வீராணம் ஏரியை காப்பாற்றிய செங்குந்தர் பெரிய வேசம் மற்றும் வாய் பூட்டு திருவிழா

0

போர்மரபினரான செங்குந்தர் கைக்கோளர்கள், வீராணம் ஏரியில் இருந்த கன்னட இராஷ்டிரகூட வல்லான்  என்ற மன்னனை அழித்த நிகழ்வை நினைவு கூறும் திருவிழா. 


தமிழகத்திலேயே மிகப்பெரிய ஏரி என்றால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி தான் 

950 ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரியில் வல்லான் என்ற அசுரன் கம்பம் நட்டு அதில் மாளிகை கட்டி வாழ்ந்து வந்தான் அவனின் இன்னல்கள் தாங்காமல் மக்கள் கஷ்டம் அடைந்தனர். இதனை சேரர் சோழர் பாண்டியர் ஒன்று சேர்ந்து இந்த அரக்கன் மீது போரிட்டனர் ஆனால் மூவேந்தர்களால்  வெற்றிபெற முடிய வில்லை.

இதையடுத்து, 

 முருகபெருமானுக்கு துணையாக இருந்து சூரபத்மன் என்ற அரக்கனை அளித்த வீரவாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சத்தில் வந்த செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களுக்கு அசுரனை அளிக்கும் தெய்வ சக்தி இருப்பதால்
மூவேந்தர்கள் ஒன்று கூடி செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்திடம் உதவி கேட்டனர்.

வீராணம் ஏரியை காப்பாற்றிய செங்குந்தர் பெரிய வேசம் மற்றும் வாய் பூட்டு திருவிழா
வீராணம் ஏரியை காப்பாற்றிய செங்குந்தர் பெரிய வேசம் மற்றும் வாய் பூட்டு திருவிழா

நவவீரர்கள் வம்சம்
போர்மரபினரான செங்குந்தர் கைக்கோளர்கள், வீராணம் ஏரியில் இருந்த வல்லாலகண்டன் என்ற ஒரு அசுரனை அழித்த நிகழ்வை நினைவு கூறும் திருவிழா. 



தமிழகத்திலேயே மிகப்பெரிய ஏரி என்றால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி தான் 

 வீராணம் ஏரி கட்டப்பட்ட  சில வருடங்களில் ஏரியில் கன்னட அரசன் வல்லன் என்ற அசுரன் கம்பம் நட்டு அதில் மாளிகை கட்டி வாழ்ந்து வந்தான் அவனின் இன்னல்கள் தாங்காமல் மக்கள் கஷ்டம் அடைந்தனர். இதனை சேரர் சோழர் பாண்டியர் ஒன்று சேர்ந்து இந்த அரக்கன் மீது போரிட்டனர் ஆனால் மூவேந்தர்களால்  வெற்றிபெற முடிய வில்லை.

இதையடுத்து, 

 முருகபெருமானுக்கு துணையாக இருந்து சூரபத்மன் என்ற அரக்கனை அளித்த வீரவாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சத்தில் வந்த செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களுக்கு அசுரனை அளிக்கும் தெய்வ சக்தி இருப்பதால்
மூவேந்தர்கள் ஒன்று கூடி செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்திடம் உதவி கேட்டனர்.


இதற்க்கு சம்பத்தம் தெரிவித்த செங்குந்தர்கள் 
12 பேர் சேர்ந்து நாங்கள் அவனை கொள்ளுவோம் என்று கூறி சென்றனர்.

வீராணம் ஏரி கரை சென்றனர் அங்கு தண்ணீர் அதிகமாக இருந்ததால் 3 செங்குந்தர்களை வெட்டி தெப்பம் செய்து அசுரனின் கோட்டை யை மீதமுள்ள 9செங்குந்தர் வீரர்கள் அடைந்தனர். 

கோட்டை மதிலில் அசுரன் யாரும் ஏரா வண்ணம் எண்ணெயை ஊற்றி இருந்தான். மீதி இருந்த 9 பேரில் 3 பேரை வெட்டி இரத்த மணல் பிசைந்து சுவற்றில் அடித்து ஏறி உள்ளே சென்று 6 பெயரும் பதுங்கி இருந்தனர். அசுரனை பார்த்தவுடன்  6 நபரும் எழுந்து நின்று அசுரனை கொல்ல முயன்றனர் அப்பொழுது அசுரனின் மனைவி மடிபிச்சை கேட்டதால் அவனை விட்டுவிட்டு அவனது நாட்டை கைப்பற்றினர்,  அசுரனும் வேறு இடத்துக்கு சென்றுவிட்டான். 
இதில் ஒருவர் அந்த அசுரனின் குதிரை லாயத்தில் கையில் கத்தி குத்தப்பட்டார் அத்துடன் சண்டையிட்டு மடிந்தார்.

