேர்ந்த சிவசாமி சித்தர் பல ஊர்களில் மடம் எழுப்பியவர்.
ஞானியார் அடிகள்: தமிழ் வளர்த்த சைவத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு துறவி.
திருப்போரூர் பொன்னம்பல சுவாமிகள்: சைவ சமயத் துறவி
ஏகானந்த சுவாமிகள்: திருப்பூர் பெரமியம் ஊரில் மடம் அமைத்து சைவ மதத்தை வளர்த்தவர் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகில் செங்குந்தர் மடத்தை புதுப்பித்தவர்.
வேதாத்திரி மகரிஷி: உலக அமைதியை ஊக்குவிக்கும் அமைப்பான உலக சமூக சேவை மையத்தின் நிறுவனர். பொள்ளாச்சி ஆழியாறு அணை பக்கத்தில் மனவளக்கலை மன்றத்தை நிறுவியவர்.
திருமழிசை முத்துசாமி முதலியார்: பல செங்குந்தர் புலவர்கள் இயற்றிய நூல்களை புத்தகமாக பதிப்பு செய்தவர்.
திருமழிசை வடிவேலு முதலியார்: வீரசைவ வினாவிடை என்னும் நூலை இயற்றியவர்.
திருமலைராயன்பட்டினம் உ. அருணாசல முதலியார்:(நூ.20)
பனைப்பாக்கம் எல்லப்ப முதலியார்:(நூ.20) தந்தை பெயர் கண்டி முதலியார்.
அம்பை இரா. சங்கரனார்: புகழ் பெற்ற தமிழர் அறிஞர்.
பெரியகுப்பம் பா. அய்யாவு முதலியார்: 19நூ. திருப்போரூர் வழி நடைக்கும்மி, முத்துவீராயி வர்னமெட்டு, தங்கச் சிந்துடப்பா முதலிய சிறு நூல்களை இயற்றியுள்ளார்.
சிவராமலிங்க சுந்தர முதலியார்-ஐ.நெ. (1889): இவர் ஐயம்பேட்டை என்னும் ஊரில் நெல்லையப்ப முதலி யார் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றினார். இவர் தம் பெயரால் * சிவராமலிங்க சுந்தரம்' என்னும் ஓர் உரைநடை நூலை எழுதியுள்ளார். அந்நூலில் மந்திரமுறைகளும் மருத்துவ முறைகளும் அடங்கியிருக்கின்றன. இவருக்குக் கவிராசபண்டிதர் என்று சிறப்புப்பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. ஆயினும் நூலில் பாடல்கள்காணப்படவில்லை மறை மருத்துவமுறையால் நோய் தீர்க்கும் முறை ஒன்றை அடியிற்காண்க.
சாமிநாத முதலியார் -சி. வா.(1913) தஞ்சை மாவட்டத்தில் திருநாகேச்சுவரத்தில் தோன்றியவர். புதுவை த. செய்யப்ப முதலியார் என்பவரிடங் கல்வி கற்றவர். இவர் "திருநாகேச்சுரப் பதிற்றுப்பத்தந்தாதி" என்னும் நூலைப் பாடியுள்ளார்.
ஐயாச்சாமி முதலியார்- வாங்கல்
(20 நூ) இவர் வாங்கல் என்னும் ஊரினர். பூந்துறையிற் பெரும் புலவராக விளங்கியிருந்த காளியண்ணப் புலவரின் புதல்வ ராகிய சுந்தரம் பிள்ளையிடத்தில் கல்வி கற்றுப் புலமைபெற்றார். இவரைப்பற்றிய பிற விவரங்கள் தெரியவில்லை.
ஏகாம்பர முதலியார் - கருங்குழி (20-நூ)
இவர் கருங்குழி என்னும் ஊரில் இருந்தவர். "விநாயகப் பிரபாவ விளக்கம்" என்னும் நூலை இவர் இயற்றியுள்ளார்.
இராமசாமி முதலியார் - நா. வே.
(20-.)
பாண்டிவள நாட்டில் தென்காசிப் பிரிவு கீழப்பாவூர் என் னும் ஊரில் வேங்கடாசல முதலியார் என்பவருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர். திருவருளால் எளிதாகவே செய்யுளியற்றும் ஆற்றல் இவருக்குண்டாகியது. அதனால் அருட்கவி என்னுஞ் சிறப்புப் பெயரும் பெற்றார். இவர் கீழப்பாவூ ரென்னும் பாகை மாநகரில் எழுந்தருளிய சிவகாமியம்மன் மீது "சிவகாமியம்மன் ஆசிரிய விருத்தம்" என்னும் நூலை இயற்றியுள்ளார். நூலின் பாடல் ஒன்றை அடியிற் காண்க.
