செங்குந்தர் மரபினரும் முசுகுந்த சோழனும்:
முசுகுந்த சோழன் முருகனிடத்திலே கந்த சஷ்டி விரதம் இருந்து நவவீரர்களை வரப் பிரசாதமாக பெற்றவர். அவ்வாறு பெற்றதினாலே வையகம் முழுவதும் கோலோச்சி தன் வசப்படுத்தினான் பூவுலகில் திருவாரூரை மையமாக கொண்டு சிறந்த அரசாட்சி செய்தான் என்பது புராண தகவல் .இந்த நவ வீர வம்சமான செங்குந்தருக்கும் இதனாலையே திருவாரூர் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாயிற்று திருவாரூரில் நடக்கும் பக்த காட்சி திருநாள் முசுக்குந்த அர்ச்சனையும் பங்குனி உத்திரம் முசகுந்த அர்ச்சனையும் மேலும் புரட்டாசி பவுர்ணமி நாள் நடக்கும் முசுக்குந்த அர்ச்சனையும் திருவாரூர் செங்குந்தர் நாட்டாண்மை வள்ளல் சபாபதி முதலியார் அதாவது காலஞ்சென்ற சபாபதி முதலியார் பரம்பரையால் நம்மால் செய்யப்படும் ஒரு கட்டளை ஏனெனில் முசுகுந்தனால் இவ்வுலகிற்கு கொண்டுவரப்பட்ட நவவீரர்களே செங்குந்தர்களின் முன்னோர் அந்த நவவிரர்களின் தளபதி வீரபாகு முசுகுந்த சோழனின் வழியில் வந்த மங்கை ஆன புஷ்பகாந்தியை மணமுடித்தான் முசுகுந்தனோ வீரபாகுவின் மகளான சித்திரவள்ளியை மணமுடித்தான் அவர்களுக்கு முறையே அநங்கராஜன் அங்கினவர்மன்என்று வாரிசுகள் தோன்றின இந்த அநங்கராஜன் கருவூர் ஆட்சி பொறுப்பும் அங்கினவர்மன் காஞ்சிபுரம் மகாநாட்டு பொறுப்பும் பெற்றனர் என்பது புராணம் இப்படி நவகிர மரபும் மனு மாந்தா சோழகுலமும் ஒன்றோடு ஒன்று கலந்து ஓர் குலமாய்னர் இந்த கூடலே செங்குந்தரன் முதல் தலைமுறை என்று ஆகிறது இந்த சிறப்பும் ஈட்டி எழுவது உள்ளிட்ட ஏனைய திவ்ய செங்குந்த பிரபந்தங்களில் வருகிறது அவ்வாறாகவே சப்தவிடங்க ஸ்தலங்களிலும் முருகப்பெருமானின் படை வீடுகளிலும் திருவாலங்காடு சிதம்பரம் திருக்கழுகுன்றம் உள்ளிட்ட ஸ்தலங்களிலும் மற்றும் ஏனைய சைவ முருக தளங்களிலும் செங்குந்தர்கள் கைங்கரியம் செய்ய பேரு பெற்றவர்களாக இருந்தாலும் முசுகுந்த சக்கரவர்த்தி இடங்கரை ஸ்தாபனம் செய்த திருவாரூரில் செங்குந்தருக்கு முசுகுந்த அர்ச்சனை என்று முசுகுந்தன் தியாகராஜரை எவ்வாறு செங்குந்தர் உதவியோடு பூலோகத்தில் ஸ்தாபனம் செய்தானோ அந்த முசுகுந்தன் அந்த தியாகேசனை எந்த ஒரு அர்ச்சனையால் அவன் புகழ்ந்து வணங்கினானோ அந்த அர்ச்சனையின் கட்டளை அவன் வழியே வந்த அவனுக்குத் துணையாய் நின்றோர் வழியிலும் வந்த அதாவது முசுகுந்தனும் நவவீரர்களின் சந்ததியுமான செங்குந்தர்களிடத்திலே அந்த அர்ச்சனை கட்டளை இன்றளவும் இருப்பது ஒரு வரலாற்று சிறப்பு.