அசுரனை விரட்டி வெற்றியடைந்த 5 செங்குந்தர் கைக்கோளர்கள் காளியிடம்  நன்றி செலுத்தும் விதமாக அந்த  5 செங்குந்தர் கைக்கோளர் வீரர்களும் காளியை வேண்டி நவகண்டம் செய்துக்கொண்டனர்.இதனை பகல் வேஷம் மற்றும் வாய்ப்பூட்டு என்று சொல்வர்.
தெப்பத்திற்காகவும் இரத்தத்தை மணலில் ஊற்றுவதற்காகவும் கையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் போர் செய்து வெற்றி பெற்றவர் நினைவாக இரவில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வேடம் ஏற்றப்படும் இதனை பெரிய வேஷம் என்று சொல்வர். மற்றும் கையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வேடம் ஏற்றப்பட்டவரை கையடக்கம் என்று சொல்வர்.இது இரவு நேரங்களில் ஊர்வலமாக செல்வர்.







இதையடுத்து தாங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அந்த  5 செங்குந்தர் கைக்கோளர் வீரர்களும் காளியை வேண்டி நவகண்டம் செய்துக்கொண்டனர்.
 The right side one is Kai adakkamAnother three is the memorial of dead 6 members


They sworn the knife inside the neck


He sworn the knife inside of his hand







கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், உடையார்குடி துர்க்கையம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் இந்நிகழ்வு வருடம்தோறும் நடைபெறும்




இந்த விழா வரலாற்றை பற்றி மேலும் தகவல் தெரிந்தவர்கள் comment யில் தெரிவிக்கவும் அல்லது 7826980901 என்ற எண்ணுக்கு what's app செய்யவும். 


கோட்டை.





கர்நாடக மாநிலம் Malur தாலுகாவில் உள்ள கல்வெட்டு. Epigraphia Carnatica 12 volumes 1886 to 1904. சிங்கீசுவர நயினார் கோயிலை சேர்த்த பால பட்டர், வல்லானை வென்ற  கைக்கோளர் சர்வ மானியமாக நிலத்தை சில நபர்களுக்கு கொடுத்துள்ளனர்.


1271 ஆம் ஆண்டு கல்வெட்டில் தென்னாற்காடு சேஷனூர் கோவில் கல்வெட்டில் செங்குந்த கைக்கொளர்கள் வல்லானை வென்றான் திருமண்டபம் என்ற பெயரில் கோவில் மண்டபம் கட்டியது கல்வெட்டு மூலம் தெரிகிறது.


பாண்டியர் இரண்டாம் மாறவர்மன் (திரிபுவன சக்கரவத்தி வீரபாண்டியன்) 10 ஆவது ஆட்சி ஆண்டு ( பொயு 1350 ) கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டு, ஜயங்கொண்டசோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு ஆற்றூர் என்கிற இராஜராஜநல்லூர் ஊரில் உள்ள திருமுத்தீசுர முடைய நாயனார் கோயிலில் புரட்டாதி மாதத்தில் ஒன்பது கைக்கோளர்கள் 44 பணம் பெற்றுக்கொண்டு தங்கள் உபயமாக நடத்தி வந்தனர். திருக்காரொளி நாள் திருவிழாவினை எடுத்தான் என்கிற காலிங்கராயன் என்பவனும், இரண்டாம் திருநாள் சிற்றம்பலவன் என்பவனும், மூன்றாம் திருநாள் பெருமாள் என்கிற தொண்டைமண்டலக் காங்கேயன் என்பவனும், நான்காம் திருநாள் வத்தராயன் மகள் முதலிச்சி என்பவளும், ஐந்தாம் திருநாள் அறமளத்தான் என்கிற கண்டியதேவன் என்பவனும், ஆறாம் திருநாள் திருநட்டப்பெருமாள், ஏழாந் திருநாள் வல்லானை வென்றான் என்பவனும், எட்டாம் திருநாள் பாசன் என்பவனும், ஒன்பதாம் திருநாள் காவன் தொண்டைமான் என்பவனும் ஒன்பது திருநாள்களையும் நடத்தி வந்துள்ளனர். இக்கோயில் காணியுடைய சிவபிராமணர்கள் 175 பணம் பெற்றுக்கொண்டு, இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதல் ஒன்பது நாள் திருவிழாவினைத் தாங்களே நடத்துவதாக உறுதியளித்துள்ளனர் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது. - காஞ்சிபுர மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி - 5 புத்தகத்தில் இது உள்ளது


Post a Comment

0Comments
Post a Comment (0)