சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார்

0

 

செங்குந்தர் கைக்கோள முதலியார்             ⚜குலத் தோன்றல்⚜
18ஆம் நூற்றாண்டில் இறை தொண்டுக்காக நவகண்டம் செய்து கொண்ட 
சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார்
17 ஆம் நூற்றாண்டு சேவூர் கச்சி அண்ணாமலை முதலியார் மகன் முத்துக்குமார நயினார் என்னும் சைவ மத சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார் கடவுளை வேண்டி நவகண்டம் செய்து கொண்டதாக பண்டைய செப்பேடு கூறுகிறது.

மைசூர் மகாராஜா முத்துக்குமாரசாமி சித்தருக்கு 1741ஆம் ஆண்டு செம்பு பட்டயம் எழுதிக் கொடுத்தார்.

சேவூர் செங்குந்தர் செப்பேடு

 இந்த செப்பேட்டில் முதற்கண் செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் பெருமை தொகுத்துக் கூறப்பட்டது. கொங்கு 24 சமயமுதலி பட்டக்காரர் உள்ளிட்ட சமூகப் பெரியவர்கள் கூடிய கூட்டத்தில் தலைப்பலி(நவகண்டம்) செய்து கொண்ட சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார் தன் மகன் குப்பமுத்து முதலியார் ராஜாதிபதி மண்டல அதிபதி மடாதிபதி என்று பட்டம் சூட்டினார். செங்குந்தர்கள் மடத்திற்கு கொடுக்க வேண்டிய வரிகளை பற்றி கூறப்படுள்ளது. இடங்கைப் பிரிவினர் என்று கூறப்படுகின்றது.
சித்தரின் 8ஆம் வம்சாவளியான சின்னசாமி முதலியார் பாதுகாத்து வருகிறார்.

முத்துகுமார் சித்தர் வழிபட்ட ஸ்படிக வினாயகர் , ஸ்படிகலிங்கம்,  காமாட்சி அம்மன் உள்பட உள்ளது, சேவூர்.
முதன்முதலில் கோவை மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் முத்துக்குமாரசாமி ஜீவ சமாதி கோயில் காணியாளர்கள் ஆன கொளப்பலூர் அருணாசல முதலியாரிடம் 
பெறப்பட்ட இச்செப்பேடு ஆவணம் செய்யப்பட்டது.


இந்த செப்பேட்டில் உள்ள தகவல் கிழே உள்ள படத்தில் காணலாம்👇











சேவூர் செங்குந்தர் செப்பேடு முன்பக்கம்

சேவூர் செங்குந்தர் செப்பேடு பின்பக்கம்






சித்தர் முத்துக்குமார சுவாமி முதலியார் வரலாறு புத்தகம்
Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்


Post a Comment

0Comments
Post a Comment (0)