(முசுகுந்தச் சக்கரவர்த்தியும் செங்குந்தரும்)
புலவர் சொ. முருகேசனார்
சோழர் குலத்தில் தோன்றிய முசு குந்த மாமன்னன் வானவர் தலைவனா கிய இந்திரன் வேண்டுகோட்கு இணங் கிப் படைத் துணையாகச் சென்று அசுரர் களை எதிர்த்துப் போர் செய்தான். இந் அரசுக்குத் தோற்றுகூடிமுதவஞ்சனையால் இருள்படலத்தை யுண்டாக்கி இருளடையும் டை செய்தானும் அப்னமாம் திரு இந்திரன் பெரிய பூதம் ஒன்றையனுப்பி முசுகுந்த மன்னனுக்குத் துணை செய்யும்படி கட் டளையிட்டான். அப்பூதம் அசுரர் அனுப் பிய இருட் படலத்தைப் போக்கி. முசுகுந்த மன்னனுக்கு மந்திரவலியும் ஒளி யும் தந்து காப்பாற்றியது. அதன்பின் முசுகுந்த மன்னன் அசுரர் சேனையை வென்று இந்திரனுக்கு வெற்றி கிடைக் கச் செய்தான்.
போரில் முசுகுந்தனுக்கு உதவி புரிந்த பூதத்தை நோக்கி இந்திரன் முசுகுந்த மன்னனுடைய தலை நகரங் களுள் ஒன்றாகிய புகார் நகர் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருந்து உதவிபுரியும்படி கூறினான். அந்தப் பூதம் சோழர் தலைநகராகிய புகார் நகரத்தில் நான்கு தெருக்கள்கூடும் சதுக் கத்தில் தங்கியிருந்து, தீயோரைத் தண் டித்து நல்லோரைப் பாதுகாத்து வந்தது. வீரர்களுக்கு வெற்றியுண்டாகியதுபற்அது சதுக்கப்பூதம்
இச்செய்தி சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை, கடலாடு காதை ஆகியவற்றுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைப் பகுதியாலும், அவ்வுரை செய்யுகாடலும் நபெற்றுளளங்கும்மற்கோட்
விதூமன் என்னும் சுந்தருவன் தான் பெற்ற சாபத்தால் முசுவாக (குரங்காக) பிறந்தான். ஒரு நாள் அக் குரங்கு வில்வ சிவகங்கத் தல் கீழிருந்த சிவலிங்கத் திருவுருவத்தின் மேல் படுமாறு வில்வ இலைகளைப் பறித்துப் போட் டது. அதனை அருச்சனையாக ஏற்ற ருளிய சிவபெருமான் அம்முசுவினைச் சூரிய வமிசத்துத் திலீபன் என்னும் மன் னனுக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார்.
மன்னன் அவ்வாறே மகனாகப் பிறந்த அந்தக் குரங்கு சிவபெருமானை தனக்கு முன் நினைந்து பிவழிபட்டது. நினைவு னைப் மறவா திருக்க, குரங்கு முகமே இப்பிறவியிலும். தமக்கு இருக்க வேண்டுமென வேண்டிக் கொண்டது. இறைவன் அவ்வாறே அருள் புரிந்தார். அதனால் அவன் முக குந்தன் என்னும் பெயர் பெற்று விளங் கினான்.
விசித்திரவதி என்னும் பெண்ணை மணந்து கொண்ட முசுகுந்தன், வசிட்ட முனிவரை வணங்கி அவர் பணித்த வண் ணம் கந்தப் பெருமானைப் பல்லாண் டுகள் வழிபாடுசெய்து சுந்தவிரதத்தை இனிது நிறைவேற்றினான். அந்நிலையில் ஆறுமுகச் செவ்வேளாகிய முருகப் பெரு மான் முசுகுந்தனுக்கு அருள் செய்யும் பொருட்டு, மயில் மீதமர்ந்து தம் தம்பி யராகிய வீரவாகு தேவர் முதலிய இலக் சுத்து ஒன்பது வீரர்களும், தேவர்களும், பூதகணங்களும் புடை சூழ முசுகுந்தன் முன் எழுந்தருளி, "நீ விரும்பிய வரங் களைக் கேட்பாயாக' எனத் திருவாய் மொழிந்தருளினார்.
