திருவண்ணாமலையும் - செங்குந்த கைக்கோள முதலியார் சமூகமும்
1. அண்ணாமலையார் கோவிலில் *கார்த்திகை தீபத்தின்* போது மலை தீபம் ஏற்றுவது தேவையான நெய் பொருட்களை கடலூர் மாவட்ட *முதனை (முதல் நெய்) கிராம செங்குந்த கைக்கோளர்* மக்கள் தான் தொன்று தொட்டு வழங்கி வருகின்றனர். முதலில் இங்கு இருந்து நெய் வருவதால் இந்த கிராமத்தை முதலில் நெய் என்று அழைத்தனர் பின்னாளில் முதனை என்று மருவியது.
2. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான #வீரபாகு நவவீரர்கள் வம்சத்தினருக்கு திருக்கார்த்திகை தீப பெருவிழா மூன்றாம் திருநாள் மண்டகப்படி மற்றும் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணி முதல் 6-00 மணி வரை அண்ணாமலையாருக்கு முதல் அபிஷேக ஆராதனை செங்குந்தர் குல பெருநிலக்கிழார் சாமி முதலியார் மற்றும் அருணகிரி முதலியார் குடும்பத்தின் மண்டகப்படி ஆகும். தான்ராஜ (ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல் மண்டகப்படி ஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும் அந்தக் குடும்பத்தின் அபிஷேக ஆராதனை நடந்த பிறகு உற்சவமூர்த்திகள் உலா வருகிறார்கள். மேலும் பல காலமாக கொடியேற்றம் செய்யும் உரிமை வீரபாகு நவ வீரர்கள் வம்சமான செங்குந்தர் மரபினருக்கே இருந்தனர்.
3. திருவண்ணாமலையார் கோவிலில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்கள் வம்சத்திரான செங்குந்தர் மரபினர் #கந்தசஷ்டி_சூரசம்ஹாரம் பெருவிழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்யும் மண்டகப்படி மற்றும் #மகாசிவராத்திரி தினத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜை மண்டகப்படி, வரும் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை விழா மண்டபத்தில் நடைபெறும். பெருநிலக்கிழாரான சாமிமுதலியார் குடும்பத்தினர் தொன்று தொட்டு பாரம்பரியமாக அண்ணாமலையாருக்கு இறைபணி செய்து வருகின்றனர் .
4.திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ஆனி பிரம்மோற்சவம் மற்றும் ஆடிப்பூரம் உற்சவம் மண்டகப்படிகளை செங்குந்தர் மரபினர் தொன்று தொட்டு வருகின்றனர். அதேபோல் சித்திரை வசந்த உற்சவம் 9 திருநாள் மண்டகப்படி செங்குந்தர் மரபினரே செய்து வருகின்றனர்.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் அறங்காவலர்களாக செங்குந்தர் சமூகம் சார்ந்த
இரா. அருணகிரி முதலியார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.
டி.எஸ். முத்துகுமாரசாமி முதலியார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர். திருவண்ணாமலை முன்னாள் நகர் மன்ற தலைவர்.
அ. நடராஜன்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர். அருணகிரி முதலியாரின் மகன்.
மு. சாமிராஜ் செங்குந்தர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர். முத்துகுமாரசாமி முதலியாரின் மகன்.
இரா. முத்துகுமாரசாமி முதலியார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.
5.திருவண்ணாமலை செங்குந்த கைக்கோளர் மரபில் தீவிர முருக பக்தரும், திருப்புகழ், கந்தர் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்கள் அருளிய தமிழ், வடமொழி புலமைபெற்ற முருகனடியார் #அருணகிரிநாதர் சுவாமிகள் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தில் பிறந்துள்ளார்.
6.அண்ணாமலையார் கிரிவலப்பாதையில் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்துக்கு தொன்மையான ஒரு மடமும், முருகன் கோவிலும் உள்ளது.
7. திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் செங்குந்தர் சமூகத்துக்கு ஒரு மண்டபம்,வணிக வளாகம், மூன்று சத்திரங்கள் உள்ளன. மேலும் கோவிலுக்கு அருகில் திமிரி தலைபாகரா கூட்டம் செங்குந்தர் பங்காளிகளுக்கு விழாவுக்கு ஒரு சத்திரமும், வாழைப்பந்தல் ஊர் செங்குந்தர் மரபினருக்கு ஒரு சத்திரமும் உள்ளது.
8. திருவண்ணாமலையில் முதன் முதலில் 150 வருடத்திற்கு முன்பு விக்டோரியா இந்து பள்ளி என்ற பெயரில் பள்ளிகூடம் மக்களுக்காக கட்டிக் கொடுத்தது செங்குந்தர் குல சாமிமுதலியார் அவர்கள் தான்.
