A.V.RM.V. சங்கரநாராயணன் முதலியார் (கோமதி மில்ஸ்)

0

 



அம்பாசமுத்திரம் செங்குந்த கைக்கோளர் குல வேலாயுதம் முதலியார், ராமசாமி முதலியார், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் சங்கரநாராயணன் முதலியார்.

இவர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 14வது செங்குந்தர் மாநில மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இவர் மற்றும் இவர் குடும்பம் தென் தமிழகத்தில் வாழும் செங்குந்த கைக்கோளர் சமூக மக்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல உதவிகளை செய்தனர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் புரவலரும், ஆலை அதிபருமான ஏ.வி.ஆர்எம்.வி. சங்கரநாராயணன் அவர்கள் 20.08.2004 அன்று 75-ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தென்னிந்திய செங்குந்தர் ஆறாவது மாநாடு அம்பாசமுத்திரத்தில் 1936-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27, 28 தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதற்குக் காரணமாக இருந்தவர் மாநாட்டின் பொதுச்செயலாளர் ஏ.வி.ஆர்எம். வேலாயுத முதலியார் ஆவார். அந்த பெருமகனாரின் மூத்த புதல்வர்தான் நம் புரவலர் சங்கரநாராயணன் அவர்கள். d சங்கரன்கோவிலிலும், அம்பையிலும் கைத்தறி ஜவுளி உற்பத்தி செய்து, பெரும் வணிகம் செய்து வந்தனர். இரண்டு ஊர்களிலும் நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் வாழ வகை செய்தவர்கள். எனவேதான் இன்றும் நம் புரவலரை அந்த பகுதியில் நம் சொந்தங்கள் "முதலாளி" என்று அன்புடன் அழைக்கின்றனர். gar, net கைத்தறி ஜவுளி உற்பத்தியிலிருந்து, நூற்பாலை உட்பட வேறு பல தொழில்களிலும் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் இன்று மிகப் பெரிய தொழிலதிபராக நம் புரவலர் திகழ்ந்து வருவது நமக்கெல்லாம்.

தந்தையை போலவே சமுதாய பணியிலும் நாட்டம் கொண்டு தென்னிந்திய செங்குந்த மாகஜன சங்கத்தின் புரவலராக இருந்து சமுதாய முன்னேற்றத்திற்கு நல் ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி வருகின்றார். 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23, 24 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற 18-ஆவது மாநில மாநாட்டின் வரவேற்புக் குழுவின் சிறப்பு தலைவராக இருந்து மாநாடு வெற்றிபெற பெரிதும் உறுதுணையாக இருந்தார். சமுதாயப்பணியுடன் கல்விப்பணியிலும் ஈடுபட்டு அம்பையில் ஏ.வி.ஆர்எம்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.வி.ஆர்எம்.வி. ஆங்கிலப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளையும், தனது நெடிய அனுபவத்தைக் கொண்டு, நகர்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக, நீச்சல் குளம் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய சிறந்த பள்ளியாக நடத்தி வருகின்றார். பவள விழாக் கானும் ஏ.வி.ஆர்எம்.வி. சங்கரநாராயணன் சாவித்திரி சங்கரநாராயணன் தம்பதியினர் நலமுடனும் வளமுடனும் வாழ்வாங்கு வாழ்ந்து, முத்துவிழா, நூற்றாண்டு விழாக் காண வேண்டுமென எல்லாம் வல்ல செந்தில் கந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி அனைவரின் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



கோமதி மில்ஸ் நுழைவுவாயில்






இவரின் பிறந்த தேதி, இவரின் வாழ்க்கை வரலாறு, இவரின் கூட்டம் பெயர் குலதெய்வம் பெயர் மற்றும் போட்டோக்கள் போன்ற தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு What's app எண்ணுக்கு அனுப்பவும்  78269 80901

Post a Comment

0Comments
Post a Comment (0)