முருகப் பெருமானைக் கண்ணாரக் காணும் பேறு பெற்ற முசுகுந்த மாமன் னன், 'வீரவாகு தேவர் முதலாகவுள்ள இவ்வீரர்களை அடியேனுக்குப் படைத்த துணையாக வந்து உதவும்படி அருள் புரிதல் வேண்டும்' என வேண்டிக் கொண் டான். 'அவ்வாறே தருவோம்' என அருளிய கந்தப் பெருமான், வீரவாகு முத லிய வீரர்களை நோக்கி, "நீங்கள் என் பால் பேரன்புடைய இம்முசுகுந்தன் பால் சென்று, படைத் துணை களாக" எனப் பணித்தருளினார் புரிவீர் கேட்ட வீரர்கள், ''அசுரர்களையழித்துத், தேவர்கட்குத் துணைராகரிந்த யாங்கள் மனிதனாகிய செய்யும் முசுகுந்தனுக்கு படை வீரராய் இருக்க உடன் படமாட்டோம்" கள். ஏவல் என மறுத்துரைத்தார்.
ஞான நாயகனாகிய மான் அவர்களை நோக்கி, முருகப்பெரு நீங்கள் நம் மொழிக்கு உடன்படாது மறுத்து உரைத்தமையால், மானிடவுருவினை முசுகுந்தனுடைய சேனை வீரராய்ப் பூவுலகினை யடைந்து போர் கண் புகழ்னினாபால் வருவீராக" எனப்
முருகப் பெருமான் கூறிய மொழி" களைக் கேட்டுக்க நடுங்கிய வீரவாகுதேவர் முதலிய இலக்கத்து ஒன்பது வீரர்களும்; அடியேங்கள் செய்த பிழையினைப் பொறுத்து அருள்புரிதல் வேண்டும்' என வேண்டி வணங்கிப் பின்பு முசுகுந்த மன்னனுக்குத் துணையாய்ச் சென்றனர்.
முசுகுந்தன் தன் தலைநகராகிய கருவூரில் அவ்வீரர்கள் தங்கியிருத்தற்கு ஏற்ற மாட மாளிகைகளை அமைத்துக் கொடுத்து, அவர்கட்கு மன்னவர் குலத்துக் கன்னியரை மணம் புரிவித்தான். அவ் வீரர்களுள் முதல்வரான வீரவாகு தேவர் புட்பகந்தி என்னும் கன்னியை மணந்து சித்திரவல்லி, அனகன், சனகன் என்னும் மக்களைப் பெற்றார். தம் மகளாகிய சித்திரவல்லியை முசுகுந்த மன்னற்கு மணஞ் செய்து கொடுத்தார். இவ்வாறே ஏனைய வீரர்களும் மன்னவர் கன்னியரை மணந்து, தம் பெண்களை மன்னவகும் ரர்க்கு மணஞ் செய்து கொடுத்தும், மன் னவர் மகளிரைத் தம் மைந்தர்க்கு மணம் புரிவித்தும், முசுகுந்தச் சக்கரவர்த்தியின் படைத் தலைவராயிருந்து பகைவரை எதிர்த்துப் பொருது. வாகை சூடி நாட் டினைப் பாதுகாத்து வந்தனர்.
அக்காலத்தில் வலாசுரன் என்னும் அசுரன் தேவேந்திரனை எதிர்த்துப் போர்புரிய வந்தான். வானுலக வேந்தனா கிய இந்திரன் மண்ணுலக மன்னவனாகிய முசுகுந்தச் சக்கரவர்த்தியைத் தனக்குப் படைத் துணையாக வேண்டி அழைத் தான், இந்திரனுக்குப் போரில் உடனி ருந்து உதவி புரிதல் வேண்டி முசுகுந் தன், இலக்கத்தொன்பது வீரர்கள் முத லிய தன் சேனையுடன் விண்ணுலகு சென்று அசுரர்களைப் பொருது வென் றான்.