அகரவரிசை
"எப்போதும் உனதுதிரு நாமமே புகலுவோர் ஈசனடி யார்க்கீகுவோர் ஏழைக் கிரங்குவோர் ஆணவம் அடக்கினோர் இசைபாடு வோர்அத்தணர் தப்பாது நதிதோய்ந்து குருபூசை செய்தறந் தனை நடத் துவரிவர்களைத் தாழ்மையொடு பணியவும் அவர்கள் சொல் என்செவி தனக்கமு தெனக்கொள்ளவும் முப்பாலி னாவிலுன் றனைந்தேசத்தி ரஞ்செய்யும் முறைமையும் பசியில்வாடும் முதியவர்க் கன்னங் கொடுக்குமதி யுந்தந்து முத்தியும் எனக்கருளுவாய் அப்பாவி யானாலும் உன திதயம் அறியுமற் ஈரறிகு வார்ஏழையை அன்பர்கள் தினம்பரவு தென்பாகை நகரில்வளர் அம்மைசிவ காமிஉமையே"
மற்றும் இவர் "திருவாலியீசுரர் தோத்திரப் பாமாலை" என் னும் நூலையும் பாடியுள்ளார். சங்குக்கவிராயர், மதுரைத் தேவார பாராயணம் அ. முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளனர்.
"செந்திரு மாலும் பூவில்வாழ் அயனும் தேடினுந் தேடுதற் கெட்டா தந்தரங் கடந்தும் பாதலத் தணந்தும் அரூபியாய் நின்றமெய்ப் பொருளே சந்தததினது பதமலர் துடுசெய் தமியனைக் காத்தருள் புரிவாய் இத்தநல் வேளை பாகைவாழ் திருவா லீசுரா ஏகநா யகனே "
என்பது தோத்திரப் பாமாலையில் ஒருபாட்டு.
குமாரசாமி உபாத்தியாயர்(20 நூ)தொண்டைவள நாட்டில் சென்ன சமுத்திரம் கலவை மாநகரம் என்னும் ஊரில் வீர சைவ சமயத்தில் இலட்சுமண ஐயர் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவர். பள்ளிக்கூடம் ஒன்று அமைத்துக்கொண்டு ஆசிரியராகத் தொழில் புரிந்திருந்தார். இரணியனுடைய கதையை இவர் "இரணிய விலாசம்" என்னும் பெயரோடு நாடமாக இயற்றியுள்ளார். பனப்பாக்கம் அகத்தி லிங்கக் சுவிராயர், தொண்டமாநத்தம் நரசிம்ம செட்டியார் சிவப்பிரகாச சுவாமிகள், பல்லாவரம் தணிகாசல முதலியார், திருக்கச்சித் திருநகர் தேவராச முதலியார் என்போர் நூலுக்குச் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்.
நள வருஷம் பங்குனி மாதம் 28 ஆம் தேதி தென்கரை நாடு 12 கிராமத்துக்கும் அண்டநாடு 32 கிராமத்திற்கும் தென் பொங்கலூர்நாடு 8கிராமத்துக்கும் புலமை செங்குந்த கோத்திரம் ராசி கூட்டம் திருக்கைவேற் புலவர் அவருடைய பிதாகளாகிய பெரியணப்புலவன் குமாரன் சாமிப் புலவன் ஏகாதசிப் புராணம் எழுதி முடிந்தது. ஏகாதசி யன்றைக்குச் சம்பூரணம்.
திருத்துருத்திபுரகம் இதனை இயற்றுவித்தவர் செங்குந்த மரபில் வந்த தியாகராஜ முதலியார் என்பவராவர்.
அருணகிரிநாதர் அருளிச்செய்த இது முதல்வரும் குன்றுதோறாடல் [திரிசிராப்பள்ளி] திருப்புகழ்கள் அச்சிடும் செலவை திரிசிரபுரம் செங்குந்தர் மரபு கு. சுப்ரமணிய முதலியார் அன்புடன் ஒப்புக்கொண்டார்.