பாம்பன் சுவாமிகள் அருளிய செங்குந்தர் நவவீரர் நவரத்தின கவிவிருத்தம்

0
அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் காஞ்சிபுரம் ஐயன் பேட்டை செங்குந்தர் மரபினர்கள் வேண்டுகோளின்படி ஐயன்பேட்டை கந்தப்பர் கோவிலில் செங்குந்தர் நவவீரர் கலிவிருத்தம் அரங்கேற்றினார்.



இதை நாகலிங்க முனிவர் முத்து விழா மலரில் பின்வருமாறு கூறுகிறார் 
 அண்மையில் முருகப்பெரு மான் திருவடியடைந்த பாம்பன் சுவாமிகள் வடமொழி தென் மொழியாகிய இருமொழிகளையும் நன்குதேர்ந்த பெரும்புலவர். ஆரவாரமற்ற மிக்க தூய்மையும் அமைதியும் நிறைந்த துறவு நிலை யில் நின்றவர். முருகன் திரு வடிகளைக் கணமேனும் மறவாத தவ நிலையினர். திருப்பா, பரிபூர ணானந்தபோதம் முதலிய பல அரிய ஞான நூல்களை இயற்றி யு த வி ய அருளாசிரியருமாவர். இப்பெரியாரைப்பற்றி யறியாத சென்னைவாசிகள் இருக்கமாட் டார்கள். காஞ்சிபுரத்தையடுத்த ஐயம்பேட்டைப் பெரியதெரு வென வழங்கும் கந்தப்பர் தெரு ய வில் திருக்கோயில்கொண்டுள்ள கந்தப்பெருமான்மீது பாடிய கந்தகோட்ட மும்மணிக்கோவை யும், நவவீரர் நவரத்தனமும் ஆகிய இரு பிரபந்தங்களையும் சுவாமிகளே கந்தப்பர் கோயிலில் அரங்கேற்றினார்கள். அதுபோது அவற்றைக்கேட்டு மகிழும் பேறு பெற்ற யான் சிறப்புப்பாயிரமாக ஒருபாடல் பாடியுள்ளேன். நூல் களைக்கேட்டு மகிழ்ந்த ஐயம் பேட்டைவாசிகள் சுவாமிகளைப் பல்லக்கில் வைத்து நகர்வலஞ் செய்வித்துப் பாராட்டினர். இவ் வரங்கேற்றத்தின்போது ஐயம் பேட்டையிற் பெரும்புலவராக விளங்கிய சூரப்பமுதலியா ரவர் களும் பிறபுலவர்களும் வந்திருந் தனர்.


நவவீரர் கலிவிருத்தம் உருவான கதை. நவ வீரர்களை பற்றி பாம்பன் சுவாமிகள் இயற்றிய அந்த ஒன்பது பாக்கள் நவகிரர் நவவீரர்  செய்யும் அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயம் , 20 ஆம்  நூற்றாண்டின்ஆகா சிறந்த  முருக உபாசகரும்  சைவ சித்தாந்த  ஞானியும் ஆன பாம்பன் சுவாமிகள் காஞ்சிபுரம்அய்யம்பேட்டையில் உள்ள செங்குந்தர்  கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு வந்து அடியார்கள் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு தங்கி இருந்து வழிபாடு  செய்துள்ளார் ,இவ்வாறு செய்யும் பொழுது அங்குள்ள கந்தகோட்ட  பெருமான் மீது மும்மணி கோவையும் பாடிசெங்குந்தரன் வேண்டுங்களுக்கு  இணங்க நவவீரர் கலிவிருத்தம் என்று செங்குந்தர் முன்னோரான முருகபெருமானின் அனுஜர்கள் என்ற சகோதரர்கள் ஆன ஒன்பது வீரர்கள் ,வீரவாகு    உள்ளிட்ட ஒன்பது வீரர்களின் புகழையும் சேர்த்து பாடியுள்ளார் இது காஞ்சி நாகலிங்க முனிவர் நேரிலே பார்த்து இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார் பாம்பன் சுவாமிகள் இவ்வாறு இயற்றிய இந்த படைப்புகளால் மனம் குளிர்ந்த செங்குந்த பெரியோர்கள் புலவர்கள் சான்றோர்கள் அய்யம்பேட்டையில் ஒன்று கூடி பாம்பன் சுவாமிகள் பல்லக்கு மீது அமர செய்து நகர உலா  செய்தித்து அவரை சிறப்பித்து வைத்துள்ளனர் .செங்குந்தருக்கும் செங்குந்தரின் நவவீர மரபையும்   பெரும் மாபெரும் பக்தரான பாம்பன் சுவாமிகளால் அங்கீகரிக்கப்பட்டது மனம் குளிர வைக்கும் செயலாகும்

Post a Comment

0Comments
Post a Comment (0)