தன் பெரும் பகைவனாகிய வலா சுரனைப் போரில் வென்ற இந்திரன் தனக்குப் போரில் வெற்றியுண்டாகத் துணை புரிந்த முசுகுந்த மாமன்னனைத் மீன் அரண்மனைக்கு அழைத்து, அன்பு டன் உபசரித்தான்.
திருமால் தமக்கு மகப்பேறு வேண் டிப் பூசனை புரிந்ததும், அவரால் தனக்கு அளிக்கப் பெற்றதும் சோமாஸ்கந்த மூர்த்தியை நாள்தோறும் பூசனை வந்தான். இந்திரன் புரிந்து அவ்வாது ஒருசனை புரிந்து ருந்தண்டிருக்குந்போது ஒருவனுக்கு ஒரு நினைவு வந்தது. ஆகிய
எல்லாம் வல்ல சிவபெருமான் தம் திருமைந்தராகிய ல் முருகப் பெருமானும் தன்னிற்பிரிவில்லா மமாதேவியும் கயிலாய மலையில் உடனமர்ந்து அருள் புரியும் தெய்வக் காட்சி நினைவுக்கு வந்தது.
சஹ + உமா + ஸ்கந்த: சோமாஸ்கந்
தர்-உமையோடும், கந்தனோடும் கூடிய சிவபெருமான் என்பது பொருள். சிவ பெருமான் ஒருபாலும், உமாதேவியார் மற்றொருபாலும் இருக்க, அவ்விருவர்க் கும் இடையில் கந்தன் தங்கியிருக்கும் கோ லமே -சோ மா ஸ்கந்த என்பது.) வடிவம்
முசுகுந்த மன்னன் அத்தகைய தெய் வக் காட்சியினை இந்திரனால் வழி படப்பெறும் சோமாஸ்கந்த மூர்த்தியிற் கண்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.
அத்திருமேனியை அவன் உற்று நோக்கியபோது "நீ என்னைப் பூவுலகத் திற்குக் கொண்டு சென்று பூசனை புரி வாயாக" என்றதோர் அருள்மொழியினை இந்திரன் செவியிற்கேளாதவாறு சிவபெரு மான் முசுகுந்த மன்னனுக்கு உணர்த்தி யருளினார். அவ்வாறே செய்ய எண் ணிய முசுகுந்த மன்னன் நெஞ்சம் நெக் குருகி, அம்மூர்த்தியைத் துதித்துப் போற்றினான்.
சிவபூசனை முடித்தெழுந்த இந்தி ரன், போரில் தனக்கு உதவி புரிந்த முசுகுந்தனை நோக்கி, "போர்த் துணை புரிந்த உனக்கு ஒரு பரிசு அளிக்க விரும்புகிறேன். உனக்கு வேண்டுவது யாது? " என வினவினான். அதுகேட்ட முசுகுந்தன்: 'அப்பனும், சேயும் அம்மை யும்' என எழுந்தருளியுள்ள இந்தச் சோமாஸ்கந்த மூர்த்தியை எனக்கு அளித்தாயானால் யான் அம் மூர்த்தியை எடுத்துச் சென்று, பூவுலகிற் பூசனை செய்ய வாய்ப்பாகும்" என முசுகுந்தன் தன் விருப்பத்தை எடுத்துரைத்தான்.
அதனைக் கேட்ட இந்திரன், 'இத்திரு வுருவம் எனக்குச் சொந்தமானது அன்று.
திருமால் வழிபட்டு என்னிடம் தரப் வேன்றடும் ஆாேன், அவரது இசைவு முசுகுந்த மன்னன் திருமாலை யடைந்து வழிபட்டுச் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தான் பெறுவதற்கு இசைவு பெற்ற தாக இந்திரனிடம் தெரிவித்தான்,
அதுகேட்ட இந்திரன் அன்று ஈன்ற கன்றினைப் பிரிய நேர்ந்த தாய்ப் பசுவைப் போன்று வருந்தினான். சூழ்ச்சி யால் தெய்வத்தச்சனைத்திகொண்டு தன் னிடமுள்ள சோமாஸ்சுந்த மூர்த்தியைப் போன்று ஒரு திருவுருவம் அமைக்கச் செய்து, அதனை முசுகுந்தனிடம் தந் தான். அதனைக் கண்ட முசுகுந்தன் தனக்கு அருள் செய்தமூர்த்தி அதுவன்று எனத் திருவருட் குறிப்பால் உணர்ந்து, திருமால் வழிபட்ட மூர்த்தமே தனக்கு வேண்டுமென்றான்.