9. திருவண்ணாமலையில் மருத்துவமனை முதலில் கட்டியது செங்குந்தர் குல பூதமங்கலம் ஜமீன்தார் குடும்பம்தான்.
10. திருவண்ணாமலையில் செங்குந்தர் சமூக மக்கள் தொகை பரவலாக உள்ளது. இந்த நகரில் அரசியல் செல்வாக்கு உள்ள பல செங்குந்தர் வாழ்த்து உள்ளனர்.
இங்கு செங்குந்தர் குலத்தைச் சேர்ந்த டி.எஸ். முத்துகுமாரசுவாமி முதலியார் - முன்னாள் நகர் மன்ற தலைவர் (பிரிட்டிஷ் காலம் முதல் முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன்) (திருவண்ணாமலை நகர தந்தை என்று அழைக்கப்படுபவர்) 2 முறை நகர்மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.
சு. முருகையன் முதலியார்.exMP.,exMLA, முன்னாள் நகர்மன்றத் தலைவராகவும்வாடா ஆற்காடு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து உலர்,
T.V. தேவராஜா முதலியார் மூன்று முறை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்(MLC), நகர்மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
தே. பட்டுசாமி முதலியார் - முன்னாள் எம்.பி மற்றும் ஒருமுறை நகர்மன்றத் தலைவராகவும்,
டி.எஸ்.சாமிநாத முதலியார் ஒரு முறை நகர்மன்ற தலைவராகவும்,
அ. இராமு முதலியார் முன்னாள் நகர்மன்ற தலைவர். - அதாவது திருவண்ணாமலை நகரில் அதிகமுறை நகர்மன்றத் தலைவர் சேர்மனாக வெற்றி பெற்றது செங்குந்த முதலியார் சமூகம் தான்..
11.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் (விளக்கடி கோயில் தோப்பு தெரு) செங்குந்தர் மரபினர் சார்பாக பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாவின் போது ஐந்தாம் நாள் பஞ்ச மூர்த்திகளுக்கு பூ மாலை செலுத்தப்பட்டு மண்டகப்படி நடக்கிறது.
12.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் பேய் கோபுரம் அருகே காஞ்சிபுரம் செங்குந்தர் மரபினரின் குட்டிவீடு மடம் அமைந்துள்ளது. (கொடியேற்றம் நிகழும் தினத்திலிருந்து திருவிழா நடைபெறும் 10 நாட்களுக்கு மதியம் மற்றும் இரவு என இருவேளை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி காலங்காலமாக பெருந்தொண்டு செய்து வருகின்றனர்)
13.அண்ணாமலையாருக்கு வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி செங்குந்தர் மரபினர் திருக்குடை வழங்குகின்றனர்.
14.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நாயனார் மற்றும் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா மண்டகப்படி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சார்ந்த செங்குந்தர் மரபினரால் நடைபெற்று வருகின்றது.
15. திருவண்ணாமலை அண்ணாமலையார் & பரிவார தெய்வங்கள்,உற்சவர் மூர்த்திகளுக்கு தொன்று தொட்டு சுவாமியை சுமந்து செல்லும் சீர்பாத சேவையை செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் சேர்ந்தவர்களும் தொன்று தொட்டு செய்து வருகின்றனர்
16. சோழன் பூர்வ பட்டயம் ஆவணத்தில் திருவண்ணாமலை கோயில் மணியம் கணக்கராக செங்குந்த கைக்கோளரில் அருணாசல முதலியை நியமித்தனர்.
17. திருவண்ணாமலை செங்குந்தர் குல அழகானந்த ஞான தேசிகர் சித்தர் வாழ்ந்த ஊர்
திருவண்ணாமலை நகரில் செங்குந்த முதலியார்கள் பூர்வீகமாக வாழும் பகுதிகள்: திரு வூடல் தெரு, ஆனைக் கட்டித் தெரு, அசலியம்மன்கோயில் தெரு, சிவன்படத்தெரு, கொச மடத்தெரு, சென்னப்ப நாய்க்கன்தெரு, சேடத் தெரு, கனகராய முதலி தெரு.
மேலும் திருவண்ணாமலை செங்குந்தர் மக்கள் மடம் கோவில் சத்திரங்கள் மற்றும் அண்ணாமலையார் கோவிலில் நமக்கு உள்ள உரிமைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 78269 80901 வாட்ஸ்அப் எண்ணுக்கு விடுபட்டுள்ள தகவலை அனுப்பவும்








