ஏகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார் exMLA

0

 செங்குந்தர் கைக்கோள முதலியார்                குலத்தோன்றல்

மக்கள் சேவகர், சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கெல்லை போராட்டத்தை தீவிரப்படுத்தி திருத்தணி பள்ளிப்பட்டு தொகுதிகளை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற காரணமானவர், திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

ஏகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார்




(31.08.1928 - 02.07.1999)

பிறப்பு 

இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் மரபு எச்சான் கோத்திரம் ங்காளிகளை சேர்ந்தார் பெரும் செல்வந்தர் பெருநிலக்கிழார் ஜவுளி வர்த்தகர் எகிரி சஞ்சீவி முதலியாருக்கு மகனாக 31.08.1928 இல் பிறந்தார்.

வெறும் ஆறாம் வகுப்பு வரை மற்றும் பயின்ற இவர், கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர், நூலக ஆணைய மாவட்ட தலைவர், ஆல் இந்தியா ஹண்ட்லூம் ஹவுஸ் இயக்குனர், பேரூராட்சி தலைவர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்று பல பதவிகளை வகித்தார்.  

இவர் சிறுவயது முதலே சமூக சேவை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என ஆறு வாரிசுகள்.


வாழ்க்கை

தனது இளமை முதலே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர். தெலுங்கு ஆந்திரா பகுதியில் மாட்டிக்கொண்ட திருத்தணி பள்ளிப்பட்டு மக்களுக்கு அரணாக வாழ்ந்தவர்.

25 ஆண்டுகள் பொதட்டூர் பேட்டை நகரப் பஞ்சாயத்தின் தலைவராக பதவி வகித்தவர்.
பல கூட்டுறவுச் சங்கங் களில் பனியாற்றியவர்.

1947-ம் ஆண்டு முதல் 6-3-1971 வரை, கோ ஆப் டெக்ஸ் என்று அழைக்கப்படும் மாநில கைத்தறி நெசவாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்.
தமிழக ஆந்திர எல்லை பிரிக்கும்போது பள்ளிப்பட்டு திருத்தணி தொகுதிகள் ஆந்திராகுல் சேர்க்கப்பட்டது மேலும். 

1952ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் திருத்தணி தொகுதியில் தமிழர்களை வேட்பாளராக நிறுத்தாமல் தெலுங்கர்களை வேட்பாளராக நிறுத்தியது ES. தியாகராஜன் முதலியார் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெறும் 3 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அதே தேர்தலில் இவரின் உறவினர் எஸ் ரங்கநாதன் முதலியாரை பள்ளிப்பட்டு ஆர்கே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வைத்து தீவிர பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தார் தியாகராஜ முதலியார்.

பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தொகுதிகளை தமிழகத்திற்குள் இணைக்க வடக்கு எல்லைப் போராட்டம் என்று போராட்டங்களை ஆரம்பித்தது இவரின் தந்தை  சஞ்சீவி முதலியார்

இவர் தந்தை ஆரம்பித்த போராட்டத்தை பொதட்டூர்பேட்டை சகோதரர்கள் என்று அழைக்கப்படும் தியாகராஜ முதலியார் மற்றும் இவரின் அண்ணன் சுப்பிரமணிய முதலியார் தீவிரப்படுத்தி தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சனையை பரவச் செய்து தமிழின போராட்டமாக மாற்றி மங்கலங்கிழார் மாபொசி உள்ளிட்ட தமிழக தலைவர்களையும் இந்த போராட்டத்திறகு கொண்டு வந்து திருத்தணி பள்ளிப்பட்டு தாலுகாக்களை தமிழகத்துடன் வெற்றிகரமாக இணைத்தனர்.

மா பொ சிவஞானம் உருவாக்கிய தமிழ் குடியரசு கட்சியை வளர்த்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. எழுபதுகளில் இந்த கட்சி மிகவும் செல்வாக்கு பெற்ற தாய் இருந்தது.

1962 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு வெறும் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருத்தணி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏகாம்பர ரெட்டியை  விட இரண்டு மடங்கு அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி வெற்றி பெற்றார்.

இவர் செங்குந்தர் சமூகம் நடத்திய பல மாநாடுகளில் பங்குபெற்று சமுதாய வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.









1962ஆம் ஆண்டில் வாரியர் சுவாமிகளுடன் தியாகராஜன் முதலியார் மற்றும் அவரின் அண்ணன் சுப்பிரமணிய முதலியார்

இவர் குடும்பம் நடத்திய கூட்டத்தில் பொதட்டூர்பேட்டை கிராம மக்கள்

பொதட்டூர்பேட்டை மக்களுக்கு அடிப்படை சேவைகளை செய்த இவரின் தந்தை (5-5-1987)- (10-10-1943)

குடியாத்தம் திருமகள் மில் தலைவராக பணியாற்றி நெசவாளர்களுக்கு தேவையான நூல்களை அனுப்பினார். பதட்டூர்பேட்டை மக்கள் கல்வியறிவு பெற காரணமாக இருந்தவர்

அண்ணன் மகனுடன் தியாகராஜ முதலியார்













இவரின் 
கோத்திரம் பெயர்: எச்சான் கூட்டம் 

குலதெய்வம்: தொண்டைமாநாடு எல்லை அம்மன் மற்றும் திருத்தணி முருகன் 

குலகுரு: கட்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம் காஞ்சிபுரம்

Post a Comment

0Comments
Post a Comment (0)