இந்திரன் அதுபோன்றே ஒன்றன் பின் ஒன்றாக. ஆறு திருவுருவங்களைத் தெய்வத் தச்சனைக் கொண்டு செய்து கொடுத்தான். முசுகுந்தன் ஒவ்வொன்றை யும் தனித்தனியே பார்த்து யான் கேட்ட திருவுருவம் இல்லை என்றான். இவற்றுள் ஒன்றும்
பின்னர்த் தான் வழிபாடு செய்த சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்தனி டம் கொடுத்தான். அதுபோன்று செய்த திருமேனிகளையும் அவனிடமே கொடுத்து, "இத்திருவுருவங்களைப் பூவுல கிற்கு கொண்டு சென்று வழிபடுவா யாக" எனக் கூறினான். அம்மூர்த்திக ளைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன். திருமால் வழிபட்டதும் இந்திரனாற் பூசிக் கப் பெற்றதுமாகிய சோமாஸ்கந்த மூர்த்தத்தைத் திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளச் செய்து நாள் வழி பாடும் திருவிழாக்களும் நடைபெற ஏற்பாடு செய்தான். அவ்வாறே ஏனைய திருமேனிகளையும் நாகப்பட்டி னம், திருநள்ளாறு, திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக் காடு ஆகிய திருக்கோயில்களில் எழுந் தருளவித்து, நாட்பூசனையும் திருவிழாக் களும் நிகழ ஏற்பாடு செய்தான்.
இந்திரன் தான் வழி பட்ட சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்தனி டம் கொடுத்தபின், தான் வழிபாடு செய்யத் தவறியதால் பொன்னாடு பொலி விழந்தது. இந்திரன் புலையுருவங் கொண்டான். திருவாரூரில் வீதிவிடங்கப் பெருமான் என்னும் சோ மா ஸ்கந்த மூர்த்திக்கு நிகழும் பெருவிழாவிற் பறை
262
யறைந்து புலையுரு நீங்கினான். பழைய உருப்பெற்று விண்ணுலகம் சென்று வானவர்க்கு வேந்தனாய் அமர்ந்து ஆட்சி புரிந்தான்.
விண்ணுலகினின்றும் தான் கொன ர்ந்த வீதி விடங்கப் பெருமானைத் திருவாரூரில் வழிபட்டிருந்த முசுகுந்த மாமன்னன், தன் தலைநகராகிய கருவூ ரில் தன் மகன் அங்கிவன்மனுக்கு முடி சூட்டிக் கயிலாயத்தை யடைந்து, சிவ பெருமான் திருவடி நீழலில் அமர்ந்து பேரின்பமுற்றான். அவனுக்குத் துணை யாய் வந்த வீரவாகு முதலிய இலக் கத்து ஒன்பது வீரர்களும் சுந்தவேளை எண்ணித் தவம் புரிந்து, கந்த வெற்பி னையடைந்து, வருளின்பத்தில் முருகவேளின் திரு திளைத்திருந்தார்கள். இச் செய்தி கந்த புராணம் தட்ச காண் டம் கந்தவிர தப் படலத்தில் விரித்து ரைக்கப் பெற்றுள்ளது.
