![]() |
| 1271 ஆம் ஆண்டு கல்வெட்டில் தென்னாற்காடு சேஷனூர் கோவில் கல்வெட்டில் செங்குந்த கைக்கொளர்கள் வல்லானை வென்றான் திருமண்டபம் என்ற பெயரில் கோவில் மண்டபம் கட்டியது கல்வெட்டு மூலம் தெரிகிறது. |
வன்னியர் ஓலை சுவடியில் செங்குந்தர் வல்லானை வென்ற செய்தி
தெலுங்கு மொழியில் உள்ள வன்னியர் குல கைபீது(mackensie manuscript no:91 , கைக்கோளர் வல்லானை வென்று விருது பெற்ற நிகழ்வை கூறுகிறது , இந்த கைபீத்தின் சுருக்கமான ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றுமே இணையத்தில் உள்ளது , இந்த கைபீதின் முழு தெலுகு பிரதி கிடைத்தால் ஆந்திராவில் ஏன் செங்குந்தர் கரிகால பக்தலு என்று அழைக்க படுகிறார்கள் மற்றும் ,செங்குந்தர் , வன்னியர் படைகள் பற்றி இன்று நமக்கு தெரிய வராத பல தகவல்கள் தெரியக்கூடும். கிடைக்கப்பெற்ற சுருக்கமான ஆங்கில விளக்கத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:-
”ஒரு காலத்தில் விரவீர விக்ரம சோழன் என்று ஒரு மன்னன் இருந்தான்
விக்ரமபுரத்தை ஆண்ட முடிகொண்ட சோழனின் குடும்பம். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். முற்பிறவியில் காளஹஸ்தி கடவுளுக்கு சேவை செய்யும் யானையாக இருந்தத, கரிகாலன் என்று பெயர் பெற்றவர். கரிகாலன்
வயதுக்கு வந்ததும் மலையாளாவின் மகளான புண்யவதியை மணந்தார்
அரசன் அவனை அரியணையில் அமர்த்தினான், விக்ரமசோழனும் அவனுடைய ராணியும்
காட்டிற்கு ஓய்வு பெற்றார். கரிகாலன் மேரு மலை வரை நாடு முழுவதையும் கைப்பற்றினான். அவர்
காவேரியின் குறுக்கே அணை கட்டும் பணியை மேற்கொண்டார். இப்பணியில் தனக்கு உதவியாக தன்னைச் சார்ந்த அரசர்கள் அனைவரையும் வரவழைத்தார்.
அப்போது கடலுக்கு நடுவே இருந்த வல்லான் மறுத்து விடவே , பள்ளி,கைக்கோளர் ,மற்றும் இன்னொரு சமூகம் குறிக்கப்படுகிறார்கள் , வல்லானை வென்று அவன் சிரசை கொண்டு வருகிறார்கள் .அதனால் அவர்களுக்கு சோழகுமாரர்கள் என்ற அந்தஸ்தும் பல்லக்கு சங்கு போன்ற சிற்றரசற்கு உரிய சிறப்புகளையும் கரிகாலன் வழங்கினான் .மேலும் cholarajyasthabaneraya,bhallanarayanisirahkhandana,dhanukulagotrapavitra etc போன்ற பல விருதுகள் கரிகால சோழனால் வழங்க பெற்றன .” link
கைக்கோளர் வீரர்கள் வீர நாராயணர் மீது பாடப்பட்ட விஜயநூலில் சோழர்காலத்து கைக்கோளரின் அணைத்து செயல்பாடுகளையும் விவரிக்கிறது , வஸ்திர வியாபாரம் , அரசவை புலவர் ,சோழரின் அணுக்க தொண்டர் மற்றும் மெய்க்காப்பாளர் ,மன்னரின் பல்வேறு படைகளில் பணியாற்றியது என்று சகல விஷயங்களும் குறிக்கப்படுகிறது ,இவ்வாறு ஒரு சரித்திர தொடர்ச்சியோடு கைக்கோளர் என்று வரை உள்ளோம் . ஒரு சில பாடல்களின் விளக்கமும் பிறகு பாடல்களும் பின்வருமாற:-
1)அப்பராந்தகச் சோழனுக்குப் போர்வீரர்களாயுள்ளவர்களு அச்செங்குந்த குலத்தினரே: குறுநிலமன்னர்களாய் ஆங்காங்கு அரசாட்சி புரிவோர்களும் அக்குலத்தவர்களே: பாண்டியனுக்கும் சோழனுக்கும் வேண் டிய காரியங்களைச் செய்பவர்களும் அக்குலத்தவர்களே: யாவராலும் மேன்மையாகக் கூறப்படுகின்ற முத்தமிழுணர்ந்த புலவர்களாயுள்ளவர்களும் அக்குலத் தவர்களே
2) உடைவாளேந்திப் பக்கத்தில் மெய்க்காப்பாளராயிருக்கும் உத்தமர்களும் அக்குலத்தவர்களே: கடைவாயிலும் முதல்வாயிலும் காவல் செய்வோரும் அக்குலத்தவர்களே: வரிசையாகக் கிராமாதிபதிகளாயுள்ளவர் களும் அக்குலத்தவர்களே: ஆடி+வகைகளுள்ளவர்களும் சைனியவகைகளுள்ள வர்களும் ஆயுதமேந்திய சைனியங்கட்குத் தலைவர்களாயுள்ளவர்களும் அக் குலத்தவர்களே
3) ஆனைவீரர்களும் குதிரைவீரர்களும் அக்குலத்தவர்களே: பெரு மையுடனே பகைவர்களை வெற்றிகொள்பவர்களும் அக்குலத்தவர்களே: தங்க ளரசனைப் பகைவரணுகாமற் காப்பாற்றிக் கொள்பவர்களும் அக்குலத்தவர் களே: மானமும் வீரமும் அமைந்துள்ளவர்களாய் வாழ்வோர்களும் அக்குலத் தவர்களே:
1)மன்னவனுக்கினிதானமைந்தர்களுமவர்குலத்தா
ரெந்நிலமுமரசாளுமிறைவர்களுமவர்குலத்தார்
தென்னனபயன்றொழில்கள் செய்பவருமவர்குலத்தார்
பன்னியுரை முத்தமிழின் பாவலருமவர்குலத்தார்.
2) உடைவாள் கொண்டருகிருக்குமுத்கமருமவர்குலத்தார் கடைவாயிலுள்வாயில்காப்பவரும வர்குலத்தா ரடைவாகக்காணிக்காரானவருமவர்குலத்தார்.
படையுடையார்களமுடையார்படைத்தலைவரவர்குலத்தார்.
3)ஆனையுடன் பரியேறுமவர்தாமுமவர்குலத்தார் மேன்மையுடனொன்னலரைவெல்பவருமவர்குலத்தார் கோனையிகலணுகாமற்கொள்பவருமவர்குலத்தார் மானமுடன் வீரமுடன் வாழ்பவருமவர்குலத்தார்.



