செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத் தோன்றல்⚜️
14ஆம் நூற்றாண்டில் தமிழை வளர்த்த
காங்கேயர் முதலியார்
காங்கேயர் முதலியார்: 14-ம் நூற்றாண்டில் வாழந்த சைவ சமயத்தைச் சேர்ந்த புலவராவார்.பிறப்பு
இவர் தொண்டை மண்டலம் (வட தமிழகத்தில் காஞ்சீபுரம் சுற்றியுள்ள பகுதிகள்) ஓர் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினில் பிறந்தவர்.
தமிழ் தொண்டு:
தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய 'உரிச்சொல் நிகண்டு', மிகவும் பிரபலமான அகராதி(lexicon) ஆகும். இது ஆண்டிப்புலவர் எழுதிய 'ஆசிரிய நிகண்டுவில்' குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 1840-ம் ஆண்டு 220 பாடல்களுடன் மட்டும் பாண்டிச்சேரியில் பதிப்பிக்கப்பட்டது, பின்னர் 1858-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பதிப்பில் 330 பாடல்கள் உள்ளது.
வெண்பா அளவீடுகளைக் கொண்டு எளிதில் புரிந்துகொள்ளமாறு எழுதப்பட்டுள்ள இந்நூல் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.