மேற்குறித்த கந்த புராணச் செய்தி யினைக் கூர்ந்து நோக்குங்கால் முருகப் பெருமானுக்குத் தம்பியரான வீரவாகு தேவர் முதலான இலக்கத் தொன்பது வீரர்களும் சோழர் குலத்தோன்றலாகிய முசுகுந்த மாமன்னனுக்குப் படைத்துணை வராக முருகப் பெருமானால் அளிக்கப் பெற்று மானிடவுருவந்தாங்கி முசுகுந்த மன்னனுடன் சோழ நாட்டில் தங்கிய வர்கள் என்பதும், முசுகுந்த மாமன்ன னின் நன்மதிப்புக்குரியராய் உறையூரை அடுத்துள்ள கருவூரில் மன்னன் அளித்த மாளிகைகளில் தங்கியிருந்து மன்னனு டன் மணவுறவு கொண்டு, மன்னவர் மகளிரை மணந்து, வாழ்ந்தவர்கள் என்ப தும், முசுகுந்தன் மண்ணுலகத்து ஏனைய மன்னர்களோடும், விண்ணுலகில் அசுரர் களோடும் நிகழ்த்திய போர்களில் படை முதலிகளாகச் சென்று, பகைவரொடு பொருது. சோழ மன்னனுக்கு வாகை மாலை சூட்டிய பெருவீரர்கள் என்ப தும் நன்கு விளங்கும்.
இவ்வாறு முசுகுந்தனுக்குப் போர் களில் உடனிருந்து உதவிய வீரவாகு முதலிய இலக்கத் தொன்பது வீரர்களின் வழித் தோன்றல்களே செங்குந்த மரபி னர் ஆவர். இவர்கள் போரிற் குந்தம் பகைவர்களை எதிர்நின்று போர்செய்து, வெற்றி பெறும் பெருவீரராகி கினமையால் செங்குந்தர் என அழைக் சுப்பெற்றனர். விளங்
இவர்கள் முன்னணிப் படையாகிய தார்ப் படையிலும், பின்னணிப் படை யாகிய கூழைப் படையிலும், நடுநிலைப் படையாகிய பேரணியிலும் நின்று போர் புரியும் ஆற்றலுடன் பகைவர் சேனையை இரு பக்கங்களிலும் சென்று வளைத்துப் பொரும் கைகோட்படை சிறந்து வீரராகவும் விளங்கினார்கள். அதுபற்றியே சோழர் கல்வெட்டுகளில் 'கைக்கோளர்" என்ற பெயராற் குறிக்கப் பெற்றுள்ள
கைக்கோளர் என்னும் சொல் பகை சேனையை இருபக்கங்களிலும் வர் சூழ்ந்து வளைத்துப் போர் புரியும் படை வீரர் என்னும் பொருளில் வழங்கப் பெறுவதாகும். இவ்வாறு சோழமன்னர் களோடு உறவு முறைத் தொடர்பும், மன்னர்களின் நம்பிக்கையும் பெற்ற கைக்கோ ளரா கிய செங்குந்தர்கள் முசு குந்த சக்கரவர்த்தி காலமுதல் மூன்றாம் இராசேந்திரன் ஆட்சி புரிந்த காலம் வரை சோழ மன்னர்களின் நம்பிக்கைக் குரிய உறுதுணைவராய்ச் சோழர் ஆட்சி யில் படைத் தலைமைப் பணி புரிந்து பகைவர்களை வென்று நம் தமிழகத்
தைப் பாதுகாத்துப் பேணியும், நம் நாட்டுத் திருக்கோயிற் பணிக்கும், நல்ல றங்கள் பலவற்றிற்கும் நிலங்களையும் பொன்னையும் உளமுவந்து ஈகையிலும் அறக் கொடையாக வழங்கியும் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள்.
இச் செய்தி சோழ மன்னர்களால் வரையப்பட்ட கல்வெட்டுகள் பலவற் றாலும் அறியப்படும் வரலாற்று உண் மையாகும். செந்தமிழ்க் கடவுளாகிய கந்தவேளின் தம்பிமார்களாகிய வீரவாகு தேவர் முதலிய இலக்கத் தொன்பது வீரர்களின் மரபில் தோன்றி. முசுகுந் தன் முதலிய எக்காலத்தும் சோழ மன்னர்களுக்கு மாறுபடாத உறுதுணை யாய் நின்று, பகைவரை வென்றடக்கித் தமிழகத்தினையும், தமிழ் நாட்டுத் திருக் கோயில்களையும், அறநிலையங்களையும் தம் உயிரினும் சிறந்தனவாகக் கொண்டு. பாதுகாத்த பெருமை செங்குந்தர்களாகிய கைக்கோளப் படை வீரர்க்குரிய தனிச் சிறப்பாகும்.