பிறப்பு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் செங்குந்த கைக்கோளர் மரபு பிரபல நூல் வியாபாரி திரு ஏ ஜெகநாத முதலியாருக்கும் திருமதி பழனியம்மாளுக்கும், இரண்டாவது மகனாக பிறந்தார். திரு AJ அருணாசலம். குடியாத்தம் நகரில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்தார். பின்பு இண்டர்மீடியட் படிப்பை வேலூர் நகரில் உள்ள புகழ் பெற்ற ஊரிஸ் கல்லூரியில் முடித்து பிஏ பட்ட படிப்புக்கு சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதே நாட்டு பற்று கொண்டவராக விளங்கினார்.
வாழ்க்கை & சுதந்திரப்போராட்டம்
தன் சொந்த ஊரான குடியாத்தம் நகரில் சண்முகர் கம்பெனி என்கின்ற நூல் வியாபாரத்தை துவக்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் நகருக்கு வரும் தேசிய தலைவர்களின் கூட்டங்களுக்கு 1941 ஆம் ஆண்டு, கல்லுக்கடை போராட்டத்தில் 1939 ஆம் ஆண்டு கலந்து கொண்டு வேலூர் மத்திய சிறை சாலையில் 10 மாதங்கள் கைதியாக இறந்தார்.
1935 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் துவக்கப்பட்டது கோவை திவான் பகதூர் சி ரத்தினசபாபதி முதலியார், ஆந்திரா பேராசிரியர் என்ஜி ரங்கா மற்றும் திரு எம். சோமப்பாவுடன் நட்பு கொண்டார்.
பின்பு நெசவாளர் சங்கம் துவக்கப்பட்டது தொடர்ந்து 3 தலைவர்களுடன் இணைந்து துணை தலைவராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டுத் தலைவராகத் தேர்வு பெற்ற பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார் தலைவராகவும் அவருடன் துணைத் தலைவராகவும் 1967ஆண்டு வரை மொத்தம் முப்பது ஆண்டுகள் துணை தலைவராக பணி ஆற்றிய பெருமை அருணாச்சல முதலியார் அவர்களுக்கு உண்டு.
1949 ஆம் ஆண்டு குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று MLA ஆனார் அருணாச்சல முதலியார்.
அப்போது முதல்வராக இருந்த PS குமாரசாமி அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.
1952 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அருணாச்சல முதலியார்.
கர்மவீரர் காமராஜரை முதல்வர் ஆக காரணமாக இருந்த அருணாச்சல முதலியார்.
1952 தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணம் சட்டமன்ற தேர்தலில் இராஜாஜி முதலமைச்சர் ஆனார். இராஜாஜி செய்த ஒருசில தேவையில்லாத செயல்களால் இராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தமிழக முதலமைச்சராக வரவேண்டிய தகுதி காமராசர்க்கு மட்டுமே காங்கிரஸ் கட்சியில் இருந்தது. ஆனால் காமராசர் அப்போது எம்எல்ஏ வாக இல்லாததால் முதலமைச்சர் பதவியில் சிக்கல் இருந்தது ஆறு மாதத்திற்குள் எம்எல்ஏ ஆகவில்லை பதவி பறிபோய்விடும்.
1954ஆம் ஆண்டு ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் அவர்கள் தன் தலைவர் காமராசர் முதல்வராகத் தொடர, தன் MLA பதவியைத் தானாக முன்வந்து ராஜினாமா செய்தார்.
மற்றொரு நேர்மையான அரசியல் தலைவரான செங்குந்தர் குல திருப்பத்தூர் கா.அ சண்முகம் முதலியார் .எக்ஸ்எம்எல்ஏ
பின்பு தன் தலைவர் கே.காமராஜ் நாடார் அவர்களை (செங்குந்த முதலியார் அதிகம் உள்ள) குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் மற்றும் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எம் வி சாமிநாத முதலியார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு காமராஜரை அதிக வாக்கு வித்தியாசத்தில் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற வைத்தார்கள்.
இதனால் காமராஜர் முதல்வர் பதவியை ஆபத்தினறி சிறப்பாக தொடர்ந்தார்.
ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் MLC யாக வெற்றிபெற்றார் (1956 முதல் 1962 வரை சிறப்பாகப் பணியாற்றினார்)
மக்கள் பணிகள்
ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சி ஆக இருந்த காலத்தில் குடியாத்தம் நகருக்கு பெரிய பாலம் கட்டித்தந்தார்.
- கூட்டுறவு நகர பேங்க் உருவாக்கப் பட்டது.
- பாலிடெக்னிக் கல்லூரியை கொண்டு வந்தார்.
- அரசினர் கலைக்கல்லூரி அமைத்துத் தந்தார்.
- அரசினர் மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது.
- டவுன் பஸ்கள் விட ஏற்பாடு செய்தார்.
- பல கிராமங்களில் துவக்கப்பள்ளி உயர் நிலைப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக திரு. எம்.பி நாச்சிமுத்து முதலியார் அவர்களும் துணைத் தலைவர் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் அவர்கள் இருந்தபோது கோ ஆப்டெக்ஸ் தலைமையிடத்தில் வருடம்தோறும் கைத்தறி கண்காட்சி நடத்தப்பட்டது. கைத்தறி துணிகளின் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 18 கூட்டுறவு நூற்பு ஆலைகள் துவங்கப்பட்டன. முதல் நூற்பாலை திருநெல்வேலி,பொதட்டூர்பேட்டை மற்றும் வேலூரில் அரியூரில் துவக்கப்பட்டது. ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் எல்லா நூறு ஆலைகளிலும் இயக்குனராகப் பணி ஆற்றினார். நெசவாளர்கள் பிரச்சினைகள் பற்றி பலமுறை சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் பேசி உள்ளார். கைத்தறி அருணாசலம் என்று சட்டமன்றத்தில் அழைக்கப்படுவார். இவர் வட ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாவட்ட துணை தலைவர், நகர தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்து உள்ளார். அருணாச்சல முதலியார் அவர்களின் சேவையை போற்றும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் (பாலசுந்தரம் பில்டிங்) 1960 ஆம் ஆண்டு 6 1/2 அடி உயரம் 3 1/2 அடி அகலம் கொண்ட பெரிய போட்டோ முதல்வர் காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே போன்று குடியாத்தம் நகரில் நெசவாளர்களின் குடியிருப்புக்கு அருணாசல நகர் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தேசபக்தியும், தெய்வபக்தியும் உடைய அருணாச்சல முதலியார் அவர்கள் தமது மகன்களுக்கு கொடிகாத்த குமரன், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்று தேசிய தலைவர்கள் பெயர் இட்டார். மேலும் நமது செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் (SES) சென்னையில் திரு. DAS பிரகாசம் IAS அவர்களுடன் இணைந்து அருணாச்சல முதலியார் அவர்களின் மூத்த மகன் வழக்கறிஞர் AJA குமரன் அவர்கள் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகி அவர்கள் தமது 86 ஆம் வயதில் 9 மார்ச் 1993 அன்று இயற்கை எய்தினார்.